Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் பழச்சாறு கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு ; மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

02 JUN, 2023 | 04:07 PM
image
 

பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில் பழக்கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதிகளை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களின் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் , முகங்களை மறைத்து கட்டும் கறுப்பு நிற துணிகள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , தாம் அன்றைய தினம் இரவு கடைக்கு சென்று யூஸ் கேட்ட போது , கடையை பூட்ட ஆயத்தம் ஆகிவிட்டோம். அதனால் யூஸ் தர முடியாது என உரிமையாளர் கூறினார். அதனால் ஆத்திரமுற்ற நாம் , அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவரை பற்றிய தகவல்கள் பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/156796

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரியாணி குடுக்காட்டில் அடிதடி வெட்டு....சிலோனிலை பழச்சாறுக்கு வெட்டு.....

கேட்கவே ஆனந்தக்கண்ணீர் வருகின்றது..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் பிரியாணி குடுக்காட்டில் அடிதடி வெட்டு....சிலோனிலை பழச்சாறுக்கு வெட்டு.....

கேட்கவே ஆனந்தக்கண்ணீர் வருகின்றது..

May be an image of 4 people and text that says 'ஹோட்டல் முதலாளியை குத்தினேன்.. பிரியாணி கூடாது என்பதற்காக அல்ல..!! பிரியாணிக்கு காசு கேட்டான் என்பதற்காக..!!'

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம்

பெண் தர மறுத்ததால், மறுத்தவர் மீது வாள் வெட்டு! வெகு விரைவில் எதிர் பார்க்கலாம். அல்லது வெளிவந்ததை நான் அறியவில்லையோ? தெரியவில்லை.

11 hours ago, ஏராளன் said:

அவர்களின் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் , முகங்களை மறைத்து கட்டும் கறுப்பு நிற துணிகள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

பழச்சாற்றுக்கு காசு இருந்ததாக தெரியவில்லை. 19,29 வயதுடைய தறுதலைகளுக்கு எந்த நேரத்தில் எங்கு எதைக்கேட்கவேண்டுமென்றும் தெரியவில்லை, தாங்கள் என்ன செய்யவேண்டுமென்றும் தெரியவில்லை.  உழைத்து சாப்பிட வக்கற்ற கோழைகள். 

 

11 hours ago, ஏராளன் said:

தாம் அன்றைய தினம் இரவு கடைக்கு சென்று யூஸ் கேட்ட போது ,

உண்மையாகவே பழச்சாற்றுக்காக போயிருந்தால்; பணமல்லவா இருந்திருக்க வேண்டும் இவர்களிடம்? அது இல்லாமல் இவைகளை ஏன் கொண்டு வந்தார்கள்? அதற்குப்பின் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருந்திருக்குமோ இவர்களிடம்? அதையும் விசாரித்தறிய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4095.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

பெண் தர மறுத்ததால், மறுத்தவர் மீது வாள் வெட்டு! வெகு விரைவில் எதிர் பார்க்கலாம். அல்லது வெளிவந்ததை நான் அறியவில்லையோ? தெரியவில்லை.

அது கடந்த வருடம் கார்த்திகையில் ஊரில் நிற்கும்போது நடந்தது, அது இப்ப சர்வ சாதாரணம்

தங்கையின் பின் தொடர்ந்தவரை அண்ணன் கூட்டாளிகளுடன் கட்டி வைத்து அடிக்க, அடி வாங்கியவரின் கூட்டம் முகநூல் மூலம் கூடி அந்த ஊரையே முற்றுகையிட்டு ஒரே அடிதான் 😁,

பல செய்திகள் வெளியில் வருவதில்லை

5 hours ago, Kavi arunasalam said:

IMG-4095.jpg

ஒரு சிலரின் நடவடிக்கைக்கா இப்படி எமது தலைநகரை பெயர் மாற்றி கேவலப்படுத்தலாமா

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.