Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன், கண்காணித்தும் வருகின்றது. இது தொடர்பான பதில் கருத்தை வழமையான அறிக்கையில் வெளியிடவுள்ளோம் எனக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றி அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்கில் வன்னிப் பகுதியையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

சமாதானத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையெனக் கூறியிருக்கும் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறெந்தத் தெரிவும் கிடையாதெனக் கூறியுள்ளார்.

பலமாக இருக்கும் போதே விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதே சிறந்தது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்டுள்ள நிலையில் பேச்சுக்கு வருவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறந்தத் தெரிவும் இல்லை. அல்லது தேசிய பாதுகாப்பைக் கருதி நாங்கள் வடக்கையும் அவர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலை தோன்றும் என அமைச்சர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என வரும் போர்நிறுத்த உடன்படிக்கை மீறப்படுகின்றது என இலங்கைக் கண்காணிப்புக் குழுவினர் கூறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

- சங்கதி

போர் நிறுத்த ஆய்வாளர் என்னும் நிலைக்கு கண்காணிப்பு குழு பதவி உயர்ந்து உள்ளது...

போர் நிறுத்த ஆய்வாளர் என்னும் நிலைக்கு கண்காணிப்பு குழு பதவி உயர்ந்து உள்ளது...

:D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆராய்ந்துபோட்டு சும்மா இருக்கப்போறோம். அதெற்கெதிராக ஒரு அறிக்கையும் விடமாட்டோம். பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு திடிரெண்டு நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக இரண்டு அறிக்கை விடுவோம்.." இந்த விடயம் செய்தியில் இருந்து அகற்றப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.. :P :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்குது அங்கை :D இப்பவும் போ.நி.க. குழு இருக்குதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடன்பாட்டின் நோக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி கோத்தபாய கருத்துக் குறித்து கண்காணிப்புக்குழு கவலை

போர்நிறுத்த உடன்பாட்டில் சம்பந்தப் பட்டுள்ள தரப்புகள் அரசாங்கமும், விடு தலைப் புலிகளும் சமீப காலமாக வெளி யிட்டுவரும் கருத்துகள் அந்த உடன்பாட் டின் நன்நோக்கங்களை சீர்குலைப்பவை யாக அல்லது அதன் நல்லுணர்வை பாதிப் பவையாக அமைந்துள்ளன என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவலை தெரி வித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வார இறுதியில், கிழக்கைப் போன்று வெகுவிரைவில் வன்னியையும் புலிகளிடம் இருந்து மீட்போம் என தெரிவித்த கருத்தை அடுத்தே கண்காணிப்புக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுகளுக்கு அரசாங்கத்தின் கதவுகள் எப்பொழுதும் திறந்து இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தடவைகளிலும் கூறிவந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வன்னிப் பிரதேசத்தின் மீதும் இராணுவத் தாக்குதலை நடத்தவிருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்களை கண்காணிப்புக் குழு அவதானித்து வருவதாகவும் இவை பற்றிய தனது கருத்துக்களை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பி வருவதாகவும் வழமையான அறிக்கையில் விமர்சித்து வருவதாகவும் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரேதப் பெட்டிகளை ஏற்றி இறக்க

பழைய விமானங்களை வாங்குவதா?

கோதாபாய ராஜபக்ஷவின் கருத்துக் குறித்து ஐ.தே.க பிரமுகர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

மிக் 27 போன்ற பழைய விமானங் களைக் கொள்வனவு செய்வதற்கான எதிர்கால முயற்சிகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு கபட நோக்கம் இதில் இருக்கலாம்.

பாதுகாப்புச் செயலாளரின் கருத்து ஆச்சரியமளிப்பதாக இருக்கின்றது. ஏனென்றால் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ இரகசிய தகவல்களை அனுப்பி இருப்பதாக நாம் அறிய வந்துள்ளோம்.

வழமைபோலவே இந்த அரசாங்கம் தான் என்ன செய்கின்றது என்பது அதற்கே தெரியாமல் இருக்கின்றது. ஒருவேளை பிரேதப் பெட்டிகளை ஏற்றி இறக்குவதற்குத் தேவையான 25 வருடம் பழமையான விமானங்களைக் கொள்வனவு செய்யும் நோக்கமும் இருக் கலாம் என்று கூறினார்.

அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் இறுதித் தீர்வுத் திட்டமொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி முயன்று கொண்டிருக்கும் இந்த வேளையில், பாதுகாப்புத்து றைச் செயலாளர் வன்னிப் பிரதேசத்தையும் கைப்பற்றியே தீருவோம் என்று கருத்து வெளியிட்டிருப்பது குழப்பகரமாக இருக்கின்றது என்று கிரியெல்ல கூறினார்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.