Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி !

Published By: Nanthini

22 Jul, 2023 | 02:08 PM
image

யாழ். தென்மராட்சி மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது புகையிரதமொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. 

இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், முற்பகல் 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அப்புகையிரத கடவையை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். 

அவ்வேளை அந்நபர் மீது குறித்த புகையிரதம் மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளளார்.   

இவ்விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20230722-WA0006.jpg

IMG-20230722-WA0005.jpg

IMG-20230722-WA0009.jpg
 

 

https://www.virakesari.lk/article/160644

  • கருத்துக்கள உறவுகள்

  animiertes-zug-bild-0013.gif   animiertes-zug-bild-0001.gif

இலங்கையில்... நடக்கும் ரயில் விபத்துக்களில், மீசாலையில் தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றது போலுள்ளது. எப்படியும் மாதத்துக்கு ஒன்றாவது மீசாலை விபத்தில் உயிரிழப்பார்கள்.
இந்த இடத்தில்... ரயில்வே கடவையோ, எச்சரிக்கை மணியோ பூட்டாமல்  இருப்பது கண்டனத்துக்குரியது.

கோவில்களுக்கு செலவழிக்கும் காசில்...  உள்ளூர் மக்களும்  இதற்கு உதவினால் இன்னும் நல்லது.
சில... தமிழ் உயிர்களாவது, காப்பாற்றப் படட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நோக்கி சிங்களவன் ரயில் விடத் தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன. இருந்தும் இன்னும் அதனை தடுப்பதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் இல்லை. இதற்கு காரணம்.. என்ன.. மனித உயிர்களின் மதிப்பறியாத நிலையா.. இல்லை அறிவிலிகள் கூட்டத்தால் நாடும் சேவைகளும் நடத்தப்படுவதா..??!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

  animiertes-zug-bild-0013.gif   animiertes-zug-bild-0001.gif

இலங்கையில்... நடக்கும் ரயில் விபத்துக்களில், மீசாலையில் தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றது போலுள்ளது. எப்படியும் மாதத்துக்கு ஒன்றாவது மீசாலை விபத்தில் உயிரிழப்பார்கள்.
இந்த இடத்தில்... ரயில்வே கடவையோ, எச்சரிக்கை மணியோ பூட்டாமல்  இருப்பது கண்டனத்துக்குரியது.

கோவில்களுக்கு செலவழிக்கும் காசில்...  உள்ளூர் மக்களும்  இதற்கு உதவினால் இன்னும் நல்லது.
சில... தமிழ் உயிர்களாவது, காப்பாற்றப் படட்டும்.

கவலையளிக்கிறது  ...ஆனால்  இலங்கையில் தமிழ் சிங்களம் முஸ்லிம் ...என்ற வேறுபாடுகளின்றி     பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு வருட  வருடம்   பாராளுமன்றம் பல மில்லியன்  பணத்தை ஒதுக்கீடு செய்கிறது   ஏன். ???. இந்த பணத்தை திணைக்களங்களின் பெயரில்  ஏன் ஒதுக்கீடு செய்யக்கூடாது.?. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பணத்தை  எப்படி செலவு செய்கிறார்கள்?    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது   நிறுத்தப்படவேண்டும்       நாடு பல வழிகளிலும். முன்னேற்றமடையும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.