Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி தலதா மாளிகை! மேர்வின் சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது.

போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து  சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி தலதா மாளிகை! மேர்வின் சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை | Fake Thalada House Urgent Order The President

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குறித்த விகாரை பகுதிக்கு சென்றுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி தலதா மாளிகை! மேர்வின் சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை | Fake Thalada House Urgent Order The President

இதன்போது குருநாகல், பொதுஹெர அஹுகுடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விகாரையை நாளை (08) உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதி என்ற நபர் அதனை அகற்றுவதற்கு இணங்கியுள்ளார்.

தலதா மாளிகையைப் பின்பற்றி கட்டப்பட்ட பகுதியை இரண்டு வாரங்களுக்குள் இடித்துவிட்டு வித்தியாசமான முறையில் கட்டுமாறும், கீழ்ப்படியவில்லை என்றால், இப்போதே இதனை உடைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் நடத்தப்படும் தேவாலயத்திற்கு சில ஆதரவை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

 

https://tamilwin.com/article/fake-thalada-house-urgent-order-the-president-1673126679

நிர்வாகம் தயவு செய்து சிரிப்பு பகுதிக்கு இந்த திரியை மாத்தி விடவும் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குறித்த விகாரை பகுதிக்கு சென்றுள்ளார்.

எந்த அதிகாரத்தில் இவர் இதை செய்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த-சிங்கள மகாவம்ச மனோநிலையின் ஏக போக உரிமையை தமக்குள் கூட, ஒரு இம்மியளவு கூட விட்டுகொடுக்க இவர்கள் தயாரில்லை என்பதை இது காட்டுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மேர்வின் டீ சில்வா, எந்த மதத்தவர் என்று குழப்பம் உள்ளதே.

இவர் பௌத்தமதம் குறித்து இந்த வேலையை செய்வதாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, முன்னேஸ்வர ஆலய காளி கோவிலிலும், பலியிட கொண்டு போன ஆடுகளை அவ்வாறு செய்யக்கூடாது என்று, தனது வாகனத்தில் கடத்திக்கொண்டு போனார். 

வேறென்ன, கொண்டு போய் திண்டு இருப்பார்.

பின்னர், அவரது வீட்டுக்கு அண்மையில் பெருமாள் கோவில் ஒன்றையும் அமைப்பதாக, காணொளியில் காண்பித்தார்.

இடையே, துட்டகெமுனு போல யானையில் ஏறி, ஒரு படத்தில் நடித்திருந்தார் என்று நினைவு.

மேலும், இவர், ராஜபக்சேக்களின் அடிப்பொடியாக இருந்த போது, ரணில் தந்தை ஆகவில்லை என்பதை குறித்து மோசமாக சொல்லி, தான் உதவ தயார் என்று பகிரங்கமாக சொன்னவர்.

நரி அதனை காமெடியா எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பார்.

இவர் மேலே பேசும்போதும், அவரை ஒரு காமெடியனாகவே பார்த்து சிரிக்கிறார்கள்.

மொத்தத்தில் இவர் ஒரு குழப்பவாதி காமெடியன்.🤦‍♂️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், இவர் ஒரு கோமாளி! ஒருதடவை ஒரு ஆசிரியர் என நினைக்கிறன் அவரை கட்டிவைத்து அடித்தார், இலங்கையின் மனித உரிமை மீறலைப்பற்றி முன்னாள் மனித உரிமைகள் அமைப்பாளர் விமர்சித்தபோது  நவநீதம் பிள்ளைக்கு கலியாணம் செய்துவைக்க நான் தயார் என்றவர், அதன் பின் ராஜ பக்சக்களை கடுமையாக  விமர்சித்தவர் சொல்லப்போனால் வடக்கின் வசந்தம் போன்று தெற்கிற்கு ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த மேர்வின் டீ சில்வா, எந்த மதத்தவர் என்று குழப்பம் உள்ளதே.

இவர் பௌத்தமதம் குறித்து இந்த வேலையை செய்வதாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, முன்னேஸ்வர ஆலய காளி கோவிலிலும், பலியிட கொண்டு போன ஆடுகளை அவ்வாறு செய்யக்கூடாது என்று, தனது வாகனத்தில் கடத்திக்கொண்டு போனார். 

வேறென்ன, கொண்டு போய் திண்டு இருப்பார்.

பின்னர், அவரது வீட்டுக்கு அண்மையில் பெருமாள் கோவில் ஒன்றையும் அமைப்பதாக, காணொளியில் காண்பித்தார்.

இடையே, துட்டகெமுனு போல யானையில் ஏறி, ஒரு படத்தில் நடித்திருந்தார் என்று நினைவு.

மேலும், இவர், ராஜபக்சேக்களின் அடிப்பொடியாக இருந்த போது, ரணில் தந்தை ஆகவில்லை என்பதை குறித்து மோசமாக சொல்லி, தான் உதவ தயார் என்று பகிரங்கமாக சொன்னவர்.

நரி அதனை காமெடியா எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பார்.

இவர் மேலே பேசும்போதும், அவரை ஒரு காமெடியனாகவே பார்த்து சிரிக்கிறார்கள்.

மொத்தத்தில் இவர் ஒரு குழப்பவாதி காமெடியன்.🤦‍♂️

காரிய விசரன்

3 hours ago, satan said:

உண்மைதான், இவர் ஒரு கோமாளி! ஒருதடவை ஒரு ஆசிரியர் என நினைக்கிறன் அவரை கட்டிவைத்து அடித்தார், இலங்கையின் மனித உரிமை மீறலைப்பற்றி முன்னாள் மனித உரிமைகள் அமைப்பாளர் விமர்சித்தபோது  நவநீதம் பிள்ளைக்கு கலியாணம் செய்துவைக்க நான் தயார் என்றவர், அதன் பின் ராஜ பக்சக்களை கடுமையாக  விமர்சித்தவர் சொல்லப்போனால் வடக்கின் வசந்தம் போன்று தெற்கிற்கு ஒன்று. 

 

  • கருத்துக்கள உறவுகள்

மொக்குப்பயல்..... வடக்கு, கிழக்கு பக்கத்தில புத்தர் அவ்விடம் வந்தவர் எண்டு கனவிலை வந்து சொன்னவர் எண்டு கதை விட்டு, கட்ட வெளிக்கிட்டு இருந்தால்,  முதுகில தட்டி, காசையும் அள்ளிக் கொடுத்திருப்பாங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.