Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

 

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள போராடும் உரிமை இருக்கிறது.

அதனை யாருக்கும் தடுக்க முடியாது. என்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் மற்றும் கோயிகள் தொல்பொருள் ஆய்வு என்ற பேரில் அரசாங்கம் கைப்பற்றி வரும் நடவடிக்கையை நாங்கள் அதவதானித்து வருகிறோம்.

இந்த விடயங்களில் அந்த பிரதேசத்தில் இருக்கும் தேரர்களும் சம்பந்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்கள் தங்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் காணிகளை பாதுகாத்துக்கொள்ள போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அது அந்த மக்களின் உரிமை அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள பெளத்த விகாரைகளுக்கோ அங்குள்ள தேரர்களுக்கோ யாரும் கை வைத்ததாக இல்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகளின் காரணமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அங்குள்ள இந்துக்கோயில்களில் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது அதற்கு தடைகளை ஏற்படுத்தியதாலே பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கிறன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா களனியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது, வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

அவரின் இந்த கூற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல். அதனால் மேர்வின் சில்வாவின் இந்த கூற்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் மேர்வின் சில்வா போன்றவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருக்காமல் நாட்டில் அனுமதிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதன் மூலமே தமிழ் மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்படும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவருவதில் தொடர்ந்தும் இழுத்தடிக்கக்கூடாது என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன். 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மரவன-சலவவன-கறற-வனமயக-கணடககததககத/175-322849

  • கருத்துக்கள உறவுகள்

 

செய்தியோடு தொடர்புடைய விடயம் உள்ளதால் காணொளியை இணைத்துள்ளதுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பிச்சைக்காரர், தங்கள் வெற்றுப்பாத்திரங்களை நிரப்புவதற்காக எழுப்பும் கோஷமது என்பதோடு அவர்களின் இன பண்பாட்டின் வெளிப்பாடும் கூட. காடைப்பிக்குகளையும் மதத்தை வைத்து பிழைக்கும் கூட்டத்தையும் அனுப்பி 
குருந்தூர்மலை பொங்கலைகுழப்பி, தமிழ் மக்களை சீண்டி ஒரு இனக்கலவரத்தை தூண்டி அதிலே அரசியல் பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள, அரசியல் செய்ய காத்திருந்த சரத் வீரசேகர, உதயன் கம்மன்பில, விமல் வீரவன்ச இந்த கோமாளி மேர்வின் போன்றவர்களுக்கு பெரிய ஏமாற்றம். அதனாலேயே அதை தாங்கமுடியாமல் பொங்கலை நிகழ்த்திவிட்டோம் என தமிழர் நினைக்கக்கூடாது, குருந்தூர் மலை சிங்களவருக்குரிய பிரதேசம் எனக்கூறி, விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன் இன்னும் சீண்டிக்கொண்டிருக்கிறார்கள். பற்றியெரியாதா  எனும் எதிர்பார்ப்புடன். இவர்கள் பேசுவதை பார்த்தால், படித்த அரசியல்வாதிகள் போலவா தெரிகிறது? ஏமாற்றி கொள்ளையடிப்போர், குடித்து விட்டு தெருவில் நின்று போவோர் வருவோரை சண்டைக்கிழுக்கும் குடிகார பைத்தியங்கள்போலல்லவா தெரிகிறது! அவர்கள் அனுப்பி வைத்தவர்களும் வழிபட வந்தவர்கள் போல் தெரியவில்லையே. வந்த பிக்குவும் சித்த சுவாதீனமில்லாத நித்திரையில் நடக்கும்குழந்தைபோல வந்து விளையாட்டுப்பொருளுக்கு அடம்பிடிக்கும் குழந்தைபோல வம்பிக்கிழுக்குது. இவர்கள் வழிபட வரவில்லையே. சரதவீரசேகர, மேர்வின் சில்வா பகிரங்கமாக அறைகூவல் விட்டே அனுப்பிவைத்து விட்டு   காத்திருந்தவர்களல்லவோ. அடைந்தது ஏமாற்றம். போரிலே பயங்கரவாதிகளிடம்  இருந்து மக்களை காப்பாற்ற போரிடுகிறோம் என்று பொய் கூறி, நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி கடன் வாங்கி, ஒரு இனத்தை அழித்ததோடு தமிழரை வெற்றி கொண்டுவிட்டோம் போய்ப்பாருங்கள் என்று பௌத்த சுற்றுலா அனுப்பிவைத்து விழா கொண்டாடியவர்கள் இப்போ எங்கே? அவர்களுக்குத் தெரியும், தாம்அரசியல் கதிரை ஏறாவிட்டால் சிறை செல்வதும் சொத்துக்கள் இழப்பதும் நிட்சயம் என்பது. தம்மை பாதுகாத்துக்கொள்ள இப்படியான அரைகுறைகளை ஏவிவிட்டு அரசியல் கதிரை கனவோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் கொடுக்கும் சிகிச்சையில் இவர்களின் கனவுகள் கலைந்து இவர்களை ஆட்டிப்படைக்கும் இந்த மனநோய் தீரும். அதுவரை இவர்கள் கத்துவதை நாம் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை கண்டிப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை, அவர்கள் திருந்த போவதுமில்லை . வேறு ஏதாவது பிரயோசமான வேலை இருந்தால் பார்ப்பது எமது உடம்புக்கும், குடும்பத்துக்கும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த போராளிகளின் கல்லறைகளை உழுதவர்களின் தந்தையாரின் சிலையை உடைத்து விழுத்துவதை தடுக்க முடியவில்லையே அவர்களால்? நாகரிகம் வளர்ந்த சமுதாயத்தில் இப்படியான காட்டுமிராண்டிகளும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தாலும் இயற்கை குணத்தை மாற்ற முடியாது. அவர்களை அவர்கள் சார்ந்த சமூகத்திடம் கையளிப்பதே நமக்கு நல்லது. ஏனெனில் எந்த தண்டனை அவர்களுக்கு தகுந்தது அவர்களை மாற்றியமைக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் படி கிறிஸ்தவர்.

உவருக்கேன் உந்த வேலை என்று இணையத்தில் கேட்கறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

பெயர் படி கிறிஸ்தவர்.

உவருக்கேன் உந்த வேலை என்று இணையத்தில் கேட்கறார்கள்.

அதுதான் அரசியல்! பதவிக்காக: அப்போ கிறிஸ்தவர்கள். அரசியலுக்காக: இப்போபௌத்தத்தை பாவிக்கிறார்கள். அவர்களுக்கென்று எந்த மதமுமில்லை வழிகாட்டலுமில்லை. மகிந்தா கிறிஸ்தவர், ஜே .ஆர். கிறிஸ்தவர். அவர்களும் இவர் செய்வதையே செய்தனர், பேசுவதையே பேசினர். பலியாக்கப்பட்டதும் பழி சுமந்ததும் ஏழை சிங்கள, பௌத்த இளைஞர். மதம் அப்பப்போ தொட்டுக்க. இவர்களின் இந்தபேச்சிலே, கக்கும் இனவாதத்திலே, முட்டாள்தனத்திலேயே நம் விடுதலை உண்டு. இவர்களே நமக்கு நடந்த அனிஞாயங்களை தங்களையறியாமல் வெளிப்படுத்துகின்றனனர். இவர்களை கத்த விட்டு வேடிக்கை பார்ப்பதோடு வெளியுலகுக்கும் கொண்டு செல்ல வேண்டும் நாம். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

பெயர் படி கிறிஸ்தவர்.

உவருக்கேன் உந்த வேலை என்று இணையத்தில் கேட்கறார்கள்.

சிங்கள கிறிஸ்தவர்?. ஆனால் , இவர் தான் துஷ்ட்ட கெமுனு பரமபரையில் வந்த சிங்களவன் என்று அடிக்கடி கூறுவார். இவர் தென் பகுதியை சேர்ந்த கடும்போக்கு சிங்களவர் எனப்து எல்லோருக்குமே தெரியும்.

நிறைய சிங்கள பவுத்தர்கள் பெயர்கள் சில்வா, பீரிஸ், பெர்னாண்டோ, பெரேரா, சொய்சா, மொறாயஸ், டபாரெரா போன்ற பேர்களில் காணப்படுகின்றார்கள். அதே நேரத்தில் இந்த பெயர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

எனவே அவரை கிறிஸ்தவர் என்று சொல்ல முடியாது. அவர் தான் சிங்கள பவுத்தன் என்றுதான் கூறுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Cruso said:

நிறைய சிங்கள பவுத்தர்கள் பெயர்கள் சில்வா, பீரிஸ், பெர்னாண்டோ, பெரேரா, சொய்சா, மொறாயஸ், டபாரெரா போன்ற பேர்களில் காணப்படுகின்றார்கள்.

 (சந்தற்பவாத) பச்சோந்திப் பெயர்கள்!

10 minutes ago, Cruso said:

இந்த பெயர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

இது சரி. பெயரை வைத்து கிறிஸ்தவனா சைவனா என கண்டுபிடித்து விடலாம்.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.