Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதினம் தளத்தின் செய்தி & தானியங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா.

ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம்.

ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

நன்றி,

சபேஸ்

நானும் இதைப்பற்றி தெரியப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சபேஸ் அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். செய்தியில் உள்ள ஒரு பகுதியைக் குறிப்பிட்டு கருத்துக்கள் எழுதும் போது, அதனுடைய முழு விபரத்தையும் அறிந்து கொள்ள அப்பக்கத்திற்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டி ஏற்படலாம். (புதினம் அகப்பக்கத்திற்கான traficஐ அதிகரிப்பதற்கு யாழ்க்களம் துணை நிற்பதாக கூட மற்றைய மற்றைய தளங்கள் புரிந்து கொள்ளக் கூடும்)

எனக்கு இந்த விடயத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிலருக்கு இந்த ஏற்பாடு விருப்பம் இல்லாமல் இருக்ககூடும். ஒவ்வொரு முறையும் புதிய விண்டோ புதினம் செய்தியை வாசிப்பதற்கு ஒப்பின் பண்ணுமாய் இருந்தால், வாசகர்கள் நேரடியாக புதினம் இணையத்திற்கே செல்லலாம் தானே! இங்கு ஏன் வரவேண்டும்..??

எனினும், ஒருவிடயம் கவனிக்க வேண்டும். யாழ் இணையம் ஒரு கருத்தாடல் தளம். செய்திச் சேவை அல்ல. அந்த வகையில் பார்த்தால் புதிய ஏற்பாடு வரவேற்கத்தக்கதே. அதாவது குறிப்பிட்ட இணைப்பை அழுத்தி செய்தியை இன்னொரு தளத்தில் வாசித்துவிட்டு பின் யாழில் அதுபற்றி இங்கு யாழில் கருத்தாடல் செய்தல்.

வணக்கம் சபேஸ்,

உங்களின் ஆதங்கம் சரியானதே. அநேகரது கருத்துக்களும் இப்படித்தான் இருக்கிறது. ஒரே இடத்தில் ஒரே விடயம் தொடர்பான வெவ்வேறு ஊடகச் செய்திகளைப் படிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதே பலரது கருத்து. அதேநேரத்தில், அந்தந்த செய்தித் தளங்கள் தமக்கான வாசகர் வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றும், தமது தளத்துக்கு வந்தே செய்திகளைப் படிக்கவேண்டும் என்றும் விருப்பப்படுவார்கள். அவர்கள் செய்திகளை தாயகத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். அதற்கான செலவுகள் அதிகம். அவர்களது உழைப்பு அதிகம். எனவே, அவர்களுடைய உழைப்பிலும், அவர்களது செலவிலும் யாழ் இணையம் பெயர் வாங்கிக் கொள்வதும், அவர்களின் வாசகர் வட்டத்தை இழுத்து வைத்திருப்பதும் நியாயமானதாக இருக்காது. இது புதினம் தளத்துக்கு மட்டுமல், ஏனைய தமிழ் செய்தித் தளங்களுக்கும் பொருந்தும். உடனுக்குடன் நாம் யாழ் இணையத்தில் செய்திகளை இணைக்கிறபோது அவர்கள் பாதிக்கப்படுவதாக உணரக்கூடும். எனவே தான் செய்திகளை நாம் உடனுக்குடன் இணைக்கிறபோதும் அவற்றின் சுருக்கத்தை மட்டுமே இணைத்து விரிவான செய்தியை அந்தத் தளத்தில் சென்று பார்வையிடச் செய்கிறோம். ஏனைய செய்தித் தளங்களும் இதனையே விரும்பின் எமக்கு அறியத் தரலாம். அதற்கு அவர்களுடைய rss செய்தியோடை தேவைப்படுகிறது.

செய்தி தொடர்பான கருத்தாடல்களினை செய்கிறபோது முழுச்செய்தியையும் மேற்கோள் காட்டி நீங்கள் எழுதலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி வலைஞன். நீங்கள் சொல்வதும் நியாயமாகதான் இருக்கு.

என்ன, ஒரே இடத்தில் வாசிச்சு பழகிப்போய்ட்டுது.... :P

உதில எனக்கும் உடன்பாடில்லை.

மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் முடியுமட்டுமாவது புதினம் செய்திகளை ஒரு 4...5 இடத்தில் ஒட்டி வைக்கிறது நல்லம்.

அக்கினி மழை மணலாறு வேலி மன்னார் வேலி நாகர்கோவில் -கிளாலி வேலி வவுனியா வேலிக்காலை பெய்ய பிராந்தியம் உலகம் பிரபஞ்சம் என்று எல்லாம் ஒரேயடியா அதிர நாம எல்லாரும் வந்து ஸ்கோர் பாக்க வெளிக்கிட புதினம் தளம் தனியத் தாங்காது.

உது சரி வராது அண்ணா. இது ஒரு கருத்தக்களம் என்ற அடிப்படையில் செய்தின் மூலத்துக்கு ஒரு

தொடர்பை(link) ஏற்படுத்தி விட்டால் போதுமானது.உலகத்தில் உள்ள பெரும்பாலான

கருத்துக்களங்கள்(forum) இப்படித்தான் செயல்படுகின்றன. உங்களுக்கு மட்டுமேன் இப்படி திடீர் ஆசை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது சரி வராது அண்ணா. இது ஒரு கருத்தக்களம் என்ற அடிப்படையில் செய்தின் மூலத்துக்கு ஒரு

தொடர்பை(link) ஏற்படுத்தி விட்டால் போதுமானது.உலகத்தில் உள்ள பெரும்பாலான

கருத்துக்களங்கள்(forum) இப்படித்தான் செயல்படுகின்றன. உங்களுக்கு மட்டுமேன் இப்படி திடீர் ஆசை.

நான் பார்த்த பெரும்மாலான கருத்துக்களங்கள் செய்திகளை இணைப்பதில்லை. தாங்கள் வைக்கும் கருத்துக்கு ஆதரவாக வலுச்சேர்ப்பதற்காக செய்தியின் இணைப்பை கொடுப்பதை பார்த்திருக்கிறேன்.

அப்படி இணைப்பை கொடுத்தாலும் அதுதொடர்பாக கருத்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு செய்திக்கு இணைப்பு கொடுப்பதற்காக மட்டுமே அதிகமான திரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் வலைஞன் சொன்ன காரணம் நியாயமாக படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதில எனக்கும் உடன்பாடில்லை.

மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் முடியுமட்டுமாவது புதினம் செய்திகளை ஒரு 4...5 இடத்தில் ஒட்டி வைக்கிறது நல்லம்.

அக்கினி மழை மணலாறு வேலி மன்னார் வேலி நாகர்கோவில் -கிளாலி வேலி வவுனியா வேலிக்காலை பெய்ய பிராந்தியம் உலகம் பிரபஞ்சம் என்று எல்லாம் ஒரேயடியா அதிர நாம எல்லாரும் வந்து ஸ்கோர் பாக்க வெளிக்கிட புதினம் தளம் தனியத் தாங்காது.

:lol::):):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.