Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்

Featured Replies

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் - ஹரி ஆனந்தசங்கரி

Published By: T. Saranya

22 Mar, 2023 | 03:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை (21) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருடகாலத்திற்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இவ்வுதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/151155

புலம்பெயர் தமிழர்கள் Gary யின் கீழ் ஒரு அமைப்பாக திரெண்டால் என்ன?

நமக்கு நாமே தேர்தல் வைக்கும் கோமாளித்தனத்தை எல்லாம் நம்பமாட்டார்கள்.

ஆனால் மேற்கு நாட்டு முறைகளில் தேர்வாகிவருபவர்களுக்கு ஒரு கனம் இருக்கும்.

குறைந்தபட்சம்,

உலகளாவிய தமிழின மரபு வழி, தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் அமைப்பு (Elected Officials of Tamil Origin, from across the globe) ஒன்றைவாது ஸ்தாபித்து முன் நகரலாம்.

அதில் சாதாரண ஹரோ நகரசபை உறுப்பினர் முதல், கனேடிய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் வரை சேர்ந்து கொண்டு ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, இணையவன் said:

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

அவருக்கு எட்டியது அவ்வளவுதான்🤔

1 hour ago, இணையவன் said:

உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

ஆகா பொன்னான வார்த்தைகள், கோமாளி என்ற உக்ரைனும் அதனை முட்டுக்கொடுக்கும் மேற்குலகும், இப்படி வெளிப்பட்டையாக ஒரு மட்டுத்தினரே ஒப்பு கொள்ளும் போது, நம் பதிந்தால் மட்டும் நீக்குவது ஏனோ மட்டுறுத்தினரே, எனக்கு தெரியிம் இதையும் நீக்கி விடுவீர்களென்று😎😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம்

இது 100% உண்மை யாழ்களமிருப்பதால் எனக்கு நிம்மதி🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நான் தயார். 

என்னை ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன். இதே கேள்விக்கு அனைவரின் பதிலும் தயார் என்றே இருக்கும் என நினைக்கிறேன்.

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

அதே

நன்றி தம்பி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.