Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல!

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

“கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.

இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.

மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி,
மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்’றோம்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2023/1339321

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

உண்மை தான்.

ஆனால் அந்தப்பணம் செலவு செய்த இடம் வடக்கு கிழக்கிற்கு வெளியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனால் அந்தப்பணம் செலவு செய்த இடம் வடக்கு கிழக்கிற்கு வெளியே.

வட கிழக்கில் ஏற்பட்ட  சுனாமியை காட்டி... பெற்ற பெரும்  பணத்தையும்
சிங்களப் பகுதிகளுக்கே  செலவழித்தார்கள்.

தொடர்ந்து... கூசாமல் பொய் சொல்வதில், சிங்களவன் பெரிய கில்லாடி.
இதனை உலகமும் நம்புவது வேடிக்கை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

வட கிழக்கில் ஏற்பட்ட  சுனாமியை காட்டி... பெற்ற பெரும்  பணத்தையும்
சிங்களப் பகுதிகளுக்கே  செலவழித்தார்கள்.

தொடர்ந்து... கூசாமல் பொய் சொல்வதில், சிங்களவன் பெரிய கில்லாடி.
இதனை உலகமும் நம்புவது வேடிக்கை.  

சிறி உலகத்துக்கு எல்லாமே தெரிந்தாலும் ஆதாரத்துடன் முறையிடுவதற்கு எம்மிடம் ஆட்கள் இல்லை.

உங்கள் வீட்டல் களவு போனதென்று பொலிசுக்கு தெரிந்தாலும் நீங்களாகவே போய் முறைப்பாடு கொடுத்தாலே விசாரிக்க தொடங்குவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி உலகத்துக்கு எல்லாமே தெரிந்தாலும் ஆதாரத்துடன் முறையிடுவதற்கு எம்மிடம் ஆட்கள் இல்லை.

உங்கள் வீட்டல் களவு போனதென்று பொலிசுக்கு தெரிந்தாலும் நீங்களாகவே போய் முறைப்பாடு கொடுத்தாலே விசாரிக்க தொடங்குவார்கள்.

ஈழப்பிரியன், 
போர்க் குற்றத்தை விசாரிக்க வெளிநாடு தேவையில்லை,
உள்ளூரிலேயே விசாரிக்கலாம் என்று... 
ஐ.நா.வில் சொல்லிவிட்டு வந்த, தமிழ் அரசியல்வாதிகளை 
வைத்துக் கொண்டு இருக்கின்ற இனம் அல்லவா நாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல!

வெளிநாடுகளிட்டை வடக்கு கிழக்கை காட்டி கடன் வாங்கினது. வெளிநாடுகள் உதவியும் செய்தது. ஆனால் எல்லாம் போய்ச்சேர்ந்த இடம் வேறை.....

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கடனில் பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்கே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

bandula-gunawardana.jpg


இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக ஏனைய பகுதிகளை விடவும் வட பகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன. இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை கொண்டு வந்தது. இந்த கடன் மூலம் சகல பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த ரயில் வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன. அத்துடன், மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல், கொவிட் பரவல், அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தற்போது வெளிநாட்டு கடனுக்கான தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி இல்லை. ஜனாதிபதி, மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதிய நிபுணர்களுடன் இணைந்து இந்த கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாண ரயில் சேவை நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படும்.

அதேநேரம் நல்லூர் ஆலய திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அதிசொகுசு கடுகதி சுற்றுலா ரயில் சேவை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக பதுளை ஓடிசி, சீத்தாவாக்கை ஓடிசி போன்று யாழ்ப்பாணம் ஓடிசி ரயில் சேவை ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும். அதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 32 பேருந்துகளுக்கும் அவசியமான பணியாளர்களை வழங்கி, இந்த கடனை செலுத்தக் கூடிய வகையில் இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை மக்கள் நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/263070

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு சிங்களத்திற்கு பொன்முட்டையிடும் வாத்துக்கள். தமிழன் இல்லையென்றால், சிங்களம் உயிர் வாழ முடியாது அரசியலும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல!

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

“கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.

இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.

மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி,
மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்’றோம்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2023/1339321

உண்மை தான்   ....எங்களுக்கும் தெரியும்  கண்மூடிதனமாக குண்டுகள் பொழிகிறது   செலவுகள் கூடிய செயல்  என்று   ஏன்    வடக்கு கிழக்கு மட்டுமே குண்டுகள் பொழிந்தீர்கள்.    ??. இந்த கடனை   ரோஷமுள்ள. தமிழர்கள்   அடைக்கப்போவதில்லை    சிங்களவரிடம். அறவிட்டு அடையுங்கள்.  தமிழன் போராடியபோது    சிங்களவரிடம்.  கையேந்தில்லை    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.