Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்துமீறும் மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரும்புப் படகு - யாழில் அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

அத்துமீறும் மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

IMG-20230113-WA0069.jpg

அத்துமீறும் இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றையதினம் (13) போராட்டத்தினை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரினை கைளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது மீனவர்களின் பிரச்சினைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சினை நீண்ட காலமாக நடைபெறுகிறது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையினை மட்டும் நம்பாது நீங்களும் எதிர்க்க வேண்டும். அதற்காக பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரண்டு பாரிய படகுகளை நான் தருகிறேன்.

இதன்போது மீனவர்கள்"படகு வெள்ளோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும்" என்றனர். அதற்கு அவர் " நான் ஒன்றினை கூறிவிட்டு பங்கருங்குள் (பதுங்குகுழி) ஒழிந்திருக்க மாட்டேன். நானும் வருவேன் என்றார்.

குருநகரில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி நீரியல் வள திணைக்களத்திற்கு சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அலுவலகத்திற்கு சென்றது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகள் ஏந்தியவாறும் கோஷமிட்டவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

அத்துமீறும் மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரும்புப் படகு - யாழில் அமைச்சர் டக்ளஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இது உறவுகளை கோத்துவிடும் வேலை போல் தெரிகிறது.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது கடற்படையும் போலீசும்தானே.. கடற்படைக்கு மீனவர்கள் தகவல் தந்து அந்த இடத்துக்கு உடனும் கடற்படை வரக்கூடியவாறுதானே ஒரு அமைச்சர் ஒழுங்கு செய்யவேண்டும்… இப்படி மீனவர்கள் செய்ய வெளிக்கிட்டால் அவர்களும் பதிலுக்கு செய்தால் இது தொப்புள்கொடி உறவுகளுக்கிடையில் சிண்டு முடியும் வேலை ஆகிவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தொப்பூழ்க்கொடி உறவுகள் களவுக்கு இங்கு வராவிட்டால் பிரச்சினை சோல்வ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:
இதன்போது மீனவர்கள்"படகு வெள்ளோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும்" என்றனர். அதற்கு அவர் " நான் ஒன்றினை கூறிவிட்டு பங்கருங்குள் (பதுங்குகுழி) ஒழிந்திருக்க மாட்டேன். நானும் வருவேன் என்றார்.

நல்ல விளக்கம்!👎

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230124-110951.jpg

 கெதியா  இடிப்பு படகுகளை வாங்குங்கப்பா.. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிரான கடற் படையினரின் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தெரிவிப்பு

By T. SARANYA

24 JAN, 2023 | 04:16 PM
image

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை  பூரணமாக கட்டுப்படுத்துவது  தொடர்பாக கடற்படை  மற்றும் சம்பந்தப்பட்ட  கடற்றொழில் அதிகாரிகளுடன் இன்று (ஜன 24)  நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற குறுகிய அரசியல் நோக்கங்கொண்டவர்களினால் இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாடுகளுக்கிடையேயான அசௌகரியங்களை உருவாக்கக்கூடிய எந்தவிதமான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும், நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் எமது கடற் பரப்பிற்கு வருகின்ற நிலையில் கடற் படையினரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரி, சீரற்ற காலநிலை போன்ற காரணங்களினால் கடந்த மாதங்களில் கடற்படை செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததாகவும் எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதுடன் கடத்தல் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்கள் சம்பந்தப்படுவதையும்  கட்டுப்படுத்த வேண்டி இருக்கின்றது.

எனவே,  கடற்றொழில் மாவட்டங்கள் தோறும் ஆலோசனைக் குழுக்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுக்களில் கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள், கடற்படையின் உயரதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகளை  இக்குழுவில் உள்ளடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/146588

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள். அவர்களின் வேலையை மக்கள் ஏன் செய்ட வேண்டும்?

இந்தியாவில் இருந்து வந்த அமைச்சருடன் பேசி நல்ல முடிவுக்கு வந்திருக்கலாம்.

காரைநகர் கடற்படை முகாம் அடிக்க போனது போல் டக்ளசின் நடவடிக்கைகள் தோல்வியில் தான் முடிகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.