Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் மீண்டும் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது.

அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்‌ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, கடந்த சர்வகட்சி மாநாட்டில் பேசப்பட்ட தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் சம்பந்தமாக மீளவும் கவனம் செலுத்தப்பட்டது. 

குறிப்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுப்பதற்கு முன்னதாக அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும்  2 ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெறும் போது அதில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பபேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடல் தொடர்பில் நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கும் இதன்போது அரசாங்கத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனவரி மாதம் 10, 11,12,13, ஆம் திகதிகளில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சம்பந்தன், அரசியல் கைதிகள் ஐவரை மட்டும் விடுவித்தால் போதாது முழு அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். முழுமையான காணி விடுவிப்பும் அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் மீண்டும் பேச்சு : முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய்வு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் ஏமாத்துதல் பொய் வாக்குறுதி முடிவில் சாதாரண தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை இதையெல்லாம் செய்தி என்று வீர கேசரி போடுது பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை என்னப்பா நடக்குது..காற்றும் புகையும் கறுக்குது..இதை திருத்த வந்தவர்..சம் சும்மை சந்திக்கிறார்..பின்னேரம் இந்த இரண்டும் ..நரிக்கூட்டத்தோடை  சந்திக்கினம் ..அவை பொங்கல் பரிசு குடுக்கினமாம்...அதுவும் 5 அரசியல் கைதிகள் விடுவிப்பு.. அரசியல் தீர்வு நோ மூச்..வடக்கு கிழக்கு இ ணைப்பு.. நோ மூச்..காணீ விடுவிப்பு.. ஆமிவிட்டால்..அடுத்த ஒரு பகுதிக்கு (இசுலாம் )பிளாஸ்திரி  ஒட்டு.

எம்மடை சனத்தை குழப்பி சண்டை உண்டாக்கிவிட்டு..சர்வதேசத்திடம் . பேச்சை குழப்பிவிட்டார்கள்...காசைதாருங்கோ  என்பினம்...அப்படி இல்லாமல் தமிழினம் இறுக்கிப் பிடித்தால்..சோனியின் பிளாஸ்தரை கழ்ட்டிவிட்டு ..குலையுங்கோ என்பினம்..இதைப்பார்த்து..சிங்களம் மூலையில் குந்தியிருந்து சிரிப்பினம்..  அதுசரி தமிழினத் தரப்பு சம் சும் மட்டும்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

அரசியல் கைதிகள் விடுவிப்பு.

இது ஒன்றே தமிழரின் பிரச்சனை, அவர்களை விடுவித்தவுடன் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது நாட்டில் தமிழருக்கென்று பிரச்சனையில்லை, இப்போது கடன் கொடுங்கள் என்று நம்ம தலைவர்களும், சிங்களமும் சேர்ந்து கை நீட்டப்போகினம் பாருங்கோ! இதற்காகவே சில பிரச்சனைகளை தீர்க்காமல் இழுத்துப்பிடிக்கிறது சிங்களம். அப்பப்போ இதுகளை விடுவித்து சர்வதேசத்தை ஏமாற்றி   தப்பிக்கொள்வதற்காக. மக்களை ஏமாற்ற எங்கள் தலை ஆட்டிகள் பக்கத்துணை. கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு இராணுவ வெளியேற்றம், பதின்மூன்றாம் சட்டத்திருத்தம், விகாரை அமைப்பு எல்லாவற்றையும்ஒரே முறையில் தீருங்கள் என்று இறுக்கவேண்டும்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.