Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.க்கு என்ன நடத்தது? கைதான பின்னர் தப்பினாரா?

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறிலங்காவிற்கு கொண்டுவரப் போவதாகவும் கூறிக்கொண்டு தாய்லாந்து சென்ற சிறிலங்காவின் அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

:huh::(:blink::):):)இனியாவது நிஜ உலகில் வாழட்டும்.

கையிலை உடுப்பு பெட்டி, கைப்பை ஒண்டையும் திருப்பி கொண்டுவர இல்லையோ...??

கையிலை உடுப்பு பெட்டி, கைப்பை ஒண்டையும் திருப்பி கொண்டுவர இல்லையோ...??

அதுவும் கொண்டு போகவில்லையாம்.............. :P

அதுவும் கொண்டு போகவில்லையாம்.............. :P

புள்ள பேபி, அவர்கள் இலங்கையிலிருந்து போகேக்க கோவணம் கட்டாமப் போனவையாம். வரும்போது பம்பஸ் கட்டிக்கெண்டு வரலாமெண்ட நினைப்பு.

போற போக்கில் இலங்கை எல்லா நாடுகளையும் கேக்கும் அல்-கைடவை விட புலிகள் தான் உலக்குக்கு ஆபத்ததனவர்கள் முதல் இவர்களை அடக்குவோம் என்று ஏன் பின்லேடனிடம் உதவி கேட்டா கூடா ஆச்சரியப்படுவதுற்க்கில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் (கே.பி) தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட்டார் என்ற செய்தி உருவாக்கிய குழப்பம் தீர்ந்தபாடாக இல்லை. அவர் கைது செய்யப்பட்டதாக முதலில் வெளியான செய்தி சரியானதாக இருக்க வேண்டும் என்றே இலங்கை மற்றும் இந்திய புலனாய்வுத் துறையினர் உறுதியாக நம்புகின்றார்கள். அதன் பின்னர் அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் இப்போது வெளியாகியிருக்கின்றது.

இதேவேளை தாய்லாந்தில் கைதான அவரை இலங்கைக்கு கொண்டுவரப் போவதாகவும் கூறி தாய்லாந்து சென்ற அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தில் பீற்றர் இப்ராகீம் என்பவர் கைது செய்யப்பட்டதை, குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொங் போஸ்ற் ஏசியன் றிபியூன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஆகியன செய்தி வெளியிட்டிருந்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தச் செய்தி ஊடகங்கள் பீற்றர் இப்ராகிம் என்ற பெயரை தமது செய்திகளில் தவிர்த்திருந்தன. இதனைத் தொடர்ந்து தாம் பத்மநாதனை கைது செய்யவில்லை என தாய்லாந்து அதிகாரிகள் மறுத்திருந்தனர். எனினும், பத்மநாதனை விசாரிக்கவும் முடிந்தால் இலங்கைக்கு கொண்டுவரவுமென இரு பொலிஸ்மா அதிபர்களும் மேலதிக வெளிவிவகாரச் செயலாளரும் தாய்லாந்து சென்றிருந்தனர்.

எனினும், இவர்களின் வருகையை தாய்லாந்து அரசாங்கம் ஊக்குவிக்காத போதும் இவர்கள் தாய்லாந்துக்கு தாமாகவே சென்றிருந்தனர். தற்போது அங்கு எந்தவித முன்னேற்றமும் அற்ற நிலையில் அதிகாரிகள் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் தமது நிலையில் உறுதியாகவே உள்ளதாக நாடு திரும்பிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை விட விடுதலைப் புலிகளுக்கு தாய்லாந்து அதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க கே.பி. க்கு என்ன நடந்திருக்கலாம் என்பது தொடர்பில் இரண்டு தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. முதலாவது தகவலின்படி 20 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கிவிட்டு கே.வி.யை தாய்லாந்து பொலிஸார் விடுவித்திருக்கலாம் என ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. மற்றொரு செய்தியின்படி அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. இவரை விசாரணைகளுக்காகத் தமது பொறுப்பில் எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள முதலாவது செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குமரன் பத்மநாதனிடம் இருந்து 20 மில்லியன் டொலர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தாய்லாந்து பொலிஸார் அவரை விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய்லாந்து பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ராஜீவ் காந்தி கொலைச் சதித் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுப்பதில் முக்கிய பங்காற்றுபவர் குமரன் பத்மநாதன் என்கிற கே.பி.இவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை இரு நாட்டு அரசுகளும் தீவிரமாக தேடி வருகின்றன. இந்த நிலையில் இவர் கடந்த 10 ஆம் திகதி தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

இதையடுத்து ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் சி.பி.ஐ.ஈடுபட்டது. ஆனால் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை தாய்லாந்து அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் குமரன் பாங்கொக் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பொலிஸார் தம்மை விடுதலை செய்ய குமரன் 20 மில்லியன் அமெரிக்கடொலர்களை இலஞ்சம் கொடுத்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, குமரன் பத்மநாதன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சதித்திட்டம் தீட்டிய பல்வேறு நபர்களின் பெயரை வெளியிட்டதாக தாய்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஆயுதங்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன மற்றும் அவை எப்படி அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் குமரன் பத்மநாதன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக பத்மநாதன் தெரிவித்த பல்வேறு தகவல்கள் தற்போது அமெரிக்க உளவு அமைப்பிடம் இருப்பதாகவும் அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், அல்குவைதா அமைப்புடன் கே.வி.க்கு உள்ள தொடர்புகளை அறிவதற்காக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. அவரை அவசரமாக பாங்கொக்கிலிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற போதிலும், கே.பி.யை தாம் கைது செய்யவில்லை என உறுதியாகத் தெரிவித்துவிட்டது. அப்படியானால் அவர் கைதானதாக செய்தி வெளியானது ஏன் என்ற கேள்விதான் பெரிதாக எழுப்பப்படுகின்றது.

http://www.murasam.ch/content/view/2492/2/

புள்ள பேபி, அவர்கள் இலங்கையிலிருந்து போகேக்க கோவணம் கட்டாமப் போனவையாம். வரும்போது பம்பஸ் கட்டிக்கெண்டு வரலாமெண்ட நினைப்பு.

ஓ அப்படியா மாமா அப்ப சரி............ :P

புலிகளுக்கும் தாய்லாந்து அதிகாரிகளுக்குமான உறவு தூதரகத்தைன் உறவினைவிட இறுக்கமானது என சிறீலங்கா அதிகாரிகள் சொல்வதில் இருந்து அவர்கள் சொல்லவருவது தெளிவாக புரிகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.