Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

orupirahadanathinethirvyi7.jpg

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா

எங்களுடைய

புன்னகையை சந்தேகிக்கும்

எல்லோருக்கும் சொல்கிறோம்…….

எங்கள் கடல்

அழகாயிருந்தது

எங்கள் நதியிடம்

சங்கீதமிருந்தது

எங்கள் பறவைகளிடம் கூட

விடுதலையின் பாடல்

இருந்தது…..

எங்கள் நிலத்தில்தான்

எங்கள் வேர்கள் இருந்தன…

நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்

எம்மூரில்…

அவர்கள்

எங்கள் கடலைத் தின்றார்கள்…

அவர்கள்தான்

எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்…

அவர்கள்தான்

எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்……..

எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள்

அவர்கள்தான்

எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை

தெருவில் போட்டு நசித்தார்கள்…..

நாங்கள் என்ன

சொல்வது

நீங்களே தீர்மானித்து

விட்டீர்கள்

நாங்கள் மனிதர்கள் அல்ல என்று……

எங்கள் வயல்கள்

பற்றி எரிகையில்

எங்கள் நதிகளில்

எம் தலைகளைக் கொய்த

வாட்கள்

கழுவப்படுகையில் நீங்கள்

எங்கிருந்தீர்….

எப்போதுமிருக்கும்

பச்சை வயல்வெளியை

ஒற்றைப்பனை மரத்தை

தெருப்புழுதிக் கிளித்தட்டை

ஊர்க்கோயிலை

என்

பாட்டியின்

பூர்வீகக் கிராமத்தையும்

அதன் கதைகளையும்

இழந்து நாங்கள்

காடுகளில்

அலைகையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

சப்பாத்துக் கால்கள்

எங்கள்

குரல்வளையில் இருக்கையில்

எம் பிள்ளைகள்

வீதியில

துடிதுடித்து அடங்குகையில்

துப்பாக்கிகளின் சடசடப்பு

ஊருக்குள் வருகையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள்

ஊர்பிரிந்து வருகையில்

உயிர் தெறித்து விழுகையில்

கண்ணீர் பிரியாத துயரம்

எம்மைத் தொடர்கையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள் பசித்திருந்தோம்

நாங்கள் பயமாயிருந்தோம்

நாங்கள் விழித்திருந்தோம்

நாங்கள் விக்கித்து

வேறு வழியின்றி

மூர்ச்சித்துச் செத்தோம்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எப்போதும்

எங்கள் கனவுகளைத்

துப்பாக்கிகள் கலைத்தன

குண்டுகள் விழுந்த முற்றத்தில்

பேரச்சம் நிறைய

நாம் தனித்தோம்

நாம் தவித்தோம்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

ஊரோடு கிளம்பி

நாவற் குழியில்

நசுங்கிச் செத்தோமே

நவாலியில் கூண்டோடு

நாய்களைப்போல்

குமிந்த எம் உடல்களின் மேல்

நாம் கதறி அழுகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

நாம்

வேர்களை இழந்து

ஊர் ஊராய்

அலைகையில்

துர்க்கனவுகளில்

துப்பாக்கிகளைக்கண்டு

எங்கள் பிள்ளைகள்

திடுக்கிட்டு அலறுகையில்

எங்கள்

பள்ளிக்கூடத்தில்

குண்டுகள் வீழ்கையில்

ஒழுகும் கூரையில்

எம் குழந்தையின்

கொப்பி எழுத்துக்கள் கரைகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

நாங்கள் எங்கள்

பனைமரங்களைவிட்டு துரத்தப்படுகையில்

தெருப்புழுதி

எங்கள் பாதங்களில்

ஏறிவர

பாதங்களின்

சுவடுகளேயறியாக்

காடுகளிற்குள்

நாம்

துரத்தப்படுகையில்

காடுகளில்

எங்கள் குழந்தைகளின்

புன்னகை

மழையில் நனைகையில்

மலேரியாவில் சாகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

சப்பாத்துக்கள்

எங்கள் முற்றத்தை மிதிக்கையில்

உறுமும் வண்டிகள்

எங்கள் வேலிகளைப்பிரிக்கையில்

துப்பாக்கிகளின் குறி

எம்மீது பதிகையில்

உயிர் ஒழித்து

நாங்கள்

ஊர்விட்டோடுகையில்

அப்போது நீங்கள் எங்கிருந்தீர்

எங்கள்

நதியின் சங்கீதம்

துப்பாக்கி வாய்களில்

சிக்கித் திணறுகையில்

கடலின் பாடலை

அவர்கள் கைது செய்தபோது

எங்கள் குழந்தைகளை

அவர்களின் வாட்கள்

இரண்டாகப் பிளக்கையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

ஊரில்

கந்தகம் மணக்கையில்

வானில்

மரணம் வருகையில்

வயலில் அவர்கள்

மரணத்தை விதைக்கiயில்

வரம்புகளில் உடல்களைக் கிடத்தையில்

ஊரைப்போர் விழுங்கையில்

ஊர் ஊராய்

நாம் அலைகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய

தெருக்களில் சருகுகள்

நிறைகையில்

குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில்

நொருங்கித்தேய்கையில்

மனிதர்களின்

சுவடுகளேயறியா

இடங்களிற்கு நாம்

துரத்தப்படுகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

உறைந்துபோய்க்கிடக்கும்

எங்கள் குழந்தைகளின்

புன்னகையை

குரல்களற்று அலையும்

ஊர்க்குருவியின் பாடலை

பச்சையற்றெரியும்

எங்கள் வயல்களின் பசியை

பேனாக்களை இழந்த

எங்கள் குழந்தைகளிடம்

இருந்து துப்பாக்கிகளை

மீட்கமுடியாமல்

நாங்கள் தத்தளிக்கையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய

புன்னகையை சந்தேகிக்கும்

எல்லோருக்கும் சொல்கிறோம்…….

முகவரிகளற்றுத்

தேசங்களில் அலையும்

உறவுகளின் முகங்களை

மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை

மறுபடியும்

தரமுடியுமா உம்மால்?

அப்போதெல்லாம்

நாங்கள் ஏன் தனித்தோம்

உலகே

எங்கள் உணர்வுகளின் வலி

எட்டவில்லையா உனக்கு

எம்மூரின் நதியின் சலசலப்பில்

வருடும் தென்றலின் தழுவலில்

ஒவ்வொரு பூவின் முகத்திலும்

விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே

தெரிகிறதா உனக்கு

நாங்கள் கனவுகள் சுமக்கிறோம்

எங்களிடம்

மிச்சமிருக்கும்

சுதந்திர உணர்வுகளின் மீது

எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்

நிறங்களற்றுப்போன

இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்?

http://www.erimalai.info/index.php?id=164

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கவிதையை எங்கோ கேட்ட நினைவு, ஏதோ ஒரு வலைப்பதிவில் ஒரு நண்பர் இதை ஒலிவடிவில் உணர்வு பொங்க பதிந்திருந்தார்..

கவிதை நன்றாகவே உள்ளது.

மீள நினைவு படுத்தியமைக்கும், எழுத்தில் வடித்த கவிஞனுக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை தளத்தில் ஒலி வடிவமும் உள்ளது.

http://www.erimalai.info/vellithorum/150606_sahana.smil

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

[எங்கள் கடல்

அழகாயிருந்தது

எங்கள் நதியிடம்

சங்கீதமிருந்தது

எங்கள் பறவைகளிடம் கூட

விடுதலையின் பாடல்

இருந்தது…..

எங்கள் நிலத்தில்தான்

எங்கள் வேர்கள் இருந்தன…

நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்

எம்மூரில்…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.