Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்: MQ-9B ரக ஆளில்லா விமானம் முக்கியமாக பேசப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த திராவிடம் தன் கொள்கைய வைத்து தமிழ்நாட்டில் எதையும் சாதிக்கவில்லை.
அந்த புண்ணிய பூமியில் தாமரை மலர்ந்தாலும் சந்தோசம். நாம் தமிழர் கை ஓங்கினாலும் சந்தோசம்.

செந்தில் பாலாஜியை வைத்து…. பிதுக்கிற பிதுக்கிலை,
தளர்பதி, சின்னவர், மருமகன், அண்ணி… எல்லாருக்கும் முழி பிதுங்குதாம்.
அதோடை ஒரு திராவிட கூட்டம், செந்தில் பாலாஜி தலைமையில்…
தாமரை குளத்தில் இறங்கி, நீச்சலடிக்க ரெடியாம்.

நமக்கு… நரி இடம் போனாலும், வலம் போனாலும் ஒண்ணுதான். 😂
திராவிடம் துலைஞ்சால் சந்தோசமண்ணே…. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அமெரிக்காவுக்கு தலை, ரஸ்யாவுக்கு வால் - பிராந்திய வாலரசு இப்படித்தான் காலத்தை ஓட்டுகிறது🤣

சீனாவுக்கு பின்னங்கால் பிடரியில் அடிபடல்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

செந்தில் பாலாஜியை வைத்து…. பிதுக்கிற பிதுக்கிலை,
தளர்பதி, சின்னவர், மருமகன், அண்ணி… எல்லாருக்கும் முழி பிதுங்குதாம்.
அதோடை ஒரு திராவிட கூட்டம், செந்தில் பாலாஜி தலைமையில்…
தாமரை குளத்தில் இறங்கி, நீச்சலடிக்க ரெடியாம்.

நமக்கு… நரி இடம் போனாலும், வலம் போனாலும் ஒண்ணுதான். 😂
திராவிடம் துலைஞ்சால் சந்தோசமண்ணே…. 🤣

வாய்க்கு வாய் திராவிடம் பேசிக்கொண்டு  கோயில்,குளமென்று திரிவார்கள், ஊருக்கொரு சாதி கட்சிகள். சாதிக்கொலைகள் இப்படி இருக்கும் போது நாம்தமிழர்கட்சி அல்லது பாரதிய ஜனதா வரவேற்கத்தக்கதே.

தமிழர்கள் தமிழராகவே இருக்கவேண்டும்.திராவிட உருட்டுக்கள் இனியும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

சீனாவுக்கு பின்னங்கால் பிடரியில் அடிபடல்.🙂

🤣இமயமலை உச்சியில் வைத்து  கையாலயே வெளுப்பான் சீனாக்காரன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடியிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் மீதான துன்புறுத்தல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம்

Published By: SETHU

28 JUN, 2023 | 01:17 PM
image
 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் மீது சமூக வலைதளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வெள்ளை மாளிகை வளாகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பிரதமர் மோடியிடம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் ஊடகவியலாளர், சப்ரினா சித்தீகி, 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று இந்தியா நீண்ட காலமாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் அரசாங்கம் மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறும், தனது விமர்சகர்களை மௌனமாக்குதற்கு உங்கம் அரசாங்கம் முயல்கிறது எனக் கூறும் பல மனித உரிமைகள் குழுக்கள் உள்ளன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் சுதந்திரமான பேச்சை நிலைநிறுத்தவும் என்ன நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

Narendra-Modi---Joe-Biden-press-conferen

இக்கேள்வி குறித்து தான் வியப்படைவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா அதன் ஜனநாயகப் பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கிறது. அங்கே நிச்சயமாக சாதி, சமய நம்பிக்கை, வயது அல்லது ஏதேனும் பூகோள இடம் அடிப்படையலான பாகுபாடு எதுவும் இல்லை. உண்மையில் இந்தியா ஒரு ஜனநாயகம். ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டதைப் போன்று, இந்தியாவும் அமெரிக்காகவும் ஜனநாயகம் என்பது எமது மரபணுவில் உள்ளது. ஜனநாயகம் எமது ஆன்மா, எமது நாடிநரம்புகளில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தை நாம் வாழ்கிறோம்' என பதிலளித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டுக்குப் பின்னர், சப்ரினா சித்தீகியின் தனிப்பட்ட பின்புலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

நேர்மை, பக்கச் சார்பற்ற செய்திகளுக்காக மதிக்கப்பட்ட ஊடகவியலாளரான சப்ரினா சித்தீகி மீதான இத்துன்புறுத்தல்கள் ஏற்க்கொள்ளப்பட முடியாதவை எனவும் அவற்றை தான் கண்டிப்பதாகவும் வோல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்தது.

Sabrina-Siddiqui.jpg

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (26) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சப்ரினா சித்தீகி மீதான துன்புறுத்தல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அக்கேள்விக்கு அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் Nடீஜான் கிர்பி பதிலளிக்கையில், 'அந்தத் துன்புறுத்தல் பற்றிய செய்திகளை நாம் அறிவோம். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எந்தச் சூழலிலும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதை நாங்கள் முற்றாகக் கண்டிக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

அத்துடன், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கெரீன் ஜீன் பியரி பதிலளிக்கையில்,  நாம் ஊடக சுதந்திரத்தைப் பேண உறுதிபூண்டுள்ளோம். ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்துவதற்கு அல்லது துன்புறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் நாம் கண்டிக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158763

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.