Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

04 JUN, 2023 | 01:24 PM
image
 

(லியோ நிரோஷ தர்ஷன்)

வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், உலக வங்கியின்  நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதி சந்தையின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளை சாதகமான முறைமையின் கீழ்  கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில், புள்ளிவிபரங்களுடன் தயாரிக்கப்பட்ட இருதரப்பு திட்ட வரைபு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு நிபந்தனைகளுடன் உலக வங்கியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தனர். 

இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் நிபந்தனைகள் சிலவற்றை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி உதவி வருட இறுதிக்குள் கிடைக்கும் என ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/156901

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை விகாரை கட்டத்திட்டமாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஏராளன் said:

வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், உலக வங்கியின்  நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கும் அமெரிக்கா தான் முக்கியத்துவம் வகிக்கும் உலக வங்கி இந்த கடனுதவிக்கு அனுமதி வழங்கியது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார  நெருக்கடியிலேயே, கஜானாவில் பணம் இல்லாத போதே தடையில்லாமல் நடைபெறும் செயல், விகாரை! அதுவும் பிரமாண்டமான அளவில் எழும்புகிறது. இப்போ பணம் மில்லியன்  கணக்கில் வந்தால் இனியென்ன, வடகிழக்கு விஹாரை மயந்தான். உலக  வங்கி அதைத்தான் இலங்கையில் பார்க்க ஆசைப்படுகிறது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.