Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் - சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் - சி.வி.விக்னேஸ்வரன்

By Digital Desk 5

04 Feb, 2023 | 09:27 AM
image

ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.

அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும்.

நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சுதந்திரதினம் வட,கிழக்கு மக்களால் கரிநாளாக அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும், அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வட கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு அது சுதந்திரமற்ற, உரிமைகளற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள்.

எனவே தான் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத்தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று (04) வடக்கு, கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பிரித்தானியரின் ஆதிக்கத்தினுள் இருந்து சிங்களப்பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று சென்றமையை சுட்டிக்காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.

ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்.

தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பூரண அதிகாரப் பகிர்வைப்பெற சிங்கள மக்கள் எப்போது அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம்.

இளைஞர் யுவதிகளின் பேரணியை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்கள் பயணம் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் வெற்றியுடனும் நடந்தேற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன் என்று அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/147396

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா எது அதிகாரப் பகிர்வு பதின்மூன்றா? சம்பந்தனுக்கு அடுத்ததா உங்களுக்கும் மூப்பு நோய் வந்துவிட்டதா? அதில் எதுவுமே இல்லையே உங்களுக்குத் தெரியாதா? அல்லது உங்களது சம்பந்தி வாசுவுடன் சேர்ந்து நாடகமாடுகிறீர்களா? இப்போதைய சிங்கள அரசியல்வாதிகளுக்கே தெரியுமே பதின்மூன்றில் எதுவுமே இல்லை என ரணிலே சொல்லிவிட்டாரே இலண்டன் நகரசபைக்கு இருக்கும் அதிகாரம்கூட இல்லை என அதாவது லக்ஸ்மன் கதிர்காமர் தொன்னூத்தி ஐந்தில் ஐ நா செயலருக்குச் சொன்னதுபோல அதாவது ஐ நாவுக்கு வேலை மலேரியா நுளம்புக்கு மருந்து அடிக்கிறத்தான் அதுக்குமேல இலங்கைப் பிரச்சனையில் கருத்துக்கூடச் சொல்ல முடியாது என அந்தவேளையில் நீங்கள் சிங்கள நீதி பரிபாலனத்தில் அப்பாவித் தமிழர்களை சிறை அறைக்கு அனுப்பிக்கொண்டு இருந்தியள்.

ஏன் மேட்டுக்கிடி தமிழரே உங்களுக்கு கொஞ்சம்கூட மனச்சாட்சி இல்லையா. நெத்தியில பூசியிருப்பது திருநீறா அல்லது வேறு ஏதாவது கலர்ப்பொடியா.

நேர்மையுன் இருங்கள் பிறகு திப்புப்ப் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட இலக்கான 
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனும் அடிப்படையில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களப்போன்றோருக்கு இருக்கு என்பதை உணர்ந்து செயற்படுங்கள். அதைவிடுத்து இன்னுமொருக்கா  ஆளுனர் எனும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அரசிவேக்காடு நினைத்தால் கலைக்கலாம் எனும் கேவலத்தில் இருக்கும் மாகாண சபையை அலங்கரிக்கலாம் எனக் கனவு கண்டு தமிழினத்தை நடுரோட்டுக்குக் கொண்டுபோகாதீர்கள். 

பேசாமல் உங்கட சிங்கள மருமக்களுக்குப் பிறந்த குழந்தைகளை "தொய் தொய் தொய்யபவா" என ஆராட்டுங்கோ.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.