Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் பொலிசாரின் உதவியுடன் சாணக்கியன் இராசமாணிக்கம் பேரூந்துகளின் அனுமதிப்பத்திரங்களையும் அதிரடியாக சோதனை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Batticaloa-Bus-Stand-5-600x450.jpg

https://athavannews.com/2023/1339861

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேரூந்துகளை ஓடுபவர்கள்  பிள்ளையானின் ஆட் கள் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

சட்டவிரோதமாக பேரூந்துகளை ஓடுபவர்கள்  பிள்ளையானின் ஆட் கள் போல.

பிள்ளையானுக்கும், சாணக்கியனுக்கும்... பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டு,
இப்போ... அடிதடிக்கு  போகுமளவுக்கு வந்து விட்டது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கைப்பாட் தனம் போகவில்லைப் போல.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனை தாக்க முயற்சி: பெரும் பதற்றம்

image_216f4c7f4e.jpg

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து   திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவரை தாக்க முற்பட்ட இருவரை ஆர்ப்பாட்காரர்கள் துரத்தி துரரத்தி அடித்து  வெளியேற்றியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை.

மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளை தடைசெய்ய கோரி மட்டு தனியார் பஸ்வண்டி நிலையத்தில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, “பொலன்னறுவையில் உள்ள தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரின் இரு பஸ்வண்டிகளுக்கு  ஒரு போக்குவரத்து அனுமதி பத்திரத்திரம் வழங்கப்பட்டுள்து” என்றார்.

இதில் கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையில் மட்டக்களப்பில் பொறுப்பாளரராக கடமையற்றி வந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் கடந்த 8 வருடங்களாக குறித்த பஸ்வண்டி சேவையில் ஈடுபட அனுமதி வழங்கி ஊழலில் புரிந்துள்ளதாகவும் அந்த பஸ்வண்டியின உரிமையாளரின் பஸ்வண்டியே மட்டக்களப்பு வாழைச்சேனை வரையிலான அனுமதி பத்திரத்துடன் பொலன்னறுவை கதுறுவெலவில் இருந்து காத்தான்குடி வரையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்டுள்ள போது மன்னம்பிட்டி விபத்தில் 11 பேர் உயிரிந்துள்ளனர் என்றார்.

இவ்வாறு சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி போக்குவரத்து சேவையில் ஈடுபட அனமதி வழங்கிய கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபை பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், இந்த மன்னம்பிட்டியில் 11 பேரையும் படுகொலை செய்துள்ளனர் என்றார்.

இந்த நிலையில் அங்கு இருந்த இருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நோக்கி, உண்மைக்கு புறம்பாக பேசவேண்டாம் என பேசியவாறு தாக்க முற்பட்டனர். எனினும், அங்கிருந்த பஸ்வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஒன்றிணைந்து அந்த இருவரையும் அங்கிருந்து துரத்தி துரத்தி அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து  குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து  ஆர்ப்பாட்ட காரார்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான அராஜகங்களுக் நாங்கள் இடமளிக்க கூடாது தனிநபர்களுக்காக வக்காளத்து வாங்கி இந்த குழப்பத்தை ஏற்படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம் அதேவேளை கொல்லப்பட்ட 11 பேரின் நீதி கிடைக்க வேண்டும் இந்த  சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கியமை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதுடன் நாளை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை விசேடமாக பேசவுள்ளதாக சாணக்கின் தெரிவித்தார்.  

image_8f8ea76394.jpgimage_bd052c9e91.jpgimage_bc32fd9ae2.jpgimage_f24a1eef52.jpgimage_0b9a24a44f.jpg
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சாணக்கியனை-தாக்க-முயற்சி-பெரும்-பதற்றம்/150-321132

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு அடிச்சுட்டு சாகவேண்டியதுதான்

இது அனுமதி கொடுத்த இடத்திறகு செல்லாமல் சாணாக்கியன் ஆர்ப்பாட்டத்தை பஸ் நிறுத்துமிடத்திற்கு கொண்டு வந்தது சிறு பிள்ளைத்தனம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.