Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: சீமான் மீது வழக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: சீமான் மீது வழக்கு!

WhatsApp-Image-2023-03-12-at-11.02.58.jp

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் இன்று (மார்ச் 12 ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வெளி மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சித்தரித்து தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பாஜக வினர் வதந்தி பரப்பினர்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில். ”வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பிகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் குழுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வும் நடத்தியது.

அதில், “பிகாரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி இங்கு இருப்பதாகத் தெரிவித்தனர்.சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம். தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்” என்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறினார்கள்.

இந்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வழக்கு பாய்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்; தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார். இந்த வீடியோவை பிகாரை சேர்ந்த அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்குகளில் கூடுதல் பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதால் அதற்குரிய பிரிவுகளும் சீமான் மீதான முந்தைய வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

https://minnambalam.com/political-news/north-indian-worker-issue-police-register-case-against-seeman/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வெளி மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சித்தரித்து தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பாஜக வினர் வதந்தி பரப்பினர்.

வதந்தி பரப்பிய...  பா.ஜ.க. வினர் மீது, இது வரை ஒரு வழக்கும் போடாமல்,
சீமான் மீது மட்டும் வழக்குப் போட்டது ஏன்?

தமிழக காவல் துறையை... தனது கட்டுப் பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் 
முதல்வர் ஸ்ராலினிற்கு பா.ஜ.க.மீது, வழக்குப் போட துணிவு உள்ளதா?
அவங்கள், ஒருத்தனை  தொட திராணி இல்லை... 😎
தமிழன் மீது மட்டும், உங்கள் கெடு பிடியை காட்டுவீர்களோ.

வட மாநிலத்தில், ஆந்திராவில், கர்நாநாடகாவில், கேரளாவில் எல்லாம்..
தமிழ் தொழிலாளர்கள், மாணவர்கள் தாக்கப் படும் போது...
இந்தத் திராவிட அரசியல்  கூட்டம் என்றாவது தனது கண்டனத்தையோ, 
நடவடிக்கையையோ எடுத்ததா?    

அப்படியிருக்க... நாம் தமிழர் மீது உடனடி வழக்குப் பதிவதன் அர்த்தம் என்ன?
இதற்குத்தான்... தமிழகத்தை தமிழன் ஆழ வேண்டும் என்பது.
வந்தேறிகள்... விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்று, சீமான் சொல்வதில் தவறில்லை. 👍

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வடமாநில தொழிலாளர் பற்றிய பேச்சு: பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் - நடந்தது என்ன?

புலன்பெயர் தொழிலாளர்கள்- சீமான் மீதான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்ப்பு

பட மூலாதாரம்,YOUTUBE/NAAM THAMIZHAR KATCHI

43 நிமிடங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய பேச்சு தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர் குறித்த அவரது கருத்துகளுக்காக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

வட தொழிலாளர்கள் தொடர்பான சீமான் பேச்சை பகிர்ந்து அது வெறுப்பை வளர்க்கும் இத்தகைய பேச்சு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மார்ச் 10-ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அருந்ததியர் குறித்து சீமான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சமூக ஊடகத்தில் பரவிய போலி காணொளிகள் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின.

 

இந்த போலி காணொளிகள் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பிகார் போன்ற மாநிலங்களின் அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதை தொடர்ந்து பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உண்மை சூழலை அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தனர்.

இதனிடையே, இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தொழிலாளர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டன. மேலும், புரளி பரப்பியதாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிகாரைச் சேர்ந்தவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்த பொதுக்கூட்ட காணொளி ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார். அதில், `நான் ஆட்சிக்கு வந்தால் இந்திக்காரர்கள் எல்லாம் அவர்களே பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். எத்தனைபேரை எங்கு வச்சி வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா வழக்கு, பாலியல் தொல்லை வழக்கில் ஆயிரம் பேரை உள்ளே தூக்கிப் போட்டு அவர்களுக்கு சோறு போடாமல் விட்டால் சரியாகிவிடும்` என்று சீமான் பேசியிருந்தது அதில் பதிவாகியிருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் திருநகர் காலனியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது பேசியதன் சிறு பகுதியை தான் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில், பட்டியலின அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கமளிக்க நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சீமான் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் கருங்கல்பாளையம் போலீஸார் பிப்ரவரி 22ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோவின் அடிப்படையிலும் சாட்சிகளிடம் மேற்கொண்ட விசாரணை, வீடியோ ஆதாரங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்டப் பிரிவுகளில் சீமான் மீது 153 (B) (c), 505(1) (c) ,506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்வீட்

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இன்று ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் கிஷோர் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cn05lg90gy1o

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

வதந்தி பரப்பிய...  பா.ஜ.க. வினர் மீது, இது வரை ஒரு வழக்கும் போடாமல்,
சீமான் மீது மட்டும் வழக்குப் போட்டது ஏன்?

தமிழக காவல் துறையை... தனது கட்டுப் பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் 
முதல்வர் ஸ்ராலினிற்கு பா.ஜ.க.மீது, வழக்குப் போட துணிவு உள்ளதா?
அவங்கள், ஒருத்தனை  தொட திராணி இல்லை... 😎
தமிழன் மீது மட்டும், உங்கள் கெடு பிடியை காட்டுவீர்களோ.

 

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/legal-action-should-be-taken-against-annamalai-congress-mp-manickam-tagore-501786.html

சீமானுக்கு 6 நாள் முதல் அண்ணாமலை மேல் வழக்கு போடப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தை தமிழன் ஆழ வேண்டும்

இந்த வசனம் மட்டும் ஏன் தமிழர்களுக்கு விளங்க மறுக்கின்றது என எனக்கு விளங்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.