Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு வயதில் மாதவிடாய் - ஏன் இப்படி நடக்கிறது? மொபைல் போன்கள் காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,டாக்டர். ஷில்பா சிட்னிஸ் ஜோஷி
  • பதவி,பிபிசி மராத்திக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அன்று ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்து போனை எடுத்துப் பார்த்தபோது ஐந்து மிஸ்டு கால்கள். என் உறவினர் பெண் அழைத்து இருந்தார். உடனே அந்த எண்ணுக்கு போன் செய்தேன். எதிர்முனையில் ஒரு அழுகுரல் கேட்டது.

“சானுவுக்கு பீரியட்ஸ் ஆரம்பமாகிவிட்டது. அவளுக்கு எட்டு வயது தான் நடக்கிறது. எப்படி இது நடந்திருக்கும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை,'' என்றார்.

அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தேன். அதன் பிறகு சானுவை, மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னேன்

இதுபோன்ற நேரங்களில், பெண்களின் மனதில் படபடப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் சிறுநீர் நோய்த்தொற்று காரணமாக ரத்தம் வெளியேறும். யாராவது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கும்.

 

அதனால் சானுவை கவனமாக பரிசோதித்தேன். சோதனைக்கு பிறகு அவளுக்கு மாதவிடாய் தொடங்கிவிட்டதை அறிந்தேன்.

சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படும் நிகழ்வுகள் இன்று மிகவும் பொதுவாக நடக்கிறது. இதனால், பெற்றோர் மத்தியில் பதற்றமும், கவலையும் அதிகரித்து வருகிறது.

இளம் வயதில் மாதவிடாய் ஏற்படுவதால் இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று கூட புரிவதில்லை. சானிட்டரி நாப்கின் எப்படி பயன்படுத்த வேண்டும்? மாதவிடாய் காலத்தின் போது என்ன செய்ய வேண்டும்? மாதவிடாயின் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உரிய விழிப்புணர்வை அவர்களின் அம்மாக்கள் தான் கொடுக்க வேண்டும்.

சிறு வயதிலேயே மாதவிடாய் - என்ன காரணம்?

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்கள் பருவமடையும் வயது(மாதவிடாய் தொடங்குவது) குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல் பருமன், அதிக அசைவ உணவுகளின் பயன்பாடு, சில மரபணு காரணிகள், மன அழுத்தம், குடும்பத்தினருடன் ஏற்படும் சண்டை குறித்த கவலை போன்றவை இங்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள், சோயாபீன்களை அதிகம் உட்கொள்வதும் இதற்கு ஒரு காரணம். நமது உணவில் உள்ள ரசாயனம், பூச்சிக்கொல்லிகளும் இந்தப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது.

ஆனால் குறைந்த உடற்பயிற்சி மற்றும் உடல் பருமன் மட்டுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப உணவு முறையும் மாறுகிறது. உடல் வளர்ச்சிக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படும் அதிக உணவாலும், அதற்கேற்ற உடற்பயிற்சி இல்லாததாலும் பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.

மொபைல் பயன்பாடு காரணமா?

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாதவிடாயை தூண்டுவதற்கு தேவையான ஹார்மோன்களை வெளியிட மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பிகளின் சமிக்ஞைகள் அவசியம். பெண் குழந்தைகள் வளரும் போது இந்த சுரப்பி மூலமாக ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மாதவிடாய் ஏற்படுகிறது.

இருப்பினும், மாதவிடாய்க்கு தேவையான சிக்னல்களை அனுப்ப எந்த நேரத்தை மூளை தேர்வு செய்கிறது என்ற கேள்விக்கு நம்மிடம் உறுதியான பதில்கள் இல்லை. ஆயினும், சில ஆராய்ச்சிகள் மூலமாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பெண் குழந்தைகளைச் சுற்றி நிலவும் சூழல் காரணமாக இந்த ஹார்மோன் தூண்டப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி, மடிக்கணினிகள், மொபைல் போன்களில் காணக் கிடைக்கும் உள்ளடக்கம், குழந்தைகளின் மூளையை தூண்டுகிறது. இன்று கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளிடமும் மடிக்கணினி, டேப்லெட்டுகள், மொபைல் போன்கள் உள்ளன. அன்லிமிடெட் இன்டெர்நெட்டும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி காரணமாக மொபைல் போனில் நம்மால் அனைத்து விதமான உள்ளடக்கத்தையும் பார்க்க முடிகிறது. இதை சிறியவர் முதல் பெரியவர் வரை எளிதாக பார்க்கும் வகையிலேயே இந்தியா போன்ற நாடுகளின் பாதுகாப்பு இருக்கிறது.

அதனால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது, வயது வந்தோருக்கான அல்லது ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பதால் அவர்களின் ஹார்மோன்களை தூண்டும் சிக்னலை மூளை அனுப்பக்கூடும். இதனால் இளம் வயதிலேயே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் தாமதமாக தொடங்குவதை நாம் காண்கிறோம். அங்கு மொபைல் போன் பயன்பாடு மற்றும் அதில் வரும் உள்ளடக்கங்கள் கிடைப்பதில் இருக்கும் வேறுபாடு காரணமாக இது தாமதமாகிறது.

இத்தகைய உள்ளடக்கம் ஆண், பெண் இருவரையும் பாதிக்கிறது. ஆனால், இங்கு பெண்களின் உடல் மிகவும் வித்தியாசமானது. கொஞ்சம் சிக்கலானதும் கூட. அதனால் முடிவுகள் சற்று வேகமாகத் தெரியும்.

ஆனால், எல்லாப் பெண்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இதில் மற்ற காரணிகளும் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் மொபைல் போன் பயன்பாடு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளை நினைத்து கவலையா?

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாதவிடாய் தொடங்கியவுடன், பெண் குழந்தைகளுக்கு சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சில குழந்தைகள் பருவமடைந்த பிறகு அவர்களின் உயரம் அதிகரிப்பது நின்றுவிடும். அதனால் சிறு வயதிலேயே மாதவிடாய் ஏற்படுவது என்பது கவலைப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, பத்து வயதான மகளின் உயரம், தாயின் உயரத்தை விட மிகக்குறைவாக இருந்தால் உடனடியாக அந்த குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாதவிடாயை தாமதப்படும் மருந்துகளை தேவைகேற்ப எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இவை அனைத்தும் உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே முடிவு செய்யப்பட வேண்டும்.

பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவரின் மேற்பார்வையில் ஊசி போட்டால், மாதவிடாய் சிறிது தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த காலகட்டத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்த காலகட்டத்தில் பெண்ணின் உயரமும் மற்ற உடல் அமைப்பும் மேம்படும்.

அதனால், சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும். பெற்றோர்கள், சரியான நேரத்தில் மருத்துவர்களை சந்திப்பது பலனைத் தரும்.

மாதவிடாய் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, இந்த சிகிச்சையின் செயல்திறன் குறைகிறது.

மாதவிடாய் முன்கூட்டியே தொடங்கினால், பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (PCOD) ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலியின் காரணமாக, உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.

எதிர்காலத்தில் மார்பக, சிறுநீர்க்குழாய் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

முதல்முறையாக மாதவிடாய் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக மச்சம், அக்குள் முடி, மார்பக வளர்ச்சி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் இளம் வயதிலேயே தோன்றினால், உடனடியாக ஒரு மகளிர் நல மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம்

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாதவிடாய் விரைவாக தொடங்குவது பெண் குழந்தைகளின் தவறு அல்ல. அதனால் விரும்பியதை செய்யவும், வெளியே சென்று விளையாடவும் அந்த குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.

அந்த குழந்தைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது தாயின் பொறுப்பு. சானிட்டரி நாப்கினை தனியாக எப்படி பயன்படுத்துவது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம்.

குழந்தைகளின் தன்னம்பிக்கை குறையாமல் இருக்க அவர்களை எல்லா செயல்களிலும் பங்கு கொள்ள பெற்றோர் உதவ வேண்டும்.

வயதுக்கு வந்த பிறகு பெண் குழந்தைகளை வெளியேச் சென்று விளையாட பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிப்பில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை, சில நேரங்களில் பெற்றோர் மீது வெறுப்பை உருவாக்கும் அபாயமும் இதில் இருக்கிறது.

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பருவமடைந்த பிறகு முதல் வருடத்தில் மாதவிடாய் சற்று ஒழுங்கற்றதாக இருக்கும். 21 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய், ஏழு நாட்கள் வரை ரத்தப்போக்கு அல்லது அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றை நீங்கள் கண்டால், குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். பெண்களின் ஹீமோகுளோபின் அளவு குறித்து அடிக்கடி பரிசோதித்து பார்க்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சீராக வழங்குவதும் அவசியமானது.

அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை தினசரி எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இளம் பருவத்திலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு, தனிமை, குறைந்த ஆளுமை, பாலியல் உறவில் எளிதில் ஈடுபடுவது போன்ற மாற்றங்கள் அதிகமாக நடக்கிறது. அதனால், இந்த குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயார் செய்ய பெற்றோர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும்.

மாதவிடாய் ஒரு நோய் அல்ல, பெண்களின் வளர்ச்சியில் அது ஒரு கட்டம். இதைப் பெண்களிடம் அவர்களின் தாய் எடுத்துக்கூற வேண்டும். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மகள்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு கட்டத்திலும் தாய் உடனிருக்க வேண்டும்

(இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள், பிபிசியின் கருத்துகள் அல்ல)

https://www.bbc.com/tamil/articles/ckm67vv45gmo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருவரும் இரசாயனம் கலக்காத  இயற்கையான உணவுகளை உண்டாலே ஆயிரம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தாய் பூப்பெய்திய வயதை நெருங்கியதாக மகள்மாரின் பூப்பெய்தும் வயதும் இருக்கும். இந்தப் பரம்பரை தான் பெருமளவு பூப்பெய்தும் வயதைத் தீர்மானிக்கும் ஒற்றைக் காரணி! ஏனைய காரணிகளெல்லாம் இதன் பின்னர் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருடங்களுக்கு முன்னரெல்லாம் 12,13 வயதுக்கு பின்னரே பூப்பெய்தல் நடந்தது.8 வயது சரித்திரம் எல்லாம் அப்போது நடக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

30 வருடங்களுக்கு முன்னரெல்லாம் 12,13 வயதுக்கு பின்னரே பூப்பெய்தல் நடந்தது.8 வயது சரித்திரம் எல்லாம் அப்போது நடக்கவில்லை.

 

நீங்கள் சொல்வது சராசரி வயது. வீச்சு (range) என்னவென்று பார்த்தால் 8 வயது, இருந்திருக்கும். பருவமடையும் வயதை பல நாடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் தான் அளக்கவே ஆரம்பித்தார்கள், ஒரு ஆரோக்கியக் குறிகாட்டியாக.

பி.கு: கடைசிப் பல்லான "ஞானப்பல்" முளைக்கும் வயது முதல், பருவமடையும் வயதும் கூட ஆதிகாலத்தில் தற்போதிருப்பதை விடக் குறைவாக இருந்திருப்பதாக தொல்லியல் சான்றுகள் சொல்கின்றன. ஏன்? ஆதிகாலத்தில் ஆயுட்காலம் குறைவு, உடனே பருவமடைந்து, பிள்ளை பெற்று, பெண்கள் இறந்தும் போவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதத்தில் தயாராக வேண்டிய கோழி 22 நாட்களில் தயாராகி KFCயில் பொரித்து இருப்பதை உண்பது கவுரவம் மேன்மக்கள் போல் விளம்பரங்கள் உள்ள உலகில் இதைவிட கூடிய அசம்பாவிதம் நடக்கும் நடக்கபோவுது .

*****

செம்மலை கராச்சி  காட்டில் மேயும் மாட்டில் ஒன்றரை போத்தில் பால் வந்தாலே அதிசயம் இங்கு நிண்டுகொண்டு உணவு சாப்பிடும் மாட்டுக்கு மட்டும் 3௦ லிற்றர் பால் வருகுதாம் எல்லாம் ரசயான உணவுகள் உட் கொண்டால் மாடு என்ற பெயரில் நாளை மாமிச குவியல் பால் தரும் காலம் கிட்டத்தான் .

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

மூன்று மாதத்தில் தயாராக வேண்டிய கோழி 22 நாட்களில் தயாராகி KFCயில் பொரித்து இருப்பதை உண்பது கவுரவம் மேன்மக்கள் போல் விளம்பரங்கள் உள்ள உலகில் இதைவிட கூடிய அசம்பாவிதம் நடக்கும் நடக்கபோவுது .

****.

செம்மலை கராச்சி  காட்டில் மேயும் மாட்டில் ஒன்றரை போத்தில் பால் வந்தாலே அதிசயம் இங்கு நிண்டுகொண்டு உணவு சாப்பிடும் மாட்டுக்கு மட்டும் 3௦ லிற்றர் பால் வருகுதாம் எல்லாம் ரசயான உணவுகள் உட் கொண்டால் மாடு என்ற பெயரில் நாளை மாமிச குவியல் பால் தரும் காலம் கிட்டத்தான் .

 

 

 ஆனால், நின்ற நிலையில் மாடு 30 லீற்றர் கறக்க புண்ணாக்கு (ஓம், புண்ணாக்குத் தான்!😎) மற்றும் மாட்டின் ரகம் (breed) காரணம். உதாரணம், ஜேர்சி மாடு, பிறீசியன் மாடு இரண்டும் நல்ல கறவை மாடு. ஆனால், ஜேர்சி மாட்டை வன்னியில புல்லு மட்டும் மேய விட்டால் அது 3 லீற்றர் தான் கறக்கும். அம்பேவலவில உள்ள கட்டி வைச்சு புண்ணாக்குப் போட்டால் 20 கறக்கும்!

விளங்கி விட்டுதே இப்ப புண்ணாக்கின் மகிமை😎?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

மூன்று மாதத்தில் தயாராக வேண்டிய கோழி 22 நாட்களில் தயாராகி KFCயில் பொரித்து இருப்பதை உண்பது கவுரவம் மேன்மக்கள் போல் விளம்பரங்கள் உள்ள உலகில் இதைவிட கூடிய அசம்பாவிதம் நடக்கும் நடக்கபோவுது .

இந்த இறைச்சிகளை உண்பதால் தான் பெண்களுக்கு பல ஹோர்மோன் மாறுதல்கள் ஏற்படுகின்றது என முன்னர் வாசித்த ஞாபகம்.

11 hours ago, பெருமாள் said:

செம்மலை கராச்சி  காட்டில் மேயும் மாட்டில் ஒன்றரை போத்தில் பால் வந்தாலே அதிசயம் இங்கு நிண்டுகொண்டு உணவு சாப்பிடும் மாட்டுக்கு மட்டும் 3௦ லிற்றர் பால் வருகுதாம் எல்லாம் ரசயான உணவுகள் உட் கொண்டால் மாடு என்ற பெயரில் நாளை மாமிச குவியல் பால் தரும் காலம் கிட்டத்தான் .

எல்லாம் அடிக்கிற ஊசி செய்யிற வேலை......இதுகளாலைதான் புற்றுநோய்,மாரடைப்பு போன்ற நோய்கள் தலையிடி போல் சர்வசாதாரணமாக வந்துவிட்டதோ யாருக்குத்தெரியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

40 வயதுக்கு முன்னதாக மாதவிடாய் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

women

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மிக இளம் வயதில் பூப்படைதல் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதை போல இளம் வயதில் அதாவது 40 வயதுக்கு கீழ் மாதவிடாய் நின்றுப்போவதும் பெண்களிடத்திடல் பல உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இந்த மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது காலப்போக்கில் நிகழும் ஒன்றாக இருக்கும். அதாவது மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்களிடத்தே ஏற்படும் இயல்பான ஒன்றுதான். இது ஒரு நோயோ அல்லது குறைபாடோ அல்ல. ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொறுத்து அதன் தீவிரத்தை உணர முடிகிறது.

இயர்லி மெனோபாஸ் (Early menopause) என்றால் என்ன?

ஒரு பெண்ணுக்கு எந்த வித வெளிப்புற மற்றும் மருத்துவக் காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் வருவது நின்று போனால் மெனோபாஸ் எனப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு 45 வயதிலிருந்து 55 வயதில் மாதவிடாய் நின்று போதல் ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு இயல்பாக குறிப்பிட்ட வயதுக்குள் நின்றுப் போகாமல் 40 வயதுக்குள்ளாக மாதவிடாய் ரத்தப்போக்கு நின்று போவதை ‘இயர்லி மெனோபாஸ்’ என்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து நம்மிடம் உரையாடினார் மகப்பேறு மருத்துவர் திலகம்.

யாருக்கெல்லாம் இந்த இளம் வயது மாதவிடாய் நின்று போதல் பிரச்னை ஏற்படுகிறது?

பெண்களுக்கு பிறப்பின்போது ஃபாலிக்கல்ஸ் என்பது சுமார் 4 லட்சம் வரை இருக்கும். ஒவ்வொரு மாதவிடாயின்போதும் அது வெளியேறும். இறுதியாக அது சுமார் 300 லிருந்து 400 என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். ஆனால் இந்த ஃபாலிக்கல்ஸின் எண்ணிக்கை என்பது பிறப்பிலேயே குறைவாக இருந்தால் அவர்களுக்கு இளம் வயதில் மாதவிடாய் நின்று போதல் பிரச்னை ஏற்படும். க்ரோமோசோம் குறைபாடுடன் பிறப்பவர்கள் இம்மாதிரியான இளம் வயது மாதவிடாய் பிரச்னைகளுக்கு ஆளாக நேரலாம்.

 

வயிற்றில் புற்றுநோய், கருப்பையில் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களுக்கு சிகிச்சை எடுப்போர், பல்வேறு மருத்துவக் காரணங்களால் கருப்பையை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டோருக்கு இந்த இளம் வயதில் மாதவிடாய் நின்று போகும் பிரச்னை ஏற்படுகிறது. இளம்வயதில் மாதவிடாய் நின்று போதலை ‘premature ovarian failure’ என்று சொல்கிறார்கள்.

மரபு வழியாகவும் இது ஏற்படுகிறது. 90 சதவீத அளவில் மரபு வழியாக ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம், ஒரு சிலர் பூப்படையாமல் மாதவிடாய் நின்று போதலுக்கான அறிகுறிகள் ஏற்படும். அதனை ப்ரைமரி அமிநோரியா (primary amenorrhea) என்று அழைக்கிறார்கள். இந்த மாதிரி நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் இளம் வயதிலேயே மருத்துவரை அணுக வேண்டும். வயது கடந்துவிட்ட பிறகு இதற்கு ஒன்றும் செய்ய இயலாது. இளம் வயதில் வரும்போது ஹார்மோனல் தெரப்பி போன்ற சிகிச்சைகளை அவர்களுக்கு அளிக்க முடியும்.

எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி மிக அவசியம். எனவே இந்த ஈஸ்ட்ரோஜன் குறையும் போது (முன்கூட்டியே மெனோபாஸ் ஆகும்போது) அவர்களுக்கு ஆஸ்டியோபீனியா அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புகளை வலுவற்றதாக மாற்றும் நோய்கள் ஏற்படுகின்றன. இதை கண்டறிந்து அறிகுறிகளின் ஆரம்பக் கட்டத்தில் வந்தார்கள் என்றால் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் டி3 போன்ற மாத்திரைகளை வழங்க முடியும்.

women

பட மூலாதாரம்,GETTY IMAGES

அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்னென்ன?

ஹாட் ஃப்ளஷஸ் (முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் திடீர் வெப்பத்தை உணர்தல்), பிறபுறுப்பில் உலர்த்தன்மை, தூக்கமின்மை, தோல் கருமையடைதல், தலைவலி, உணர்வுகளில் திடீர் மாற்றம், அதீத முடி உதிர்தல் போன்றவை மெனோபாஸின் பொதுவான அறிகுறிகள். அந்தந்த அறிகுறிகளுக்கு கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பெறும்.

மாதவிடாய் நின்று போவதை எவ்வாறு கண்டறிவது?

Thilagam

மெனோபாஸ் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வரும். இம்மாதிரியான அறிகுறிகளை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் சென்று அதிக ரத்தப்போக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஏனென்றால் அதிக ரத்தப்போக்கால் ரத்த சோகை, இதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.தேவைப்படும் சூழல்களில் ஹார்மோன் அளவுகளை பரிசோதனை செய்துவிட்டு அதற்கேற்றாற்போல சிகிச்சைகளும் வழங்கப்படும்.

முறையற்ற மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

மாதவிடாய் நின்றுப் போகும் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் அதீத ரத்தப் போக்கு போன்ற அறிகுறிகள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட காலம் வரை இருக்கும்.

சிலருக்கு இந்த மாதவிடாய் நின்று போதல் என்பது இயல்பானதாக இருக்கும். சிரமங்கள் இருந்தாலும் அது தாங்கிக் கொள்ளக் கூடிய அளவில் இருக்கும். ஆனால் சிலருக்கு மருத்துவரை அணுகும் நிலை ஏற்படும்.

உடலை எப்படி மெனோபாஸிற்கு தயார் செய்வது?

பொதுவாக புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். இதில் ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் இருக்கும். கிட்னி பீன்ஸ், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளலாம். போதுமான தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி போன்றவற்றால் மெனோபாஸின் விளைவுகளை சற்று சமன் செய்ய முடியும். சத்தான உணவின் மூலம் மொனோபாஸுக்கு முந்தைய அறிகுறிகளை எளிதாக எதிர்கொள்ளலாம்.

மெனோபாஸின் வெவ்வேறு கட்டங்கள்?

இந்த மெனோபாஸில் ப்ரீமெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட்மெனோபாஸ் என மூன்று கட்டங்கள் உள்ளன. அதாவது மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய கட்டம், மாதவிடாய் நின்றுபோதல், மாதவிடாய் நின்று போதலுக்கு பிந்தைய கட்டம். ப்ரீ மெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட் மெனோபாஸ் ஆகிய மூன்றுக்கும் ஒரு சில அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஒரு வருட காலத்திற்கு மாதவிடாய் வரவில்லை என்ற நிலைக்கு பிறகு வரும் கட்டத்தை போஸ்ட் மெனோபாஸ் என்கிறோம். பொதுவாக இந்த கட்டத்தில் தனிநபர்களை பொறுத்து அறிகுறிகள் மாறுபடுகின்றன.

சர்வதேச அளவில் இந்த போஸ்ட்மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐநா தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 26 சதவீத அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இதுவே 10 வருடங்களுக்கு முன்பு 22 சதவீதமாக இருந்தது என்கிறது ஐநா.

https://www.bbc.com/tamil/articles/cw4wzl81y33o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 வயதாகியும் மாதவிடாய் தொடங்கவில்லை - இது கவலைதரும் ஒன்றா?

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,டாக்டர். ஷில்பா சிட்னிஸ் ஜோஷி
  • பதவி,பிபிசி மராத்திக்காக
  • 25 ஏப்ரல் 2023, 04:26 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"அவளுக்கு இன்னும் மாதவிடாய் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் அவளுக்கு பதினாறு வயது பூர்த்தி ஆகிறது," என்று ஒரு தாய் என்னிடம் மிகவும் கவலைப்பட்டார்.

உண்மையில், இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. ஆனால் அப்படி நடக்கும் போது, அதை மிகவும் நெருக்கமாக சரிபார்க்க வேண்டும்.

இந்த பிரச்னையில் மாதவிடாயை விட அந்த பெண்ணின் உடல் வளர்ச்சி குறித்து முதலில் சோதனை செய்ய வேண்டும். பெண்கள் பருவமடையும் போது அவர்களுக்கு மார்பக வளர்ச்சி மெதுவாகத் தொடங்கும். அவர்களின் அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி (Pubic Hair) வளர ஆரம்பிக்கிறது. இவை இரண்டாம் நிலை பாலின முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி எல்லாம் சரியாக இருந்தால் அந்த பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் அளவு இயல்பாக இருப்பதாக கூறமுடியும்.

பின்பு, உடலின் இனப்பெருக்க அமைப்பில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

 

மேலே குறிப்பிடப்பட்ட சிறுமியின் சோனோகிராஃபி, பிறக்கும் போதே அவருக்கு கருப்பை இல்லாமல் இருந்ததை காட்டியது.

இந்த தகவல் அந்த சிறுமியின் பெற்றோருக்கு வேதனையை தரும் ஒன்றாக அமைந்தது. ஆனால் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த சிறுமிக்கு திருமண வயது வந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்படும். பெரிட்டோனியத்தை கீழே இழுப்பதன் மூலம் ஒரு செயற்கை பிறப்புறுப்பு உருவாக்கப்படும். அதன்மூலம் அந்த பெண்ணால் உடலுறவு கொள்ள முடியும்.

இந்த அறுவை சிகிச்சையில், கருமுட்டை பிறப்புறுப்புக்கு நெருக்கமாக கொண்டு வரப்படும். அதனால் கருமுட்டை உள்ளே செலுத்தப்படும் விந்தணு பிரித்து எடுக்கப்பட்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை டெஸ்ட் டியூப் பேபியாக உருவாக்க முடியும்.

அப்படி ஒரு பெண்ணின் கருமுட்டையும், அவருடைய கணவரின் விந்தணுவும் இணைந்து உருவாகும் கருவை வெளியே எடுத்து, மற்றொரு பெண்ணின் கருப்பையில் வளர்க்கலாம். இதன் மூலம் அந்த பெண் தன் சொந்த குழந்தைக்கு தாயாக முடியும். இந்தப் பெண்ணுக்கு இயற்கை இழைத்த அநீதியை மருத்துவத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாக சரி செய்ய முடியும் என்பதுதான் அதன் பொருள்.

இதுபோன்ற பல நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் இன்று நம் வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளன. அதனால் நடப்பதை நினைத்து கவலைப்படுவதை விட நவீன மருத்துவம் தந்த பல்வேறு சிகிச்சைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு மகப்பேறு மருத்துவரிடமும் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இருக்கும் இரண்டு பொதுவான கேள்விகள் மாதவிடாயை சுற்றியே இருக்கின்றன. ஒன்று எனக்கு ஏன் மாதவிடாய் வரவில்லை. மற்றொன்று எனக்கு ஏன் மாதவிடாய் வருகிறது, அதாவது நான் ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை என்று தான் இருக்கிறது.

மாதவிடாய் வராமல் இருப்பதற்கான காரணங்கள்

மாதவிடாய், பெண்கள், உடல்நலம், சுகாதாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு பெண்ணின் உடலும் மனமும் ஹார்மோன் சுரப்பதற்கு ஏற்ப செயல்படுகின்றன. அதனால் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதற்கு உடலும், மனதும் சமநிலையில் இருப்பது அவசியம்.

பெண்கள் பருவமடையும் போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்குகிறது.

அதற்கு பிறகு மாதவிடாய் தொடங்குகிறது. ஒரு பெண்ணுக்கு பதினைந்து வயது வரை மாதவிடாய் வரவில்லை என்றால், அது அசாதாரணமாகக் கருதப்படும்.

அத்தகைய சூழ்நிலையில் மாதவிடாய் வராத காரணத்தைக் கண்டறிய அந்த பெண்ணுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்ய வேண்டியது அவசியம்.

உடலின் இனப்பெருக்க அமைப்பில் பிறக்கும் போதே ஏற்படும் சில அசாதாரண காரணங்களால் மதவிடாய் வராமல் போகலாம்.

சில சமயம் மரபணு கோளாறு காரணமாக மாதவிடாய் வராமல் இருக்கலாம். அப்படியான சூழலில், சில பிரச்னைகளை மருத்துவ சிகிச்சை மூலமாக சரி செய்ய முடியும். ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த பிரச்னை தீர்வே இல்லாத ஒன்றாகக்கூட இருக்கும்.

சிலருக்கு குறைபாடுள்ள ஹைமன் ஒரு பிரச்னையாக இருக்கலாம். அத்தகைய பிரச்னை உள்ள பெண்கள் மாதவிடாய் தொடங்கியதை கவனிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் மாதவிடாய் காலங்களில் சில நாட்களுக்கு, அவர்கள் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

சோனோகிராபி, பிறப்புறப்பு பரிசோதனை மூலம் இந்தப் பிரச்சனையை உடனடியாகக் கண்டறிய முடியும். அதற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி, பிறப்புறுப்பின் வாயில் ஒரு சின்ன கீறல் போடப்படும்.

அங்கு தேங்கி இருக்கும் ரத்தம் வெளியேறிய பிறகு, அந்த பெண்ணின் பிறப்புறப்பு சரியாகிறது. ஆனால் இந்த பிரச்னையை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.

மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது டர்னர் சின்ட்ரோம். வழக்கமான பெண்களுக்கு XX எனப்படும் இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் டர்னர் சின்ட்ரோம் பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் ஒரே ஒரு X குரோமோசோம் மட்டுமே இருக்கும்.

இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி சரியாக இருக்காது. ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக மாதவிடாய் ஏற்படுவதும் தாமதம் ஆகும்.

இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு வேறு சில அறிகுறிகளும் தென்படும். மிகக் குட்டையான உயரம், அகலமான கழுத்து, சிறிய காது, அகன்ற மார்பு, முழங்கையிலிருந்து சற்று நீண்டு நிற்கும் கைகள், மாறுபட்ட வடிவத்தில் உச்சந்தலை என இவர்களின் தோற்றத்தில் இதுபோன்ற பாதிப்புகள் காணப்படும்.

இந்த பிரச்னை உள்ள பெண்களில் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டால், சிகிச்சை மூலமாக மாதவிடாய் வருவதை இயல்பாக்கி, இவர்களை தாய்மை அடைய வைக்க முடியும்.

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணம்

மாதவிடாய், பெண்கள், உடல்நலம், சுகாதாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

மாதவிடாய் தொடங்கி சில வருடங்கள் வரை ஒழுங்கற்ற நிலையில் இருப்பது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலோ, பெண்ணின் எடை கூடினாலோ மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது PCODயின் தொடக்கமாக இருக்கலாம்.

மெனோபாஸ் வயதை நெருங்கும் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது நீண்ட நாட்களுக்கு ரத்தபோக்கு வந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

திருமணமான பெண்களுக்கு மாதவிடாய் வருவது தாமதமாகும் போகும், அது கர்ப்பம் என கருதப்படுகிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையின் தாக்கத்தால், மாதவிடாய் ஒருசிலருக்கு தள்ளிப் போகிறது.

மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் கூட மாதவிடாய் தள்ளிப்போகும். ஆனால் அடிக்கடி இப்படி நடந்தால் அது நல்லதல்ல.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை உருவாவது அவசியமானது. ஒருவருக்கு சினைமுட்டை உருவாகவில்லையெனில், அதன் விளைவாக கருப்பையில் நீர்க்கட்டி உருவாகிறது.

அதனால் மாதவிடாய் வருவது தள்ளிப்போகிறது. இந்த பிரச்னை பற்றி சோனோகிராமில் கண்டறியப்பட்டால், மாத்திரை மூலம் ஹார்மோன் சமநிலை சரி செய்யப்பட்டு மாதவிடாய் வர வைக்கப்படும். இதன்மூலம் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் குறையும்.

தைராய்டு மாத்திரைகளை நம்பி ஏமாறாதீர்கள்

மாதவிடாய், பெண்கள், உடல்நலம், சுகாதாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

உடல் உழைப்பு இல்லாமை, உணவில் கட்டுப்பாடு இல்லாததால் அதிக எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதால், எடை மேலும் அதிகரிக்கிறது. இந்த தீய சுழற்சியை நிறுத்த, ஒருவர் வழக்கமான உடற்பயிற்சியை செய்ய வேண்டும். மேலும் உணவில் கார்போஹைட்ரேட் (அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை, மாவு, எண்ணெய்) குறைக்க வேண்டும்.

தைராய்டு, ப்ரோலாக்டின் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மாதவிடாய் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், முறையான சிகிச்சை இல்லாமல், எவ்வளவு முயறி செய்தாலும் உடல் எடை குறைதல், மாதவிடாய் பிரச்னைகள் தீராது.

ஒரு மாத்திரை பெண்களின் ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். எனவே தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்வது பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.

உடலில் இருந்து எதையும் வெளியே எடுப்பதை விட, ஒரு பெண் தனது ஆரோக்கியத்தையும், தன் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உணர்ந்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதனால் சில பிரச்னைகள் எழுந்தாலும், அவற்றின் கடுமையான விளைவுகளைத் தவிர்க்கலாம்.

(இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள், பிபிசியின் கருத்துகள் அல்ல)

https://www.bbc.com/tamil/articles/cljgr1517w8o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.