Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிற்கு 19 வாகனங்கள் : 950 000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதா ? - பிரத்தியேக செயலாளர் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிற்கு 19 வாகனங்கள் : 950 000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதா ? - பிரத்தியேக செயலாளர் விளக்கம்

By DIGITAL DESK 5

21 JAN, 2023 | 01:03 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , 950 000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

'முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , அவரது உணவு உள்ளிட்டவற்றுக்காக 950 000 ரூபா பணமும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளமை கவலைக்குரியதாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்த காலப்பகுதியில் கூட எந்தவொரு வாகனத்தையும் அநாவசிய தேவைகளுக்காகப் பயன்படுத்தவில்லை. 

தேசிய உற்சவங்களைத் தவிர வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நிலையில் அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு தேவையான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றை அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டவை என்று செய்திகளை வெளியிடுகின்றமையானது மக்களை தவறான பாதையில் திசை திருப்பும் செயற்பாடாகும்.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் அவரது பாதுகாப்பிற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல.

அவர் தற்போதும் தனது சொந்த காரொன்றையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். 1986 - 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியொருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு, நிதி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக எந்தவொரு விசேட சலுகையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவில்லை. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/146357

  • கருத்துக்கள உறவுகள்

வாகன பயன்பாடு குறித்து கோட்டாபயவின் அலுவலகத்திலிருந்து விளக்கம்

தமது தனிப்பட்ட பாவனைக்காக 19 வாகனங்களை பயன்படுத்தியதாகவும் உணவுக்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை செலவிட்டதாகவும் வெளியான செய்திகள், வதந்திகளாகும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் ராஜபக்ஷ சுகீஸ்வர பண்டார விடுத்துள்ள அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்த வாகனத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனம் தேசிய கொண்டாட்டங்களின் போது தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பது மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

19 வாகனங்கள் அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறான செய்தியாகும்.

கோட்டாபயவின் பாதுகாப்புக்கான வாகனங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரிவினரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

அவை ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்… எத்தனையோ வங்கிகள் இருக்க, படுக்கை அறையில்….
ஒரு கோடி ரூபாவை, பதுக்கி வைத்திருந்தவர் தானே.. கோத்தா.
இவர்கள்… என்று உண்மை பேசியவர்கள். 
செய்வது எல்லாவற்றையும் செய்து கொண்டு, தமது களவுகளை…
வெட்கமில்லாமல் பூசி மெழுகிக் கொண்டு இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வாகன பயன்பாடு குறித்து கோட்டாபயவின் அலுவலகத்திலிருந்து விளக்கம்

இவருக்கு இன்னமும் அலுவலகம் இருக்கிறதா?

ஆம் என்றால் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இவருக்கு இன்னமும் அலுவலகம் இருக்கிறதா?

ஆம் என்றால் ஏன்?

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்து அறிக்கை விட!

  • கருத்துக்கள உறவுகள்

தனது பணிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமல் இராஜினாமா செய்த ஒரு ஜனாதிபதிக்கும் மற்றைய ஜனாதிபதிகள் போல அனைத்துக் கொடுப்பனவுகள் சலுகைகள் யாவும் வழங்க வேண்டியது அவசியம்தானா? கோத்தபாயா ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்று சொல்வது முற்றிலும் பிழையான கூற்று. இங்குதான் 986 - 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைகள் சட்டம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்பட வேண்டிய அவசியம் தெளிவாகிறது.

இலங்கை போன்ற வறிய நாடுகளில் மாஜி ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவது பணவிரயமாகும். வழக்கப்படி ஒரு பணியாளர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு தனது முதலாளியை ஒய்வூதியம் வழங்கும்படி கேட்பதில் எந்தளவுக்கு நியாயம் இல்லையோ அதுபோலவே இதுவும். எனவே ஜனாதிபதிகள் தமது பணிக்காலத்தை பூர்த்தி செய்யும் அல்லது இடையில் இராஜீனாமா செய்யும் இருவகையிலும் வெவ்வேறு விதமான கொடுப்பனவுகள் வழங்கப்படுதல் வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் கோத்தா ஓய்வு பெற்றார் என்ற வாதம்  ஏற்றுக்கொள்ளகூடியதன்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.