Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை! | Odisha Train Accident The Father Son The Morgue

ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை!

தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததுடன்,900 ற்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த ஹெலராம் மாலிக் என்ற தந்தைக்கு தனது 24 வயதான பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயில் ஏற்றி விட்டது நினைவு வந்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் உயிருடன் இருப்பதும் ஆனால் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த தந்தை, 230 கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்த இடத்திற்கு ஒரு ஆம்புலன்ஸில் உறவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.

 கை அசைத்த மகனை கண்ட தந்தை

அங்கு சென்ற மகனை எங்கு தேடியும் கிடைக்காமையால் மருத்துவமனைகளில் சென்று தேடியுள்ளனர். அங்கும் மகனை காணவில்லை. இறுதியில் அந்த தந்தைக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கான முகவரி கிடைத்துள்ளது.

அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களைக் காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களுடன் அவர் வாதாடிய வேளை பலியானவர்களின் உடல்களுக்கு இடையே ஒருவரின் கை அசைவதைக் கண்டு அங்கு சென்று பார்த்த பொழுது அது அவரது மகன் என தெரியவந்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை! | Odisha Train Accident The Father Son The Morgue

பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஸ்வாஜித்தை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிக் முதலுதவி செய்து கொல்கத்தாவுக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதற்கட்ட அறுவை சிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், கால்களில் மட்டுமே அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறாக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் துறையை சாராதவர்கள் என்பதால் படுகாயமடைந்து நினைவிழந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளாமல், சவக்கிடங்கில் போட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

https://jvpnews.com/article/odisha-train-accident-the-father-son-the-morgue-1686035669

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நடந்த விபத்தைவிட இது கொடூரமாக இருக்கிறதே.

இறந்ததை உறுதிப்படுத்த உத்தியோகத்தர்கள் இல்லையா?

இப்படி இன்னும் எத்தனை பேரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

நடந்த விபத்தைவிட இது கொடூரமாக இருக்கிறதே.

இறந்ததை உறுதிப்படுத்த உத்தியோகத்தர்கள் இல்லையா?

இப்படி இன்னும் எத்தனை பேரோ?

மகனிடம்,  கைத்தொலைபேசியும் இருந்திரா விட்டால்,
உயிரோடு புதைத்து இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவ்வாறாக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் துறையை சாராதவர்கள் என்பதால் படுகாயமடைந்து நினைவிழந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளாமல், சவக்கிடங்கில் போட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

7 பேரின் உடலுக்கு கீழே சிக்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன்

06 JUN, 2023 | 10:54 AM
image
 

ஒடிசாவில் இடம்பெற்ற புகையிரதவிபத்து காரணமாக உயிரிழந்த ஏழுபேரின் உடல்களின் கீழ் உயிருடன் சிக்குண்டிருந்த தம்பியை அண்ணண் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்இ கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சிக்கி உள்ளனர்.

அந்த குடும்பத்தில் 10 வயது சிறுவன் தேபேசிஷ் பத்ரா. ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தனது தாய்இ தந்தைஇ அண்ணனுடன் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தான். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் பாலசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கியது.

இதுகுறித்து தேபேசிஷ் பத்ரா கூறியதாவது: பத்ராக் பகுதியில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து புரி செல்ல திட்டமிட்டிருந்தோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாய் தந்தை அண்ணனுடன் சென்றேன். பாலசோர் ரயில் நிலையம் தாண்டியதும் திடீரென ரயில் பெட்டி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது.

அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் திறந்து பார்த்தபோதுஇ பயங்கர வலியில் துடித்தேன். என் மீது இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. எனது அண்ணன் சுபாசிஷ்தான் (10-ம் வகுப்பு படிக்கிறான்) என்னை காப்பாற்றினான். இவ்வாறு தேபேசிஷ் பத்ரா கூறினான்.

https://www.virakesari.lk/article/157038

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

நடந்த விபத்தைவிட இது கொடூரமாக இருக்கிறதே.

இறந்ததை உறுதிப்படுத்த உத்தியோகத்தர்கள் இல்லையா?

இப்படி இன்னும் எத்தனை பேரோ?

8 hours ago, தமிழ் சிறி said:

மகனிடம்,  கைத்தொலைபேசியும் இருந்திரா விட்டால்,
உயிரோடு புதைத்து இருப்பார்கள். 

வல்லரசு நினைப்பில் இருக்கும் ஒரு நாடு தனக்குள் அவலங்கள் வரும் போது எப்படி உடனடி உதவிகள் வழங்க முடியும் என்பதிலேயே அதன் வல்லமை தெரியும்.

பிற ஊடகங்களில் இந்தியாவின் அவசர சிகிச்சை நடவடிக்கைகளை பார்த்து நார் நாராக கிழிக்கின்றார்கள். இறந்த உடல்களை விறகு கட்டை தூக்கி எறிவது போல் எறிகின்றார்கள்.
தூ......கேவலம் கெட்ட நாடு இந்தியா. எதிரியாக இருந்தாலும் பிணத்திற்கு கூட மரியாதை கொடுப்பவர்கள் இந்த உலக மக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.