Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் சடலமாக மீட்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 JUN, 2023 | 05:30 PM
image
 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மஹரகம, கட்டுவெல பிரதேசத்தில் இந்தப்  பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

மாணவன் தூக்கில் தொங்குவதை அதிகாலையில் கண்ட சக மாணவர்கள்   அவரின்  கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவா் ஏற்கனவே உயிரி ழந்திருந்துள்ளார்.

 
சம்பவ  இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில்  
உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம்  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

இம்மாணவன் தினக்குரல் பிரதம ஆசிரியர் கே.ஆர்.பி. ஹரனின் சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157851

  • கருத்துக்கள உறவுகள்

இன்று..பெராதனையிலும் முதலாம் வருட பொறியியல் மாணவன் (யாழ்)   குளீயலறையில் தூக்குப்போட்டு தற்கொலை என்ற செய்தியும் போகிறது ..எங்கு போகிறது எம்மினம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினைக்கு சிலகாரணங்கள் கூறுகிறார்கள். மனஅழுத்தம் , பாட விதானம் விளங்காமல் இருக்கலாம், மொழிப்பிரச்சினை, தனிப்படட பிரச்சினை இப்படியாக பல காரணமிருக்கும். 


இங்குமூன்றாம் வருட மாணவன் தாட்கொலை  செய்திருப்பது தனிப்படட காரணமோ தெரியவில்லை.
பேராதெனிய பலக்லைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவன் தாட்கொலை என்பது மேட்க்கூறிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும் இப்படி நன்றாக படித்துஇந்த நிலைக்குவந்த பின்னர் இப்படியான முடிவுகள் எடுப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 


இந ரீதியான பிரச்சினை என்பது பொறியியல் பீடம், மருத்துவ பீடம் போன்றவற்றில் காண்பது மிகவும் அரிது. நானும் பேராதனையில் படித்த படியால் எனது அனுபவம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்

17 வயது தமிழ் மாணவி கொழும்பு பொரளையில் தூக்கிட்டு தற்கொலை...என்ன நடக்கிறது..36 வயது தாயும் 6 வயது மகளூ றோட்சைட்டில் டிப்பர் மோதி இறப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Cruso said:

இந்த பிரச்சினைக்கு சிலகாரணங்கள் கூறுகிறார்கள். மனஅழுத்தம் , பாட விதானம் விளங்காமல் இருக்கலாம், மொழிப்பிரச்சினை, தனிப்படட பிரச்சினை இப்படியாக பல காரணமிருக்கும். 


இங்குமூன்றாம் வருட மாணவன் தாட்கொலை  செய்திருப்பது தனிப்படட காரணமோ தெரியவில்லை.
பேராதெனிய பலக்லைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவன் தாட்கொலை என்பது மேட்க்கூறிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும் இப்படி நன்றாக படித்துஇந்த நிலைக்குவந்த பின்னர் இப்படியான முடிவுகள் எடுப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 


இந ரீதியான பிரச்சினை என்பது பொறியியல் பீடம், மருத்துவ பீடம் போன்றவற்றில் காண்பது மிகவும் அரிது. நானும் பேராதனையில் படித்த படியால் எனது அனுபவம் இது. 

இப்போது, ஆங்கிலம், சிங்களம் பரவலாக தெரிந்த நிலையில், 70, 80, 90 களில் தமிழ் மட்டுமே தெரிந்தும் சமாளித்த மாணவர்கள் நிலை இன்று இருக்காது.

இது வேறு பிரச்சனையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2023 at 17:11, ஏராளன் said:
16 JUN, 2023 | 05:30 PM
image
 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மஹரகம, கட்டுவெல பிரதேசத்தில் இந்தப்  பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

மாணவன் தூக்கில் தொங்குவதை அதிகாலையில் கண்ட சக மாணவர்கள்   அவரின்  கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவா் ஏற்கனவே உயிரி ழந்திருந்துள்ளார்.

 
சம்பவ  இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில்  
உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம்  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

இம்மாணவன் தினக்குரல் பிரதம ஆசிரியர் கே.ஆர்.பி. ஹரனின் சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157851

ஆழ்ந்த இரங்கல்.

 

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.