Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

wikky-750x375.jpg

கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைக்குள், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக கொண்டுவர முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்திய தரப்பில் மத்தியஸ்தர் ஒருவரை அழைத்துவர நேரும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1317013

  • கருத்துக்கள உறவுகள்

 

 ஜனாதிபதியிடம் இருந்து விக்னேஸ்வரனுக்கு கடிதம்!

ஜனாதிபதியிடம் இருந்து விக்னேஸ்வரனுக்கு கடிதம்!

இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 21 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. 

இந்த சந்திப்பு தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம், சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக, குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்த சந்திப்பினை ஒத்திவைக்கக்கோரி சீ.வி. விக்னேஷ்வரனினால் கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த போதும், திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றிருந்தது. 

சீ. வி. விக்னேஸ்வரனுக்கு பதில் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ள ஜனாதிபதி செயலகம், இந்த சந்திப்பு உத்தியோகப்பூர்வமானது இல்லை எனவும், எதிர்காலத்தில் அடுத்த சந்திப்புக்கான ஒழுங்கு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக, சீ. வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=169021

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம், சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

எங்கை ஒரு சம்பவமும் நடக்கவில்லையே... 
சுமந்திரன் திருந்தி விட்டாரக்கும் என நினைத்தேன்.
திருந்த... சான்ஸே இல்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம், சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக, குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இரகசியமாக ரொக்கம் வாங்க நினைத்திருப்பார், வெட்கங்கெட்ட மனிதன்! இரகசியமாக சந்திப்புகளை ஏற்படுத்தி கட்டுக்கதைகளை உருவாக்குவது, போட்டுக்கொடுப்பது, தன்னை மாத்திரம் முன்னிலைப்படுத்துவது, தமிழர் பிரச்சனையை மலினப்படுத்துவது இதையெல்லாம் உள்வாங்கிய சம்பந்தர் தனது அயோக்யத்தனங்களை இதற்குப்பின்னால் மறைத்துக்கொள்கிறார். கட்சிக்குள் பேசி ஒத்துப்போக முடியவில்லை, அதற்குள் நடக்கும் சர்வாதிகாரம் தெரியவில்லை, தடுக்க முடியவில்லை தமிழருக்கு தீர்வு வாங்கித்தரப்போகிறார், காத்திருங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

சந்திப்பை தனிப்பட்ட முறையில் நடத்திவிட்டு இப்போது புதிய புதிய காரணங்களைச் சொல்லி சமாளிப்பது. பேச்சுவார்ததையில் கலந்து கொள்வோருக்கு இடையில் ஒருமித்த கருத்துகள் இல்லை என்பதைக் காட்டுகிறது.. பாராளுமன்றத்துக்கே போக முடியாத சம்பந்தர் சுமத்திரனுடன் சேர்ந்து குறுக்குச்சால் ஓட்டுவது. சுமத்திரன் கட்சிக்குள் தன்னை முன்னிலைப்படுத்தும் செயற்பாடாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

சந்திப்பை தனிப்பட்ட முறையில் நடத்திவிட்டு இப்போது புதிய புதிய காரணங்களைச் சொல்லி சமாளிப்பது. பேச்சுவார்ததையில் கலந்து கொள்வோருக்கு இடையில் ஒருமித்த கருத்துகள் இல்லை என்பதைக் காட்டுகிறது.. பாராளுமன்றத்துக்கே போக முடியாத சம்பந்தர் சுமத்திரனுடன் சேர்ந்து குறுக்குச்சால் ஓட்டுவது. சுமத்திரன் கட்சிக்குள் தன்னை முன்னிலைப்படுத்தும் செயற்பாடாகும்.

புலவர்..... ஆரம்பத்தில், தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்க சுமந்திரன் அழைப்பு விடுத்த போது... ஒருவருமே கலந்து கொள்ளவில்லை. மாறாக மாவையும், சுமந்திரனும், சம்பந்தனும் தான் இருந்தார்கள்.   

பின்... வேறொரு தினத்தில் கூட்டம் வைக்க மாவை, சிரமப் பட்டு  அழைத்த போதுதான் 
மற்றைய கட்சித் தலைவர்கள் வந்தார்கள். 

இப்படி கஸ்ரப் பட்டு... கஜேந்திரகுமாரை தவிர, மற்றையவர்களை அழைத்த ஒன்றாக்கிய பின்... இந்தச் சுமந்திரன் தான்... ஒரு ஆள் என்று குறுக்குசால் ஓடி காரியத்தை கெடுக்கப் பார்ப்பது இனி இல்லை நயவஞ்சகத்தனம். இந்த ஆளை... கட்சிக்குள் வைத்துக் கொண்டு ஒரு அலுவலும்  பார்க்க முடியாது. என்ன யோசனையில் குழப்பிக் கொண்டு இருக்கின்றார் என்று புரியவில்லை. ஆளைப் பிடித்து வெளியில் அனுப்பினால்தான் தான் தமிழ் மக்களுக்கு நிம்மதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.