Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார் வீரசேகர

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப இந்நாட்டை பிரிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது எம்மீது இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்து- லங்கா ஒப்பந்தம் இன்று செல்லுபடியற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஏனெனில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய தனது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும்.

புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு – கிழக்கு இருந்துபோது, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்தார்கள்?

நாம் அம்மக்கள் அன்று வாழ்ந்த விதத்தை நேரில் கண்டுள்ளோம். இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
கல்வியில் முன்னேறியுள்ளார்கள். செல்வந்தர்களாக இருக்கிறார்கள். நன்றாக தொழில் செய்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தெற்கில் சொத்துக்களை வாங்குகிறார்கள். மேலும் 52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்துதான் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், இவர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணம் 22 வீதமாக வளர்ச்சியடைந்தது.

அரசாங்கமானது இங்கு அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், ஜனாதிபதியை சந்தித்து இல்லாதப் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்று நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் அரசியல்வாதிகள் பொய் கூற என்றும் அஞ்சியதில்லை. ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் உண்மையைக் கூற தொடர்ச்சியாக அஞ்சினார்கள்.

இதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளும் இவர்களின் பொய்களை நம்பி ஏற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில், மத்திய அரசாங்கத்தினால் மட்டும் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இலங்கை என்பது சிறிய நாடாகும். இங்கு அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.

இன்று கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றன. 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குருந்தூர்மலையில் சில அரசியல்வாதிகள் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து, தேவையில்லாத இன- மத மோதல்களை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இப்படியான அரசியல்வாதிகளை கனடா உயர்ஸ்தானிகர் சென்று சந்தித்தமையானது, சிங்கள மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.

இவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாம் இங்கு வலியுறுத்துகிறேன். அத்தோடு, அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும், வடக்கிற்கு சென்று தமிழ் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தங்களது சுயாதீனத்தை இறுக்கமாக பாதுகாக்கும். நாம் பொருளாதார ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், எமது சுயாதீனத்தை பாதுகாக்க தவறிவிடக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/கனடிய-உயர்ஸ்தானிகரை-நாட்/

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் : சரத் வீரசேகர!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப இந்நாட்டை பிரிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது எம்மீது இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்து- லங்கா ஒப்பந்தம் இன்று செல்லுபடியற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஏனெனில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய தனது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும்.

புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு – கிழக்கு இருந்துபோது, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்தார்கள்?

நாம் அம்மக்கள் அன்று வாழ்ந்த விதத்தை நேரில் கண்டுள்ளோம். இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
கல்வியில் முன்னேறியுள்ளார்கள். செல்வந்தர்களாக இருக்கிறார்கள். நன்றாக தொழில் செய்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தெற்கில் சொத்துக்களை வாங்குகிறார்கள். மேலும் 52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்துதான் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், இவர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணம் 22 வீதமாக வளர்ச்சியடைந்தது.

அரசாங்கமானது இங்கு அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், ஜனாதிபதியை சந்தித்து இல்லாதப் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்று நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் அரசியல்வாதிகள் பொய் கூற என்றும் அஞ்சியதில்லை. ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் உண்மையைக் கூற தொடர்ச்சியாக அஞ்சினார்கள்.

இதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளும் இவர்களின் பொய்களை நம்பி ஏற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில், மத்திய அரசாங்கத்தினால் மட்டும் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இலங்கை என்பது சிறிய நாடாகும். இங்கு அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.

இன்று கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றன. 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குருந்தூர்மலையில் சில அரசியல்வாதிகள் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து, தேவையில்லாத இன- மத மோதல்களை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இப்படியான அரசியல்வாதிகளை கனடா உயர்ஸ்தானிகர் சென்று சந்தித்தமையானது, சிங்கள மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.

இவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாம் இங்கு வலியுறுத்துகிறேன். அத்தோடு, அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும், வடக்கிற்கு சென்று தமிழ் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தங்களது சுயாதீனத்தை இறுக்கமாக பாதுகாக்கும். நாம் பொருளாதார ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், எமது சுயாதீனத்தை பாதுகாக்க தவறிவிடக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1340695

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்துதான் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன செய்தீர்கள், ஏன் செய்தீர்கள் என்பதை அடிக்கடி நீங்களே நினைவு படுத்திகொண்டும் தெருக்களிலே நின்று கூவிக்கொண்டும் இப்படி அறளை பிடித்து அரற்றக்கூடாது.

2 hours ago, தமிழ் சிறி said:

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவன் கத்துவதை யாரும் காதில் வாங்கவில்லையென்பதே இவர்களின் சந்திப்பு வெளிப்படுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவரை ஒருவரும் கணக்கில் எடுப்பதில்லை. ஓரிரு சிங்கள பவுத்தர்களை தவிர வேறு யாருமே இவரது கருத்துக்கு பதில் கூறுவதும் இல்லை , கவனத்தில்  கொள்ளுவதுமில்லை. எனவே இப்படி அதி தீவிரமாக எதாவது செயட்பட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதட்காக செய்யப்படும் வேலை என்று எல்லோருக்கும் விளங்கி விட்ட்து. எனவே தேர்தலுக்கு முன்னதாக ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். மற்றப்படி இந்த இனவாதியிடம் இருந்து ஏதாவது நன்மையை எதிர்பார்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கலாம். இம்முறை தேர்தலில் இந்த இனவாதி வெல்கிறாரா என. சிங்கள மக்கள் அவ்வளவு விரைவாக மனம் மாறி விட்டார்கள் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

இவரை ஒருவரும் கணக்கில் எடுப்பதில்லை. ஓரிரு சிங்கள பவுத்தர்களை தவிர வேறு யாருமே இவரது கருத்துக்கு பதில் கூறுவதும் இல்லை , கவனத்தில்  கொள்ளுவதுமில்லை. எனவே இப்படி அதி தீவிரமாக எதாவது செயட்பட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதட்காக செய்யப்படும் வேலை என்று எல்லோருக்கும் விளங்கி விட்ட்து. எனவே தேர்தலுக்கு முன்னதாக ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். மற்றப்படி இந்த இனவாதியிடம் இருந்து ஏதாவது நன்மையை எதிர்பார்க்க முடியுமா?

இவரது கட்சியை சேர்ந்த ஒருவர், அழுத்தகம் சொல்லியிருக்கிறார்; பௌத்த வாக்குகளை குறிவைத்து கருத்து தெரிவிக்கிறார் சரத் வீரசேகரே, இது பௌத்த சிங்களவர்க்கு மட்டும் உரிய நாடல்ல, மற்றைய இனங்களோடு சேர்ந்து வாழ சரத் வீர சேகர பழகிக்கொள்ள வேண்டும், அவரது கருத்துக்களையிட்டு யாரும் கலவரமடையத் தேவையில்லை என்கிறார். ம்னனுஷ; குருந்தூர் மலையில், சில பௌத்த பிக்குகளும், மக்களும் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இவரது கட்சியை சேர்ந்த ஒருவர், அழுத்தகம் சொல்லியிருக்கிறார்; பௌத்த வாக்குகளை குறிவைத்து கருத்து தெரிவிக்கிறார் சரத் வீரசேகரே, இது பௌத்த சிங்களவர்க்கு மட்டும் உரிய நாடல்ல, மற்றைய இனங்களோடு சேர்ந்து வாழ சரத் வீர சேகர பழகிக்கொள்ள வேண்டும், அவரது கருத்துக்களையிட்டு யாரும் கலவரமடையத் தேவையில்லை என்கிறார். ம்னனுஷ; குருந்தூர் மலையில், சில பௌத்த பிக்குகளும், மக்களும் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்கிறார்.

அல்லது நம்ம ராகவன் ஐயா சொன்ன மாதிரி இந்த வீர சேகரவும் தூங்கிக்கொண்டு இருக்கிற சிங்கள இனவாதிகளையும், இளைஞர்களையும் தட்டி தட்டி பார்க்கிறாரோ  தெரியவில்லை.  

ஏன் என்றால் சிங்கள இனவாத அரசியலை வேறு யாரும் கொண்டுபோய் (ஹைஜாக்) விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. அதனால் அதனை உயிர்ப்பில் வைத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ, இவர்களின் பருப்பு இனி சிங்களவரிடத்தில் வேகாது என்றே தோன்றுகிறது. இனவாதம், மதவாதம், தமிழரை வெற்றிகொண்ட இரண்டாம் துட்டகைமுனு என்று போற்றி புகழ்ந்தவர்களையே விரட்டி விட்டார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது இவர்கள் அரசியலில் ஒன்றுமே இல்லாதவர்கள், கொஞ்சமாவது அறிவிருந்தால் அவர்களின் தோல்வியில் இருந்து பாடம் படித்து கொள்கையை மாற்றியிருப்பார்கள் இவர்கள். தொண்டைத்தண்ணி வற்றும்வரை ஊழையிட்டு  விட்டு படுக்க வேண்டியவர்களே. சும்மா இருக்கும் இளைஞரிடம் பொல்லைக்கொடுத்து அடிவாங்கப்போகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.