Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது: அர்ஜீன் சம்பத்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது: அர்ஜீன் சம்பத்!

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத காலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

https://athavannews.com/2023/1324408

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தமிழக இந்து மக்கள் கட்சி.?....நீங்கள் மட்டும் தமிழகத்தின் இந்து மதத்தை சைவர்களிடம் கேட்டு கேள்வி இல்லாமல் புகுத்தலாம் வேறு நாடுகளில் இருந்து வந்தால் ம்ட்ட்டும் அடிப்படை வாதம்...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

 

13 hours ago, தமிழ் சிறி said:

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத காலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்.

இந்த இரண்டு கருத்துக்கும் தலையங்கத்துக்கும் என்ன சம்பந்தம் யாராவது விளக்குங்களேன் பவுத்த பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது இவர் கண்ணுக்கு தெரியவில்லையோ அல்லது அதைப்பற்றி கருத்து தெரிவித்து விட்டு நாட்டுக்கு திரும்பிப் போக முடியாதே என்கிற பயமா பிரச்சனை ஒன்றிருக்க வேறொன்றை கிளப்பிவிட்டு கைத்தட்டு வாங்குவதும் கொழுந்து விட்டு   எரிவதை வேடிக்கை பாக்கவுமே இவர்களது ஆலோசனை உதவும் அங்கே சாதியை வைத்து அரசியல் செய்வதை இங்கே சமயத்தை தூக்குகிறார்.

13 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.

 

13 hours ago, தமிழ் சிறி said:

இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

 

13 hours ago, தமிழ் சிறி said:

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

எரிபொருள் இல்லாத நாட்டுக்கு பஸ்களும், தொடரூந்துகளும் தருவிப்பு. பிறகு அவற்றை  திருத்த பொறியியலாளர்கள் இந்தியாவில் இருந்து வருவிப்பு. சும்மா கால்நடையாக, துவிச்சக்கர வண்டியில் சிவனே என்று நிம்மதியாக வாழ்ந்த நண்பனுக்கு உந்துருளியை பரிசாக அளித்து, அவனது பணமும் போய், மனநிம்மதியும் போய், அதை எறியவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் அவஸ்த்தைப்பட  விட்டு வேடிக்கை பாத்த நண்பனின் கதை நினைவுக்கு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.