Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published By: T. SARANYA

28 MAR, 2023 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2030 ஆம் ஆண்டு தொடக்கம் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் 70 சத வீதமானவை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல், வலுசக்தி விநியோகத்தில் சுயாதீனமடைதல், மற்றும் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் வெளியீட்டை பூச்சியமாக்குதல் போன்றவற்றை அரசு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அந்நிலைமையை அடைவதை நோக்கமாகக்  கொண்டு இந்தியா மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக, பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி, மற்றும் உயிர்த்திணிவுசார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் மற்றும் தொடர் மின்மாற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வசதியளித்தல் மூலம் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கும் மற்றும் வலுப்படுத்துவதற்கும் இந்தியா உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசுக்கும் இடையில் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/151596

  • கருத்துக்கள உறவுகள்

 சூரிய மின்னுற்பத்தி - அட இதைதான் சொன்னேன் அதற்குள் வந்துவிட்டதா😎, இது யாழ் தீவு பகுதிகளில்தான் நிறுவ நினைக்கின்றார்கள், பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி!

 

Solar.jpg

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தினால் திருகோணமலை சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவோட் சூரிய சக்தி திட்டத்தை 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முதற்கட்டமாக, 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 50 மெகாவோட் சூரிய மின்சக்தித் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், சம்பூரில் இருந்து கப்பல்துறைக்கு 23.6 மில்லியன் டொலர் செலவில் 220 கிலோவாட் மின்சார விநியோக கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.

இந்த கட்டத்தை 2024 முதல் 2025 வரை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 72 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேலதிகமாக 85 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் கட்டமை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் டொலர் செலவில் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரை 220 கிலோவோட் திறன் கொண்ட 76 கிலோமீற்றர் நீளமான விநியோக கட்டமைப்பு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி கைச்சாத்தானது.

திகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில், திருகோணமலை, சம்பூர்பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா – இலங்கை அரசாங்கங்களிடையே 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கைச்சாத்தானது

எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த இடத்தில் சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/246651

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுக்கிள்ளை ஒண்டாகியிட்டியள் ..பிறகேன் ஒப்பந்தம் எல்லாம் செய்யிறியள்...காசுவந்திட்டுது...பாசையும் வந்திட்டுது....பிறகேன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.