Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்

கனகராசா சரவணன்

தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர்  நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை  தொடர்பான விசேட கூட்டம்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிபிருத்திகுழு தலைவருமான இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்  கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் நிலமை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை   எவ்வாறு?  என்ற விடையங்களை கதைக்க வேண்டும் அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கருத்து தெரிவிக்கின்றனர்.

நான் புலிகளில் இருந்தனான் வந்தனான் எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம் இது நான் முதல் இருந்த நிலையை வைத்து இப்போது கதைக்க முடியாது  பிரயோசனமில்லை அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

எங்கள் மக்களை ஒரு பக்கம் சமப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தை சமப்படுத்த வேண்டும் அதற்காக இரு பகக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கதைத்து பேசி நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும். அதனை மாற்றுவதற்கு வேலை செய்யவேண்டும் இல்லாவிடில் வேலையில்லை.

நான் சண்டைபிடிக்க வரவில்லை கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் பண உதவியுடன் ஆடைத்தொழிற்சாலை மற்று பால்உற்பத்தி பண்ணைக்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்த சிஜசி கம்பனி இப்போது என்ன செய்கிறார்கள். இப்போது வேலை செய்யவில்லை என்கின்றனர் இவர்களுக்கு வழங்கிய பணம் யாருடைய பணம் ? இவர்கள் அமெரிக்காவை ஏமாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி எங்களை ஏமாற்றினார்கள் உண்மையில் ஏழை மக்கள் பாவம் சிஜசி கம்பனி கள்வர்கள்.

நாட்டின்  நிருவாக முறை மாற்றவேண்டும் என அறகலயினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறியதா? அரசியல்வாதிகள் மாறியதா? ரியூசன் ஆசிரியர் மாறியதா? வேலை இல்லையே, ?இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாத்தையும் சமனாக்கு என்றால் எப்படி சமனாகும்.

எனவே மாவட்ட  நிருவாக அதிகாரிகள் அரசியல் நிருவாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள்

1983 க்கு முன்னர் மகாவலி காணி இடம் தேவை எந்த இடம்வேண்டுமாயின் அதனை எடுக்க முடியும் அமைச்சருக்கு அது அந்த காலம் இப்ப எப்படி எனவே இந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்கின்றனர் இதை யார் அகழ்கின்றார்கள்? எனவே இவ்வாறன சில விடையங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். R
 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/நன-LTTE-அமபபல-இரநதவன-எசசரதத-பளளயன/73-319906

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி செய்யும் அரசில் இராஜாங்க அமைச்சராக இருந்து கொண்டு யாரை கேள்வி கேட்கின்றார்? யாரை சாடுகின்றார்? யாருக்கு எச்சரிக்கை விடுகின்றார்?

பிள்ளையான் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தமிழர்நலன்களை செய்ய முடியாமல் இருக்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஆட்சி செய்யும் அரசில் இராஜாங்க அமைச்சராக இருந்து கொண்டு யாரை கேள்வி கேட்கின்றார்? யாரை சாடுகின்றார்? யாருக்கு எச்சரிக்கை விடுகின்றார்?

பிள்ளையான் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தமிழர்நலன்களை செய்ய முடியாமல் இருக்கின்றாரா?

பிள்ளையானுக்கும், சாணக்கியனுக்கும் உள்ளூர பனிப்போர் நடக்குது.
கிழக்கில் ஆர் பெரிசு… என்ற வாய்க்கால் தகராறு.
இவர்கள் சண்டை பிடிக்க… முஸ்லீம்கள் நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

ஆட்சி செய்யும் அரசில் இராஜாங்க அமைச்சராக இருந்து கொண்டு யாரை கேள்வி கேட்கின்றார்? யாரை சாடுகின்றார்? யாருக்கு எச்சரிக்கை விடுகின்றார்?

பிள்ளையான் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தமிழர்நலன்களை செய்ய முடியாமல் இருக்கின்றாரா?

ஒரு எடுபிடியைக்கூட நியமிக்க முடியவில்லை அதற்கான அதிகாரம் கூட தனக்கு இல்லை என்று புலம்பியவரால் வேறு என்ன செய்ய முடியுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? புலிகளில் இருந்த ஒரு தகுதியை வைத்து தமிழரை ஏமாற்றி வாக்கு வாங்கி, தனது திட்டத்துக்கு, தன்னை மறைப்பதற்கு இன்னும் தனக்கு வேண்டாதவர்களை அழிப்பதற்குமே சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. அதற்கு கொடுக்கப்படும் பெயர் அமைச்சர்! நீங்கள் அதை பெரிதாக எண்ணி அதிகம் எதிர்பார்க்காதீர்கள் அவரிடமிருந்து. கொலைக்குற்றத்தில் ஐந்தாண்டு சிறையில் இருந்தவர் வெளியில் வரமுடியவில்லை ஆனால் சிறையில் கொலைக்குற்றத்தில் இருந்தவர் தேர்தலில் வென்றார், அமைச்சர் பதவி. சாதித்தது ஒன்றுமில்லை. இதிலிருந்து நாடு எப்படிப்பட்டது இவரால் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? ஜனநாயகம் இல்லாத நாட்டில் ஜனநாயகத்தில் இணைந்தோம் என்று சொல்பவர்களால் நாங்கள் விடுதலைப்போராட்டத்தில் இருந்தோம் என்று சொல்வதை நிறுத்த முடியவில்லை. போராட்டத்திலும் ஒன்றும் சாதிக்கவில்லை, அரசாங்கத்தோடு சேர்ந்தும் சாதிக்க முடியவில்லை, இவர்கள் தமிழை வைத்து பிழைக்கப்பிறந்தவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, தமிழ் சிறி said:

பிள்ளையானுக்கும், சாணக்கியனுக்கும் உள்ளூர பனிப்போர் நடக்குது.
கிழக்கில் ஆர் பெரிசு… என்ற வாய்க்கால் தகராறு.
இவர்கள் சண்டை பிடிக்க… முஸ்லீம்கள் நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

யதார்த்தம் இல்லாமல் அடிபடுவதில் தமிழன் கெட்டிக்காரன். அதாவது நான் பெரிது நீ சிறிது என........எதிலும் தாங்கள் தீர்க்கதரிசிகள் என்ற நினைப்பும்....தாங்கள் சொல்வதெல்லாம் தீர்க்கதரிசனம் என்ற மமதையுமே இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, satan said:

ஒரு எடுபிடியைக்கூட நியமிக்க முடியவில்லை அதற்கான அதிகாரம் கூட தனக்கு இல்லை என்று புலம்பியவரால் வேறு என்ன செய்ய முடியுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? புலிகளில் இருந்த ஒரு தகுதியை வைத்து தமிழரை ஏமாற்றி வாக்கு வாங்கி, தனது திட்டத்துக்கு, தன்னை மறைப்பதற்கு இன்னும் தனக்கு வேண்டாதவர்களை அழிப்பதற்குமே சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. அதற்கு கொடுக்கப்படும் பெயர் அமைச்சர்! நீங்கள் அதை பெரிதாக எண்ணி அதிகம் எதிர்பார்க்காதீர்கள் அவரிடமிருந்து. கொலைக்குற்றத்தில் ஐந்தாண்டு சிறையில் இருந்தவர் வெளியில் வரமுடியவில்லை ஆனால் சிறையில் கொலைக்குற்றத்தில் இருந்தவர் தேர்தலில் வென்றார், அமைச்சர் பதவி. சாதித்தது ஒன்றுமில்லை. இதிலிருந்து நாடு எப்படிப்பட்டது இவரால் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? ஜனநாயகம் இல்லாத நாட்டில் ஜனநாயகத்தில் இணைந்தோம் என்று சொல்பவர்களால் நாங்கள் விடுதலைப்போராட்டத்தில் இருந்தோம் என்று சொல்வதை நிறுத்த முடியவில்லை. போராட்டத்திலும் ஒன்றும் சாதிக்கவில்லை, அரசாங்கத்தோடு சேர்ந்தும் சாதிக்க முடியவில்லை, இவர்கள் தமிழை வைத்து பிழைக்கப்பிறந்தவர்கள். 

கொலைக் குற்றத்துடன் சிறையில் இருந்தவரை அமைச்சராக்கிய நாட்டுக்கு உலக வங்கியே கடன் கொடுக்கின்றது என்றால் மேற்குலக / சர்வதேசத்தின் தரம் எப்படிப்பட்டது என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

இல்லையேல் அசூல் தந்த நாட்டுக்கு நன்றிக்கடனாக வாய் மூடிக்கொண்டிருப்பது போல் பதவி தந்த இனத்திற்கு நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும். சொந்த கருத்தை கூட சொல்லக்கூடாது. பொப் கோன் சாப்பிட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

அது சரி அகதியாக வந்த எங்களை ஏற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கும் பிள்ளையான் தன்னை அமைச்சராக்கிய சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்??? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி அகதியாக வந்த எங்களை ஏற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கும் பிள்ளையான் தன்னை அமைச்சராக்கிய சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்??? :cool:

அகதியா உங்களை ஏற்றுக்கொண்டவர்களுக்காக, அவர்கள் செய்யும்  அநீதிதிகளுக்காக நீங்கள்  வாதாடினால், நிஞாயப்படுத்தினால், அவர்களுக்காக கொலை கொள்ளை செய்தால் நீங்கள் அகதியாக வெளியேறியிருக்க வேண்டியதில்லை, இங்கிருக்கும் கூத்தாடிகளோடு கூடி கூத்தடித்திருக்கலாம் அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கும் இங்கு நீங்கள் வந்து கருத்தெழுத வேண்டிய தேவையமில்லை என நான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.