Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து - பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள் - சரத் வீரசேகர நீதியமைச்சரிடம் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

18 AUG, 2023 | 09:44 AM
image
 

(இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள இருதரப்பு முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என அக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறவுள்ள பொங்கல் வழிபாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர்.

குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புராதன சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளன.

குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகளில் ஈடுபடலாம் என முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியமை குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

குருந்தூர் மலையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஊடாக முரண்பாடுகள் தோற்றம் பெறலாம்.

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டில் இனங்களுக்கு இடையில் மீண்டும் இன முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/162612

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்து - பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள் - சரத் வீரசேகர நீதியமைச்சரிடம் வலியுறுத்தல்

கலவரமே நீங்கள்தானே ஐயா. பிறகு எதற்கு நீதியமைச்சரைக் கூப்பிடுவான். அவர் ஏற்கனவே தமிழருக்கு எதிராகக் கூவியபடிதானே இருக்கிறார். புதிதாக என்ன கூவப்போகிறார். முதலில் நீங்கள் ஆக்கிரமிப்பை நிறுத்தும் முடிவுக்கு வந்தாலே பல பிரச்சினைகள் தோன்றாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் செய்யேக்கை இடையிலை வச்சு மறிக்கிறமாதிரி கொழும்பிலையிருந்து போற ஆக்களை மறிக்கலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஊடாக முரண்பாடுகள் தோற்றம் பெறலாம்.

ஹாஹா..... இனமுரண்பாட்டை ஏற்படுத்துவது அவர்கள், அதை தடுக்கட்டாம் அவருக்கே, தான் என்ன சொல்கிறேனென புரியாமல் தடுமாறுகிறார். அவரே சொல்கிறார்; இந்து வழிபாட்டை குழப்ப, கொழும்பில் இருந்து ஐநூறுபேர் செல்ல உள்ளனர் என்று. இவர்களை அந்த தெய்வமே கண்காணிக்கட்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

ஹாஹா..... இனமுரண்பாட்டை ஏற்படுத்துவது அவர்கள், அதை தடுக்கட்டாம் அவருக்கே, தான் என்ன சொல்கிறேனென புரியாமல் தடுமாறுகிறார். அவரே சொல்கிறார்; இந்து வழிபாட்டை குழப்ப, கொழும்பில் இருந்து ஐநூறுபேர் செல்ல உள்ளனர் என்று. இவர்களை அந்த தெய்வமே கண்காணிக்கட்டும்! 

சுருக்கமாக கூறினால், எங்க அப்பன் குதிருக்குள் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.