Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணியலாம்: நல்லிணக்கத்தின் சமிஞ்சை என்கிறார் இம்ரான் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹபாயா அணியலாம்: நல்லிணக்கத்தின் சமிஞ்சை என்கிறார் இம்ரான் எம்.பி

image_539a3cad7f.jpg

எப்.முபாரக்

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியழிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொரு நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்துள்ளார். 

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாசார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு    திருகோணமலை நீதவான் நீதிமன்றின் செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கருத்து வெளியிடுகையில், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களும் வாழ்கின்றனர். இங்கு, பல்சமய கலாசாரம் பின்பற்றப்படுகின்றது. எனவே, வெவ்வேறு இன அடையாளத்தை கொண்டவர்களாக இருந்தாலும் சரி, வெவ்வேறு சமயத்தை பின்பற்றினாலும் சரி, நமக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் காணப்பட வேண்டும். 

திருமலை. சண்முகா ஹபாயா விவகாரமானது ஆரம்பத்திலேயே பேசி தீர்மானமொன்றிக்கு வந்திருக்கலாம். துரதிஸ்டமான சில நடவடிக்கைகள் பல கசப்பான அனுபவங்களை தந்துவிட்டது. மீண்டும், மீண்டும் இவற்றை பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, நாம் இணக்கமாக அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும். 

அத்தோடு, ஆசிரியை பஹ்மிதா தமது உரிமைக்காக நீண்ட நாட்கள் போராடினார். அவரை பாராட்டமல் இருக்க முடியாது. அத்தோடு, இவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இவ்வாறு தெரிவித்தார்.
 

 

https://www.tamilmirror.lk/திருகோணமலை/ஹபாயா-அணியலாம்-நல்லிணக்கத்தின்-சமிஞ்சை-என்கிறார்-இம்ரான்-எம்-பி/75-317888

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொரு நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்துள்ளார். 

தமிழர், முஸ்லீம்களுக்கு..  கிழக்கு மாகாண முதல்வர் பதவியை கொடுத்ததில் இருந்து 
எத்தனை விட்டுக் கொடுப்புக்களை செய்தும், அதற்கு நன்றி இல்லாமல்...
தமிழனை, சிங்களுவனுடன் சேர்ந்து  மட்டம்  தட்டுவதிலேயே குறியாக உள்ள 
உங்களுக்கு எப்படி மனம் வருகின்றது.

யாழ். ஒஸ்மானியா கல்லுரியில் வைத்து  தமிழ் ஆசிரியரை அடித்த 
அந்த முஸ்லீம் மாணவனின் தந்தைக்கு எதிராக, இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

தமிழன் இறங்கி வந்தால்... நல்லெண்ண சமிக்கை என்று காதில் பூ வைப்பதும்.
தமிழனுக்கு உரிமை கிடைக்கப் போகுது என்றால்... முதலாவதாக வந்து 
சபை குழப்பிக்காளாக  இருக்கும் உங்களின் குணம் எப்ப மாறும்.
இவற்றை நினைத்து நீங்கள் வெட்கப் படுவதில்லையா?

இனி முஸ்லீம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் மற்ற மதத்து  ஆசிரியர்கள்,  மாணவர்கள்..
தங்கள் மத அடையாளங்களுடன்  உங்கள் பாடசாலைக்கு வருவதில் பிரச்சினை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இனி முஸ்லீம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் மற்ற மதத்து  ஆசிரியர்கள்,  மாணவர்கள்..
தங்கள் மத அடையாளங்களுடன்  உங்கள் பாடசாலைக்கு வருவதில் பிரச்சினை இல்லையா?

அது எப்படி?
முஸ்லிம் மதத்தை சேராதவர்களுக்கு முஸ்லிம் மதம் கட்டுபாடுகளை வைத்துள்ளது.ஆனபடியால் தமிழர்கள் அப்படி வர முடியாது. முஸ்லிம் மதத்தை தமது மத அடையாளமாக ஏற்று கொண்டு தமிழர்கள் மூடி கொண்டு அவர்கள் பாடசாலைக்கு தாராளமாக செல்லலாம்.  நல்லெண்ண சமிக்கை சொல்லியுள்ளார்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

காதில் பூ வைப்பது

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாடசாலைக்கு வேட்டியும் சால்வையுடனும் ஒரு தமிழ் ஆசிரியர் செல்ல இவர்கள் அனுமதிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது எப்படி?
முஸ்லிம் மதத்தை சேராதவர்களுக்கு முஸ்லிம் மதம் கட்டுபாடுகளை வைத்துள்ளது.ஆனபடியால் தமிழர்கள் அப்படி வர முடியாது. முஸ்லிம் மதத்தை தமது மத அடையாளமாக ஏற்று கொண்டு தமிழர்கள் மூடி கொண்டு அவர்கள் பாடசாலைக்கு தாராளமாக செல்லலாம்.  நல்லெண்ண சமிக்கை சொல்லியுள்ளார்.

 

20 minutes ago, nunavilan said:

முஸ்லிம் பாடசாலைக்கு வேட்டியும் சால்வையுடனும் ஒரு தமிழ் ஆசிரியர் செல்ல இவர்கள் அனுமதிப்பார்களா?

நாங்கள்   நல்லெண்ண சமிக்கை காட்டினால், 
எங்களையும்... வேட்டி சால்வையுடனோ, சிலுவை அணிந்தோ செல்வதை தடுக்காமல், 
அவர்களும்  நல்லெண்ண சமிக்கை காட்டுவதுதானே, நல்ல பண்பாடு.

நாங்கள்   மட்டும்... இளிச்ச வாயனாக இருப்பதை,  
விரும்புகிறார்கள் போலுள்ளது வெட்கம் கெட்டவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.