Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி குறித்து கலந்துரையாடலின் போது, பபயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தின.

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு நெருக்கடியையும் முன்னுரிமைகளின் அடிப்படையில் தீர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, அனைத்து சமூகங்களிலும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுதந்திரமான உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடு, சிவில் சமூக பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான பிரதிநிதி தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு பிரிவினரால் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தடுத்துவைக்கப்படுகின்றமை, ஊழல் மீண்டும் உருவாகியுள்ளமை தொடர்பில் தமது நாடு அவதானித்து வருவதாக அமெரிக்க பிரதிநிதி இதன்போது கூறினார்.

எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தை புதிதாக மாற்றியமைக்குமாறும் தன்னிச்சையாக தடுத்து வைக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமை நிலைப்பாட்டிற்கமைய கருத்து சுதந்திரத்தை வழங்கும் சட்டத்தை கொண்டு வருமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் வலியுறுத்துவதாக அமெரிக்க பிரதிநிதி இன்று சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இன்றைய கலந்துரையாடலின் போது 03 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்தல், பிரஜைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் முதலாவது பரிந்துரையென சீன பிரதிநிதி தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார மற்றும் சமூகத்துறைகளில் பெண்கள் பங்கேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குதலை இரண்டாவது பரிந்துரையாகவும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதை மூன்றாவது பரிந்துரையாகவும் அவர் முன்வைத்தார்.

இதேவேளை, இந்தியாவினாலும் இலங்கை தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும்,
வறுமையை ஒழிக்கவும், பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும்,
அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்

என்பன இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாகும்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியமென இந்தியா நம்புவதாக இந்தியாவிற்கான பிரதிநிதி இன்றைய கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்கு இலங்கை சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பதில் வழங்கினார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை இலங்கை அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு உட்பட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதித்து அதிகாரிகளால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

http://www.samakalam.com/பபயங்கரவாத-தடைச்சட்டத்த/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை இலங்கை அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டுநாளில் தெரிந்துவிடும் கெட்டிக்காரன் புளுகு. 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன், கனடா : 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் - இந்தியா

(நா.தனுஜா)

 

இலங்கையில் தற்போதும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய பருவகால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது. இதன்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், அயர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, எதியோப்பியா, கம்பியா, ஈரான், ஈராக், ஜப்பான் உள்ளடங்கலாகப் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டனர். 

அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அரச சார்பற்ற அமைப்புக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்களைத் தண்டிக்குமாறும் கோரிக்கைவிடுத்தனர்.

அதேபோன்று கடந்த வருடம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டென்மார்க் பிரதிநிதியும், பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகளை முடிவிற்குக்கொண்டு வருவதுடன் வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய தீர்வை வழங்குமாறு கொலம்பியா நாட்டின் பிரதிநிதியும் வலியுறுத்தினர்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட இந்தியாவின் பிரதிநிதி, தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், கடந்த வருடம் சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் இந்தியா வம்சாவளி தமிழர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தமிழ்மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

பிரான்ஸ் பிரதிநிதி இலங்கையில் மரண தண்டனை முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று தெரிவித்ததுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். 

மேலும் இங்கு இலங்கை தொடர்பில் உரையாற்றிய பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் மரணதண்டனை என்பன முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் எனவும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிசெய்யப்படவேண்டும் எனவும், பால்புதுமையினரை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முடிவிற்குக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன், கனடா : 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் - இந்தியா | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.