Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

U.S. statement: 'we don't advocate talks with LTTE'

[TamilNet, Wednesday, 07 January 2009, 14:25 GMT]
The United States, a member of the Co-Chairs for the Sri Lankan peace process following the February 2002 Ceasefire Agreement brokered by Norway, in a statement issued after the Sri Lanka Army occupation of Ki'inochchi town in Vanni, said it does not advocate the Government of Sri Lanka to negotiate with the LTTE. "The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka," the U.S. statement said.

Full text of the statement issued by the U.S. Embassy in Colombo follows:

The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help hasten an end to the conflict. The U.S. believes that a lasting, sustainable peace can best be achieved if the Sri Lankan Government works now to reach a political solution that addresses the aspirations of all Sri Lankans, including Tamils, Muslims, and Sinhalese.

The United States does not advocate that the Government of Sri Lanka negotiate with the LTTE, a group designated by the United States since 1997 as a Foreign Terrorist Organization. However, we do believe that a broad range of other Tamil voices and opinions must be brought into a political process to reach a political solution that Tamils inside and outside of Sri Lanka see as legitimate. This will help assure Tamils that their rights are protected, that they have a say over important areas of their lives in geographical areas in which they predominate, and that they are an integral and respected part of an undivided Sri Lanka. At the same time, such as process would further delegitimize and erode the support of the LTTE in Sri Lanka and abroad.

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

வெளிப்படையாக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதென்பது சாதாரணமாகச் செய்யக்கூடியதல்ல.

அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முயன்றதாகக்குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இரு தமிழர்களும்  ஆயுதத் தரகர்கள் என்கிற போர்வையில் அவர்களுடன் தொடர்புகொண்ட உளவுத்துறையினராலேயே ஏமாற்றப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். ஆகவே, இந்த ஆயுத விற்பனை நாடகம் இவர்களைக் கைதுசெய்வதற்காகவே நடத்தப்பட்டிருக்கலாம் என்பது சாத்தியம் தானே? 

அவுஸ்த்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களின்போது முன்னால் நின்று செயற்பட்டவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டங்களின்போது சிங்களவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பிற்காகவே கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கைகலப்பில் சிங்கள மாணவர் ஒருவர் மீது திராவகம் ஒன்றை வீசினார் என்ற குற்றச்சாட்டில் இன்றுவரை ஒருவர் சிறையில் இருப்பதாகக் கேள்வி.  

இந்த போர்த்திட்டம் பற்றி நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆனால், பல விடயங்கள் நடந்திருக்கின்றன. மூன்று வலயங்களாகப்  பிரிக்கப்பட்ட தமிழர் தாயகம். செறிவான வான்வழி மற்றும் பல்குழல்த் தாக்குதல். ஊடுருவல்த் தாக்குதல்கள். முற்றான இராணுவ முற்றுகை, கொடூரமான உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் தடை. பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலை. மனிதாபிமான அவலம். மூன்றுவருடத் திட்டம். இவையெல்லாமே நடந்திருக்கின்றன. அடுத்தது, இத்தட்டத்தினை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்காது என்று சொல்வதற்கு எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. 

இதனோடு தொடர்பற்றபோதும், இன்னொரு விடயத்தையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அமெரிக்கா இறுதிவரை புலிகள் மீதான போருக்கு ஆதரவாகவே இருந்தது. கிளிநொச்சி ராணுவ வசமாகும்போதுகூட, அரசாங்கத்தின் வெற்றியைப் பாராட்டிய அமெரிக்கா, பயங்கரவாதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கையரசாங்கம் போவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்று கூறியிருந்தது. முற்றான இனக்கொலை நடந்தேறுவதற்கு வெறும் 4 மாதங்களுக்கு முன்னரான அமெரிக்காவின் நிலைப்பாடு இது. 

1982 இலிருந்து 2009 வரை ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையென்பது மாறாமலேயே இருந்து வந்தது. யுத்தம் முடிவடைந்தபின்னர் அதன் கொள்கையில் ஏற்பட்ட ஒரே மாற்றம் தமிழர்களின் அவலங்களை வைத்து இலங்கையில் கால்ப்பதிப்பதுதான். 14 வருடங்களாகியும் , ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும், இன்றுவரை அமெரிக்கா தமிழர்களுக்கான நீதியைத் தர மறுப்பதன் காரணம் என்ன? இரட்டை முகம் கொண்ட கழுகு என்பது சரியாகப் பொருந்திப் போகிறது. 

ரஸ்ஸியா செய்வது ஆக்கிரமிப்பும், அழித்தொழிப்பும். இதில் மாற்றுகருத்தில்லை. இதேவகையான இனவழிப்பைச் சந்தித்த நாம் உக்ரேன் மக்களுக்காக இரங்கவேண்டும். 

ரஸ்ஸியாவும், அமெரிக்காவும் ஒரே வகையானவை. மனித அழிவுகள் அவற்றின் கண்களுக்குத் தெரிவதில்லை. பலமும், அதிகாரமும், பணமும் மட்டுமே அவற்றிற்குத் தேவையானவை. கொலைகாரர்கள், பிணந்திண்ணிப் பேய்கள். 

இக்கட்டுரை 2007 கார்த்திகையில் எழுதப்பட்டது அண்ணை. கதையில்லை. இதில் கூறப்படும் பல விடயங்கள் நடந்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாக்கி அதற்கு "ப்ரொஜெக்ட் பீக்கன்" என்று பெயர் வைத்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே அப்படியொரு பெயருடன் இத்திட்டத்தினை இலங்கையரசு முன்வைத்திருக்கலாம். 

வைக்கப்பட்ட பெயர், யார் வைத்தார்கள், யாரிடம் இத்திட்டத்தினை முன்வைத்தார்கள் என்கிற விடயங்களைத் தூக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது உண்மையாகவே நடந்த இனவழிப்புத்தான் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். 

அமெரிக்காவோ அல்லது எந்தவொரு வெளிநாடுமோ ஈழத்தமிழருக்கு நீதியைத் தர வேண்டும், அப்படித் தராவிட்டால் அவர்கள் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதான கருத்தை நீங்கள் ஊக்குவிக்கவில்லையென நம்புகிறேன். ஏனெனில், நீதி, அறம் இவற்றை முழுமையான அடிப்படையாக வைத்து எந்த வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கையும் இல்லை. எங்களுக்கு முன்னர் நடந்த ஆர்மேனியப் படுகொலையே சில ஆண்டுகள் முன்பு தான் அமெரிக்க செனட்டினால் துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வழியாக ஏற்றுக் கொள்ளப் படும் முயற்சி நடந்தது. நாம் இன்னும் அந்த வாசல் படியையே நெருங்கவில்லை.

கைது விடயத்தில், அமெரிக்காவில் கைதானவர்கள் அமெரிக்க புலனாய்வின் undercover நடவடிக்கையால் மாட்டுப் பட்டோர். இது சதியல்ல, உண்மையாகவே அவர்கள் undercover agent ஐ நம்பி ஆயுதம் வாங்கச் சென்றோர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

 

வைக்கப்பட்ட பெயர், யார் வைத்தார்கள், யாரிடம் இத்திட்டத்தினை முன்வைத்தார்கள் என்கிற விடயங்களைத் தூக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது உண்மையாகவே நடந்த இனவழிப்புத்தான் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். 

உண்மை 

முட்டையா? கோழியா?? என்பது தான் தெரியவில்லை 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அமெரிக்காவோ அல்லது எந்தவொரு வெளிநாடுமோ ஈழத்தமிழருக்கு நீதியைத் தர வேண்டும், அப்படித் தராவிட்டால் அவர்கள் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதான கருத்தை நீங்கள் ஊக்குவிக்கவில்லையென நம்புகிறேன்.

இல்லை, நான் இதனைச் சதியென்று நம்பவில்லை. ஆனால், எங்களுக்காக உண்மையாக இவர்கள் செயற்படவில்லையென்பதை நம்புகிறேன். இன்றுவரை ஐ நா வில் எமக்காகக் குரல் கொடுப்பதுபோல இவர்கள் காட்டுவது பாசாங்கென்பதை நம்புகிறேன். 

 

11 minutes ago, Justin said:

கைது விடயத்தில், அமெரிக்காவில் கைதானவர்கள் அமெரிக்க புலனாய்வின் undercover நடவடிக்கையால் மாட்டுப் பட்டோர். இது சதியல்ல, உண்மையாகவே அவர்கள் undercover agent ஐ நம்பி ஆயுதம் வாங்கச் சென்றோர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஆயுத முகவர்களாக நாடகமாடியே இவர்களை கைதுசெய்தார்கள் என்று அறிந்திருந்தேன். புலிகளுக்காகவே இவர்கள் ஆயுதம் வாங்கச் சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. இவர்கள் முன்னாலிருந்து செயற்பட்ட செயற்பாட்டாளர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இல்லை, நான் இதனைச் சதியென்று நம்பவில்லை. ஆனால், எங்களுக்காக உண்மையாக இவர்கள் செயற்படவில்லையென்பதை நம்புகிறேன். இன்றுவரை ஐ நா வில் எமக்காகக் குரல் கொடுப்பதுபோல இவர்கள் காட்டுவது பாசாங்கென்பதை நம்புகிறேன். 

 

ஆயுத முகவர்களாக நாடகமாடியே இவர்களை கைதுசெய்தார்கள் என்று அறிந்திருந்தேன். புலிகளுக்காகவே இவர்கள் ஆயுதம் வாங்கச் சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. இவர்கள் முன்னாலிருந்து செயற்பட்ட செயற்பாட்டாளர்களா? 

செயல்பாட்டு மட்டத்தில் எவ்வளவு முன்னணியில் இருந்தார்களென அறியேன், ஆனால் உள்ளூர் ஈழத்தமிழர்களிடையே அறியப் பட்டவர்கள், சில அமைப்புகளில் இருந்திருக்கலாம்.

ஆனால், கைது செய்யப் பட்ட முறையில் எந்த வித்தியாசமும் ஏனைய கேஸ்களோடு ஓப்பிடுகையில் இல்லை.  Undercover FBI agents மூலம்  கிரிமினல்கள் கைது செய்யப் படுவது அமெரிக்காவில் சாதாரணம். ஒரு தகவலின் படி, இவர்களை அழைத்துச் சென்ற FBI ஏஜென்ற் முன்னிலையிலேயே இவர்கள் வன்னிக்குத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், இதை விடப் பலமான ஆதாரம் குற்றத்தை நிரூபிக்க அரசுக்குத் தேவைப்படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

செயல்பாட்டு மட்டத்தில் எவ்வளவு முன்னணியில் இருந்தார்களென அறியேன், ஆனால் உள்ளூர் ஈழத்தமிழர்களிடையே அறியப் பட்டவர்கள், சில அமைப்புகளில் இருந்திருக்கலாம்.

ஆனால், கைது செய்யப் பட்ட முறையில் எந்த வித்தியாசமும் ஏனைய கேஸ்களோடு ஓப்பிடுகையில் இல்லை.  Undercover FBI agents மூலம்  கிரிமினல்கள் கைது செய்யப் படுவது அமெரிக்காவில் சாதாரணம். ஒரு தகவலின் படி, இவர்களை அழைத்துச் சென்ற FBI ஏஜென்ற் முன்னிலையிலேயே இவர்கள் வன்னிக்குத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், இதை விடப் பலமான ஆதாரம் குற்றத்தை நிரூபிக்க அரசுக்குத் தேவைப்படவில்லை!

இப்போது இவர்கள் எங்கே? விடுதலையாகி விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

"These defendants allegedly sought to obtain, through a variety of means, weapons and materials to carry out a deadly campaign of violence. We will use every tool in our power to disrupt the activities of those who seek to harm others, both here and abroad," the US attorney general, Alberto Gonzales, said.

புலிகளுக்காக ஆயுதம் வாங்கியவர்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதியின் கருத்து இது. அவருக்கே நிச்சயமாகத் தெரியும் இவ்வாயுதங்கள் அமெரிக்கர்களுக்கெதிராகவோ அல்லது அமெரிக்காவிலோ பாவிக்கப்படப்போவதில்லையென்று. மேலும், தமிழர்கள் தம்மைக் காத்துக்கொள்ளவே ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதும், சிங்களவர்களை அழித்து அவர்களின் நாட்டினைப் பிடிக்க அல்ல என்பதும் அமெரிக்கர்களுக்குத் தெரியாதது அல்ல. 

Leslie Wiser, the FBI special agent-in-charge in Newark, New Jersey, said: "This weekend's operation has severely impaired the Tamil Tigers' ability to acquire funding and weapons for their ongoing terror operations in Sri Lanka."

அவர்களைக் கைதுசெய்த எப் பி ஐ அதிகாரி, இது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கும், முடக்கிவிடும் என்று கூறுகிறார்.  தற்காப்பிற்காகப் போராடுவதற்கும், இன்னொருவனை அழித்து ஆக்கிரமிப்பதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை இவர்கள் அறியவில்லையா? 

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான அமெரிக்கர்களின் புரிதல் எவ்வகையானது எனும் கேள்வி எனக்கு ஏற்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:

"These defendants allegedly sought to obtain, through a variety of means, weapons and materials to carry out a deadly campaign of violence. We will use every tool in our power to disrupt the activities of those who seek to harm others, both here and abroad," the US attorney general, Alberto Gonzales, said.

புலிகளுக்காக ஆயுதம் வாங்கியவர்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதியின் கருத்து இது. அவருக்கே நிச்சயமாகத் தெரியும் இவ்வாயுதங்கள் அமெரிக்கர்களுக்கெதிராகவோ அல்லது அமெரிக்காவிலோ பாவிக்கப்படப்போவதில்லையென்று. மேலும், தமிழர்கள் தம்மைக் காத்துக்கொள்ளவே ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதும், சிங்களவர்களை அழித்து அவர்களின் நாட்டினைப் பிடிக்க அல்ல என்பதும் அமெரிக்கர்களுக்குத் தெரியாதது அல்ல. 

Leslie Wiser, the FBI special agent-in-charge in Newark, New Jersey, said: "This weekend's operation has severely impaired the Tamil Tigers' ability to acquire funding and weapons for their ongoing terror operations in Sri Lanka."

அவர்களைக் கைதுசெய்த எப் பி ஐ அதிகாரி, இது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கும், முடக்கிவிடும் என்று கூறுகிறார்.  தற்காப்பிற்காகப் போராடுவதற்கும், இன்னொருவனை அழித்து ஆக்கிரமிப்பதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை இவர்கள் அறியவில்லையா? 

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான அமெரிக்கர்களின் புரிதல் எவ்வகையானது எனும் கேள்வி எனக்கு ஏற்படுகிறது. 

கேஸ் முழு விபரமும் கீழே. இருவருக்கு நீண்ட காலத் தண்டனை, அவர்கள் கனேடியர்கள். சிலர் விடுதலையாகியுள்ளனர்.

https://www.justice.gov/archive/usao/nye/pr/2006/2006Aug21.html

அல்பேர்ட்டோ கொன்சலஸ் அந்த நேரம் சட்டமா அதிபர் - நீதிபதியல்ல.  சி.ஐ.ஏ யின் extraordinary rendition  சட்ட ரீதியானது என புஷ்சுக்கு ஆலோசனை கொடுத்த ஒருவர். அவர் மட்டுமல்ல, திணைக்களங்களில் இருக்கும் அமெரிக்கர்கள் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்துவதை மட்டுமே செய்வர். கொள்கை மாற்றம் மெல்ல மெல்ல காங்கிரஸ், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூலம் மட்டும் தான் நிகழும், அதிகாரிகள் கொள்கைகளைத் தீர்மானிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

https://suresh.law/#services

https://en.wikipedia.org/wiki/Suresh_Sriskandarajah

Suresh Sriskandarajah is a Canadian citizen who pleaded guilty to U.S. charges of conspiring to provide material support to the Tamil Tigers, a Sri Lankan terrorist organization. He was sentenced to two years in U.S. prison.[1][2]

Sriskandarajah was born in Sri Lanka. In 1989 his family fled to Montreal to avoid the violent civil war taking place in the northern part of the country.

In 2004 Sriskandarajah used Hotmail, a US company, to communicate regarding the Tamil Tigers.

Sriskandarajah was arrested in 2006 by Canadian authorities at the request of US authorities. He was released on bail pending his extradition challenges which was heard by the Supreme Court of Canada in 2012. Shortly after being extradited to USA, Sriskandarajah pleaded guilty and was sentenced to 2 years in prison.[3]

Both the Sri Lankan and Indian governments each sent a diplomatic note to ask U.S. to abandon the prosecution against Sriskandarajah “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people” wrote Judge Raymond Dearie of the U.S. District Court. “Given the history of Sri Lanka’s prolonged and bitter conflict, the request is indeed an extraordinary initiative that evidences Suresh’s legitimate and admirable work to secure a lasting and just resolution of the tragic conflict. [4] The civil war in Sri Lanka came to a bloody end when the Tamil Tigers were defeated in 2009 along with a heavy civilian casualty.[5]

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sasi_varnam said:

 

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

இத்திரிக்கும் எனது  கேள்விக்கும் சம்பந்தமில்லாத  விட்டாலும்

தெரிந்த  கொள்வதற்காக  கேட்கிறேன்

குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு

சிறை இருந்து விடுதலையானோர்

இப்படியான பதவிகளுக்கு  மீண்டும் வரமுடியுமா???

பிரான்சில் முடியவே  முடியாது

ஒரு நாள்  சிறையில்  இருந்தாலே போற இடமெல்லாம்  சிவப்பில் வந்து நிற்கும்

இத  அடுத்த  தலைமுறையைக்கூட  தொடரும் பாதிக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

 

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

https://suresh.law/#services

https://en.wikipedia.org/wiki/Suresh_Sriskandarajah

Suresh Sriskandarajah is a Canadian citizen who pleaded guilty to U.S. charges of conspiring to provide material support to the Tamil Tigers, a Sri Lankan terrorist organization. He was sentenced to two years in U.S. prison.[1][2]

Sriskandarajah was born in Sri Lanka. In 1989 his family fled to Montreal to avoid the violent civil war taking place in the northern part of the country.

In 2004 Sriskandarajah used Hotmail, a US company, to communicate regarding the Tamil Tigers.

Sriskandarajah was arrested in 2006 by Canadian authorities at the request of US authorities. He was released on bail pending his extradition challenges which was heard by the Supreme Court of Canada in 2012. Shortly after being extradited to USA, Sriskandarajah pleaded guilty and was sentenced to 2 years in prison.[3]

Both the Sri Lankan and Indian governments each sent a diplomatic note to ask U.S. to abandon the prosecution against Sriskandarajah “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people” wrote Judge Raymond Dearie of the U.S. District Court. “Given the history of Sri Lanka’s prolonged and bitter conflict, the request is indeed an extraordinary initiative that evidences Suresh’s legitimate and admirable work to secure a lasting and just resolution of the tragic conflict. [4] The civil war in Sri Lanka came to a bloody end when the Tamil Tigers were defeated in 2009 along with a heavy civilian casualty.[5]

இவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் அல்ல என நினைக்கிறேன். இவர் கனேடிய அரசினால் 2006 இல் கைது செய்யப் பட்டு, 2012 வரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தலை எதிர்த்துப் போராடியவர், இதற்காக உரிய சட்ட உதவிகள் கனடாவில் கிடைத்தன. இறுதியில் 2 வருடங்கள் சிறை கிடைத்தது, plea deal ஆக இருக்கலாம்.

நான் மேலே தந்த இணைப்பில் இருக்கும் கேஸ் வேறு: நால்வருக்கு 15 முதல் 25 வருடங்கள் வரையான சிறை, அவர்களது துன்பம் இன்றும் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

இவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் அல்ல என நினைக்கிறேன். இவர் கனேடிய அரசினால் 2006 இல் கைது செய்யப் பட்டு, 2012 வரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தலை எதிர்த்துப் போராடியவர், இதற்காக உரிய சட்ட உதவிகள் கனடாவில் கிடைத்தன. இறுதியில் 2 வருடங்கள் சிறை கிடைத்தது, plea deal ஆக இருக்கலாம்.

நான் மேலே தந்த இணைப்பில் இருக்கும் கேஸ் வேறு: நால்வருக்கு 15 முதல் 25 வருடங்கள் வரையான சிறை, அவர்களது துன்பம் இன்றும் தொடர்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறது ஜஸ்டின். 
சுரேஸ் ஸ்ரீஸ்காந்தா  கூட இது சார்ந்த குற்ற வழக்கில் தான் (புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்வது) தொடர்பாக கைது செய்யப்பட்டு சில வருடங்கள் சிறையில் இருந்தார். நாங்கள் எல்லாரும் கூட அவரின் விடுதலைக்காக நிறைய செயல்பாடுகளை செய்திருந்தோம்.

The 32-year-old, who earned university degrees in Waterloo, Ont., was arrested in 2006 along with Piratheepan Nadarajah, of Brampton, Ont., and freed on bail three years later before his extradition to the U.S. in 2012.

While in Canada, Sriskandarajah helped research and acquire aviation equipment, submarine and warship design software, night vision equipment and communications technology for the Tamil Tigers.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

ஆச்சரியமாக இருக்கிறது ஜஸ்டின். 
சுரேஸ் ஸ்ரீஸ்காந்தா  கூட இது சார்ந்த குற்ற வழக்கில் தான் (புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்வது) தொடர்பாக கைது செய்யப்பட்டு சில வருடங்கள் சிறையில் இருந்தார். நாங்கள் எல்லாரும் கூட அவரின் விடுதலைக்காக நிறைய செயல்பாடுகளை செய்திருந்தோம்.

The 32-year-old, who earned university degrees in Waterloo, Ont., was arrested in 2006 along with Piratheepan Nadarajah, of Brampton, Ont., and freed on bail three years later before his extradition to the U.S. in 2012.

While in Canada, Sriskandarajah helped research and acquire aviation equipment, submarine and warship design software, night vision equipment and communications technology for the Tamil Tigers.

மூன்று வெவ்வேறு கேஸ்கள் 2004 முதல் 2012 வரை புலிகள் விடயத்தில் நடந்திருக்கின்றன (வேறு சிறு கேஸ்கள் இருக்கின்றனவா என அறியேன்). சுரேசினுடையது மிகவும் வீக்கான, தொழில் நுட்ப உதவி வழங்க முயன்ற கேஸ்.

இரண்டாவது நான் மேலே குறிப்பிட்டது: இது சாட்சி ரீதியாக மிகவும் பலமானது.

மூன்றாவது ஒரு கேஸ் சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேசிய பிரஜைகள் சிலர் அமெரிக்க பிரதேசமான குவாம் (Guam) தீவில் - அதுவும் ஒரு undercover sting operation இல் சிக்கிய கேஸ். அதிலும் பலர் சிறை சென்று பின்னர் நாடுக் கடத்தப் பட்டனர். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

மூன்று வெவ்வேறு கேஸ்கள் 2004 முதல் 2012 வரை புலிகள் விடயத்தில் நடந்திருக்கின்றன (வேறு சிறு கேஸ்கள் இருக்கின்றனவா என அறியேன்). சுரேசினுடையது மிகவும் வீக்கான, தொழில் நுட்ப உதவி வழங்க முயன்ற கேஸ்.

ஆம்

இந்த தொழில் நுட்ப  உதவியில் எனது  உறவு ஒன்றும் இருந்தது

சுரேஸ் கடைசிவரை  அவர்களை  காட்டிக்கொடுக்கவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆம்

இந்த தொழில் நுட்ப  உதவியில் எனது  உறவு ஒன்றும் இருந்தது

சுரேஸ் கடைசிவரை  அவர்களை  காட்டிக்கொடுக்கவில்லை

 

இவர் வன்னியில்.   சென்று   கணினி சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை.  படிப்பித்தவாரா???  மேலும் சிறைகாலத்தில்.  சட்டம் பயின்று   தனக்காக. வாதடியவார. ??? கனடாவில் குற்றவாளிகள்   சமூகத்தில் இணைய   பரீட்சை எழுத வேண்டுமா   ???

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

இவர் வன்னியில்.   சென்று   கணினி சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை.  படிப்பித்தவாரா???  மேலும் சிறைகாலத்தில்.  சட்டம் பயின்று   தனக்காக. வாதடியவார. ??? கனடாவில் குற்றவாளிகள்   சமூகத்தில் இணைய   பரீட்சை எழுத வேண்டுமா   ???

இல்லை அண்ணா

இது வேறு

முழுமையாக இங்கே எழுதுவது?? சிலரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை அண்ணா

இது வேறு

முழுமையாக இங்கே எழுதுவது?? சிலரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது 

ஒகே. விசுகு  தங்கள் நேரத்திற்கும்   பதிலுக்கும்.   மிக்க நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2023 at 10:39, Justin said:

மன்னிக்க வேண்டும். டொக்ரர் சதாசிவம் அல்ல, டொக்ரர் C.P தியாகராஜா. 2016 இல் கீழே இருக்கும் ஈழம் மறவர்  கட்டுரையில் "it was alleged that.." என்ற வாக்கியத்துடன் நீங்கள் மேலே குறிப்பிட்ட எல்லாம் இருக்கின்றன. இதனை வைத்து பரணி கிருஷ்ணரஜனி எழுதிய கட்டுரை யாழில் சில ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.

https://eelamaravar.wordpress.com/2016/04/02/project-beacon-divided-ltte-administered/

இந்த இணையத்தளத்திலிருந்த தகவலையே கருத்தாக பதிந்திருந்தேன், நான் கேட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்ட பரணிகிருஸ்ணரஜனி கட்டுரை.

On 8/5/2023 at 18:26, விசுகு said:

உண்மையில் நீங்கள் எங்கள் எழுத்துக்களை தான் புரிந்து கொள்வதில்லை என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் எழுத்துக்களையே புரிந்து கொள்வதில்லை என்று தற்போது புரிகிறது. நன்றி 

உங்களது கருத்துகள் எமது கருத்தாடலுக்குள் இடையூறாக உள்ளது என்பதனை பூடகமாக கூறினேன், குறையாக கூறவில்லை ஆனால் சில வேளை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அதனை இரசிக்க மாட்டார்கள்(பொதுவாக கூறுகிறேன்).

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2023 at 11:55, ரஞ்சித் said:

இப்போது இவர்கள் எங்கே? விடுதலையாகி விட்டார்களா?

திரு என்பவர் ( வோட்டலூ மாண்வன்) விடுதலை ஆகி விட்டார். அத்தருணம் மைக்ரோசொவ்றில் வேலை செய்தவர். வேலையால் நீக்கப்பட்டார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

இந்த இணையத்தளத்திலிருந்த தகவலையே கருத்தாக பதிந்திருந்தேன், நான் கேட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்ட பரணிகிருஸ்ணரஜனி கட்டுரை.

உங்களது கருத்துகள் எமது கருத்தாடலுக்குள் இடையூறாக உள்ளது என்பதனை பூடகமாக கூறினேன், குறையாக கூறவில்லை ஆனால் சில வேளை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அதனை இரசிக்க மாட்டார்கள்(பொதுவாக கூறுகிறேன்).

இது கருத்துக்களம்

இரண்டு பேரும் பேசுவதென்றால் வேறு வசதிகள் வாய்ப்புகள் உள்ளன. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது கருத்துக்களம்

இரண்டு பேரும் பேசுவதென்றால் வேறு வசதிகள் வாய்ப்புகள் உள்ளன. நன்றி 

நன்றி, நீங்கள் எனது கருத்தினை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டுவிடுவீர்களோ என கவலைப்பட்டேன் ஆனால் நீங்கள் சாதாரணமாக எடுத்து கொண்டது மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் கருத்தினை பதியாமல் விடவே முயன்றேன், கருத்தினை பதிந்தபின் அதற்காக வருந்தினேன், அதனை தவிர்த்திருக்கலாம் என, நல்ல வேளையாக நீங்கள் அதனை பெரிதாக எடுக்கவில்லை நீங்கள் உண்மையில் பெரிய மனிதர்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.