Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் குடைசாய்ந்தது திருகோணமலையிலிருந்து யாழ் சென்ற பஸ் : ஒருவர் பலி, பலர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பளை முள்ளியடிபகுதியில் ஏ - 9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டுள்ளது.

இதன் போது பஸ்ஸில் பயணித்த ஒருவர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு  நோயாளர் காவு வண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே ஒரு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  பேரூந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் குடைசாய்ந்தது திருகோணமலையிலிருந்து யாழ் சென்ற பஸ்  : ஒருவர் பலி, பலர் காயம் | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

போன மாதம் பேருந்து விபத்தில் பலர் சாகும் போது…
இனி பேருந்துகளை குறிப்பிட்ட இடத்தில் மறித்து சோதனை இட்டு,
சாரதிகளின் பயண நேரத்தை கண்காணிக்கப் போகின்றோம் என்று சொன்னார்கள்.
அடுத்த விபத்தில், இன்னுமொரு உயிரும் பலியாகி விட்டது.
எல்லாம்… வாய்ப் பேச்சு போலை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இ.போ.சபை மரண ஓட்டம் தான் ஓடுறாங்கள்.  பொலிஸ் எங்க நிற்கும் என்று சாரதிகளுக்கு தெரியும். தவிர எதிர்வரும் வாகனங்கள் லைட்டை நூத்தி காட்டி பொலிஸின் பிரசன்னத்தை சமிக்ஞை செய்கின்றார்கள். கடவுளிடம் பாரத்தை கொடுத்துவிட்டு இ.போ.ச பேருந்தில் உட்காரவேண்டியதுதான்.  70 கிலோமீற்றர் மணித்தியாலத்துக்கு வேகத்தை 90, 100 இல் இலகுவாக செல்லும் வண்டிகள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2022 at 21:26, தமிழ் சிறி said:

போன மாதம் பேருந்து விபத்தில் பலர் சாகும் போது…
இனி பேருந்துகளை குறிப்பிட்ட இடத்தில் மறித்து சோதனை இட்டு,
சாரதிகளின் பயண நேரத்தை கண்காணிக்கப் போகின்றோம் என்று சொன்னார்கள்.
அடுத்த விபத்தில், இன்னுமொரு உயிரும் பலியாகி விட்டது.
எல்லாம்… வாய்ப் பேச்சு போலை இருக்கு

 

On 22/12/2022 at 00:06, நியாயத்தை கதைப்போம் said:

இ.போ.சபை மரண ஓட்டம் தான் ஓடுறாங்கள்.  பொலிஸ் எங்க நிற்கும் என்று சாரதிகளுக்கு தெரியும். தவிர எதிர்வரும் வாகனங்கள் லைட்டை நூத்தி காட்டி பொலிஸின் பிரசன்னத்தை சமிக்ஞை செய்கின்றார்கள். கடவுளிடம் பாரத்தை கொடுத்துவிட்டு இ.போ.ச பேருந்தில் உட்காரவேண்டியதுதான்.  70 கிலோமீற்றர் மணித்தியாலத்துக்கு வேகத்தை 90, 100 இல் இலகுவாக செல்லும் வண்டிகள்.  

ஒரு சிறுவனுக்கு முழங்கையோட கை துண்டிக்கப்பட்டுவிட்டது.
இவங்களை யார் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை, ஒரு சாரதியை நம்பி 50-100 பயணிகள் பயணிக்கையில் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது சாரதியின் கடமையல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

ஒரு சிறுவனுக்கு முழங்கையோட கை துண்டிக்கப்பட்டுவிட்டது.
இவங்களை யார் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை, ஒரு சாரதியை நம்பி 50-100 பயணிகள் பயணிக்கையில் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது சாரதியின் கடமையல்லவா?

Lenk- und Ruhezeiten (Beispielaufgabe) - YouTube

Lenk- und Ruhezeiten für Lkw- und Pkw-Fahrer

ஏராளன், சாரதிகளும்... பஸ் முதலாளிகளின் கீழ்தான் வேலை செய்கின்றனர்.
முதலாளிகள், விரைவில்  பணம் சம்பாதிப்பதற்காக...  
குறைந்த வேலை ஆட்களை வைத்து, அவர்களுக்கு ஒய்வு கொடுக்காமல் 
வேலை வாங்கும் போது... விபத்து ஏற்பட்டு விடுகின்றது.

இங்கு.... பார ஊர்தி ஓட்டுனர்கள் 11 மணித்தியாலத்துக்கு மேல் ஓடவே முடியாது.
அந்த 11 மணித்தியாலத்துக்குள்ளும், குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்குள் 
கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். இதனை கண்காணிக்க 
பார ஊர்தியிலேயே கண்காணிப்பு பொறி முறை உள்ளது.
அதனை இடைக்கிடை பொலிஸார் கண்காணிப்பர்.

சென்ற மாதம் நடந்த தவறையும்... பொலிஸாருக்கு, அந்தக் கண்காணிப்பு பொறிமுறை காட்டிக் கொடுத்துவிடும் என்பதால், இங்கு மிக அவதானமாகவே இருப்பர். 

அதனால்... தூரப்  பிரயாணங்களுக்கு, எப்படியும் இரண்டு சாரதிகள் இருந்து 
ஓடுவதால் விபத்துக்கள் இங்கு குறைவு. 

அதனை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த... பலரின் கூட்டு முயற்சி தேவை.
முக்கியமாக சட்டம், பாரபட்சம் இல்லாமல்  இறுக்கமாக கடைப் பிடிக்கப் பட வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்களுக்கு electronic tag பொருத்துவதுதான் ஒரே தீர்வு.

ஒரு தரம் வேகத்தை மீறினாலும் மாச சம்பளத்தில் 50% எடுத்து விட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.