Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் ஒட்டும் பசையை தடவிய வைத்தியர் - இந்தியாவில் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

08 MAY, 2023 | 12:26 PM
image

இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் வைத்தியர் ஒருவர் ஒட்டும் பசையை  (பெவிக்குவிக்) தடவிய சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருந்த வைத்தியர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு விட்டு, உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படும் ஒட்டும் பசையைத் தடவியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ந்த பெற்றோர் வைத்தியசாலையில் வாக்குவாதம் செய்யவே, நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பொலிஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் அங்குள்ள வைத்தியர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தனியார் வைத்தியசாலைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://www.virakesari.lk/article/154761

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் வைத்தியர் ஒருவர் ஒட்டும் பசையை  (பெவிக்குவிக்) தடவிய சம்பவம் நடந்துள்ளது.

ஓட்டும் பசையில்... உடலுக்கு ஒவ்வாத பல இரசாயனங்கள் கலந்து இருக்கு என்று 
அந்த முட்டாள் வைத்தியருக்கு தெரியாதா?

அந்த இரசாயனங்களால்... அந்த  சிறுவனுக்கு வேறு நோய்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?
இவ்வளவிற்கும் அது தனியார் மருத்துவமனையாம்.

இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இதுதான்.
வெளிநாட்டில் இப்படி நடக்க சாத்தியம் இல்லை.
அப்படி நடந்திருந்தால்... டாக்டரின் தொழிலே பறிக்கப் பட்டிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓட்டும் பசையில்... உடலுக்கு ஒவ்வாத பல இரசாயனங்கள் கலந்து இருக்கு என்று 
அந்த முட்டாள் வைத்தியருக்கு தெரியாதா?

அந்த இரசாயனங்களால்... அந்த  சிறுவனுக்கு வேறு நோய்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?
இவ்வளவிற்கும் அது தனியார் மருத்துவமனையாம்.

இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இதுதான்.
வெளிநாட்டில் இப்படி நடக்க சாத்தியம் இல்லை.
அப்படி நடந்திருந்தால்... டாக்டரின் தொழிலே பறிக்கப் பட்டிருக்கும்.

சீல் வைத்துவிட்டார்கள், பெரும்பாலும் போலி மருத்துவராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

சீல் வைத்துவிட்டார்கள், பெரும்பாலும் போலி மருத்துவராக இருக்கலாம்.

UHU Alleskleber, lösemittelfrei | schulstart.de

போலி மருத்துவர் என்றாலும்... பசை பூசுற அளவிற்கு, அறிவு இருந்திருக்கு. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

UHU Alleskleber, lösemittelfrei | schulstart.de

போலி மருத்துவர் என்றாலும்... பசை பூசுற அளவிற்கு, அறிவு இருந்திருக்கு. 😂

அவர் பெவிக்கோல் விளம்பரத்தை நம்பின போலி மருத்துவர் போல!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆழமான பெரிய வெட்டுக்காயங்களைத் தவிர மற்றவைக்கு பசை தடவி (surgery glue) ஒட்டுவிப்பது சாதாரண மருத்துவ நடைமுறை இப்போ. இதனை தவறாக ஊகு குளூ பாவித்ததாக ஊடகங்கள் விளக்குறைவாகக் கூட அர்த்தப்படுத்தி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இப்ப ஆழமான பெரிய வெட்டுக்காயங்களைத் தவிர மற்றவைக்கு பசை தடவி (surgery glue) ஒட்டுவிப்பது சாதாரண மருத்துவ நடைமுறை இப்போ. இதனை தவறாக ஊகு குளூ பாவித்ததாக ஊடகங்கள் விளக்குறைவாகக் கூட அர்த்தப்படுத்தி இருக்கலாம். 

 

43 minutes ago, ஏராளன் said:

இதைத் தொடர்ந்து பொலிஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் அங்குள்ள வைத்தியர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தனியார் வைத்தியசாலைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

animiertes-arzt-bild-0051.gif

பொலிஸார்,  சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி... 
வைத்திய சாலைக்கு சீல் வைத்த படியால்... 
"ஊகு பசை" பாவிக்கப் பட்டது உண்மை போல் தெரிகிறது.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஓட்டும் பசையில்... உடலுக்கு ஒவ்வாத பல இரசாயனங்கள் கலந்து இருக்கு என்று 
அந்த முட்டாள் வைத்தியருக்கு தெரியாதா?

அந்த இரசாயனங்களால்... அந்த  சிறுவனுக்கு வேறு நோய்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?
இவ்வளவிற்கும் அது தனியார் மருத்துவமனையாம்.

இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இதுதான்.
வெளிநாட்டில் இப்படி நடக்க சாத்தியம் இல்லை.
அப்படி நடந்திருந்தால்... டாக்டரின் தொழிலே பறிக்கப் பட்டிருக்கும்.

ஜேர்மனியில்  மருத்துவ துறைக்குள் வருவது கடினம். அப்படி வந்தாலும்  கசக்கி பிழிந்து  மூலப்பொருளை(வைத்தியர்). மட்டுமே வெளியில் விடுவார்கள்.அப்படி வெளியே வந்தாலும் நோயாளி சம்பந்தமாக முடிவெடுக்க சில காலம் காத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியாதது அல்ல :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில்  மருத்துவ துறைக்குள் வருவது கடினம். அப்படி வந்தாலும்  கசக்கி பிழிந்து  மூலப்பொருளை(வைத்தியர்). மட்டுமே வெளியில் விடுவார்கள்.அப்படி வெளியே வந்தாலும் நோயாளி சம்பந்தமாக முடிவெடுக்க சில காலம் காத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியாதது அல்ல :beaming_face_with_smiling_eyes:

படிக்கும் காலத்திலேயே… பல வித கடுமையான சோதனைகளை வைத்து, வெறுக்கப் பண்ணி விடுவார்கள்.
ஓரு பல்கலைக் கழகத்திற்கு.. உதாரணமாக மருத்துவ படிப்பிற்கு ஆண்டுக்கு 500 பேர் சேர்ந்தால்… அதே குழுவில் இறுதியில் 300 பேருக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். மிகுதிப் பேர்… தாக்குப் பிடிக்க முடியாமல், வேறு துறைகளுக்கு சென்று விடுவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.