Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன்

1-12.jpg

இலங்கை நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு கலந்து கொண்ட பேரணியல் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் “பல மனித உரிமைகளுக்கு பேர் போன நாடுதான் இலங்கை 1948 ம் ஆண்டில் இருந்து மனித உரிமை மீறல் பெருமளவு நடந்தது பெரும்பான்மை மக்களால் எங்கள் சமூகத்திற்கு எதிராகதான் நடந்தது பல இடங்களில் பலர் சொல்லுவார்கள் இது தமிழர்களுக்கான பிரச்சனை மட்டும் என இவ்வாறான கருத்துக்கள் வருவதற்குhன காரணம் பல மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்தது

கோட்டா கோ கம என்று எல்லாம் தெற்கிலே பெரும்பான்மை சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களிலே பாதுகாப்பு படையினர் அந்த போராட்டகார்ர் மீது வன்முறையில் ஈடுபட்டபோது நாடு முழுதும் பொங்கி எழுந்தது அப்போது அவர்களுக்கு அன்றும் சொன்னோம் இன்றும் சொல்லுகின்றேன் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் சர்வ சாதாரணமாக நடக்கும் விடையம் தான் நீங்கள் குறிப்பிட்ட நாள் பார்த்திருந்தவை.

இந்த மனித உரிமை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரைக்கும் இந்த நாட்டிற்கு எந்தொவொரு எதிர்காலமும் இல்லை மனிதனுக்கே மதிப்பில்லை என்றால் அவ்வாறான நாடு எவ்வாறு ஒரு ஜனநாயக வழியிலே பொருளாதார வழியில் அபிவிருத்தியடைய முடியும் என பெரும்பான்மை சமூகம் உணரவேண்டும்

சிலர் நினைக்கலாம் தமிழர்களுக்கு அடித்து அடித்து அவர்கள் கழைத்து விட்டார்கள் என நினைக்கின்றனா.; ஆனால் நாங்கள் எவ்வளவு அடித்தாலும் எவ்வளவு கொடுமை செய்தாலும் களைத்து போகமாட்டோம் எங்களது அரசியல் உரிமைக்காகவும் மக்களுடைய மனித உரிமை மீறல்களுக்கான நீதி கிடைக்கும் வரைக்கும் எத்தனை தலைமுறை எடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரா போராடவில்லை நாங்கள் போராடுவது சிங்கள மக்களால் தெரிவு செய்த அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுவது எஙகளடைய மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதிவேண்டும் எனவும் இந்த நாட்டில் சமத்துவமான அரசியல் உரிமை வேண்டும் போராடுகின்றோமே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=232499

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் இப்படித்தான் சொன்னார் ஆனால் சிங்கள மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று சாணக்கிய ராகுல சாணக்கியருக்கு தெரியாது தெரியாது

வயசு பத்தாது பச்சாவுகக்கு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவரும் இப்படித்தான் சொன்னார் ஆனால் சிங்கள மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று சாணக்கிய ராகுல சாணக்கியருக்கு தெரியாது தெரியாது

வயசு பத்தாது பச்சாவுகக்கு

இவர் எப்படிச் சிஙள மக்களுக்கு எதிரியாவார்

சிங்களத்தால் களம் இறக்கப்பட்ட சுமந்திரனை தமிழர் அடையாளம் கண்டு துரோகி எனும்போது இப்போது இவரைச் சிங்களம் இறக்கிவிடுகிறது தமிழரின் தானைத்தலைவர் எனச்சொல்லுமளவுக்கு இவருக்கு எதிராக சிங்களம் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து இன்னுமொரு சுமந்திரனைத் தமிழர்க்குள் ஊடுருவிவிட ஆயத்தம் செய்கிறது இரண்டு நாளுக்கு முன்பு இவருக்கு எதிராக சிங்களவர் செய்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியே இதுதான் 

மகிந்த தமிழரை படுகொலை செய்த இரத்தைக்கைகள் நாறிக்கிடக்கும்போது அவருடனேயே இருந்து பிள்ளையானுடன் தனது பங்குக்கு கொலைக்களமாடிவிட்டு பின்பு வ்ஜாளேந்திரன் வெளியேறியதும் அவரது இடத்தை நிரப்பி அடுத்த சுமந்திரனாக மாறுபவர் இவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.