Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்!

Published By: Digital Desk 3

27 May, 2023 | 11:55 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை  இன்று சனிக்கிழமை (26) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்கள அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக குளத்தை எல்லையிடப்படுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

கமநல சேவை திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்ட குளத்தை தனியார் ஆக்கிரமிப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளவதை நேரடியாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்

குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்காக உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/156291

 

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

29 MAY, 2023 | 10:01 PM
image
Placehoder--_40.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் உடையார்கட்டு கமநலசேவைத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது.

 

IMG-20230529-WA0000.jpg

இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர், கால்நடைகளுக்கான மேச்சல் மற்றும் தண்ணீர் மீன்பிடி தொழில் மேட்டு நில பயிர்செய்கை என மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த குளத்தின் கீழ் விவசாய செய்கை காணப்படாத நிலையில் அருகில் சில காணிகளில் நெல்விதைப்பினை காலபோகத்தில் மேற்கொண்டு வருகின்றார்கள்.

IMG-20230529-WA0006.jpg

இவ்வாறு காணப்படும் குளத்தினை தனிநபர் ஒருவர் அபகரித்து எல்லை கற்கள் போட்டு  வேலி அடைத்து  வைத்துள்ளதால் தனிநபரின் அபகரிப்பிற்கு உள்ளாகியுள்ள குளத்தை மீட்க  கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

IMG-20230529-WA0001.jpg

திங்கட்கிழமை (29) வெள்ளப்பள்ளம் குளப்பகுதியில் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் இதன்போது 100 வரையான மக்கள் பங்கெடுத்துள்ளார்கள். பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டு குளத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பிற்கு எதிர்பு தெரிவித்துள்ளார்கள் தொடர்ந்து அங்கு நாட்டப்பட்ட தூண்களை மக்கள் அகற்றியுள்ளார்கள்.

IMG-20230529-WA0003.jpg

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி மனுவினை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளார்கள்.

IMG-20230529-WA0005.jpg

இதன்போது குறித்த குளம் தொடர்பில் பிரதேச செயலாளர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குளஆக்கிரமிப்பு தொடர்பில் மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மேலும் ஆராயவுள்ளோம் முதல் ஆரம்ப கட்ட நடவடிக்கையின் படிகுளம் அமைந்துள்ள காணி தனியார் காணியாக காணப்படுகின்றது குளத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு விவாசாய திணைக்களத்திடம் இருக்கின்றது மேலதிகமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

IMG-20230529-WA0004.jpg

IMG-20230529-WA0013.jpg

IMG-20230529-WA0010.jpg

IMG-20230529-WA0009.jpg

IMG-20230529-WA0015.jpg

https://www.virakesari.lk/article/156475

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2023 at 12:01, கிருபன் said:

உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்!

Published By: Digital Desk 3

27 May, 2023 | 11:55 AM
 
 

 

சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்

குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்காக உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/156291

 

பொதுவாக அதிகாரிகளின் அசமந்த போக்கும், லஞ்ச ஊழலுமே இப்படியான பிரசினைகளுக்கு காரணமாக இருக்கின்றது. அத்துடன் சில வேளைகளில் அரசியல்வாதிகளின் ஓத்துழைப்பும் இதட்கு ஒரு முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பமான காணி உரித்தாகத் தெரிகிறதே செய்தியின் படி? குளம் கமநலத் திணைக்களத்திடம், குளம் இருக்கும் காணியின் உரிமை தனியாரிடம். இதை எப்படி இலங்கையில் கையாள்கிறார்களென யாராவது விளக்குங்கள்?

வெளிநாடுகளில், easement என்ற முறை மூலம் நகரத்தின் தண்ணீர் லைன், கால்வாய் என்பவற்றிற்கு தனியார் காணியில் இடம் கொடுப்பர். இதையொத்த ஏற்பாடு ஏதாவது இருக்கிறதா ஊரில்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணி தனியாருக்குப்போன விடயத்தில் அரசியல்வாதிகள்,அரசஅதிகாரிகளென அனைவருக்கும் தொடர்பிருக்கலாம். காணி உரிமையாளர்  புலம்பெயர் பிரமுகராகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nochchi said:

இந்தக் காணி தனியாருக்குப்போன விடயத்தில் அரசியல்வாதிகள்,அரசஅதிகாரிகளென அனைவருக்கும் தொடர்பிருக்கலாம். காணி உரிமையாளர்  புலம்பெயர் பிரமுகராகவும் இருக்கலாம்.

ஜப்பான் உறுதி என்று சொல்லுவார்களே. இதுதான் அது. காலம்சென்ற மகபூல் என்பவர் மன்னர் மேலதிக அரசாங்க (காணி) இருக்கும்போது எல்லா சோனவனுக்கும் அங்குள்ள அரச காணிகள் இப்படியாக அறுதியாக்கப்பட்ட்து. இப்போது எல்லாவற்றையும் விற்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதிகாரிகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.