Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு சிங்கள எழுத்துக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்தார் இராசமாணிக்கம் - பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள எழுத்துக்காக இணைந்தார் இராசமாணிக்கம்

 வ.சக்தி       
 
“1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள்” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

“தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பங்கேற்புடன் அண்மையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. 

1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபா நிதி தேவையாகவுள்ளது.

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். 

அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தோகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா பாராளுமன்றத்திலே இருந்தார்.

 இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள். தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்  பொலிஸில் சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிருவாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிருணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை. இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். 

ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துவக்குகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல்” என்றார்.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஒரு-சிங்கள-எழுத்துக்காக-இணைந்தார்-இராசமாணிக்கம்/175-323743

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிருணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை. இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். 

ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துவக்குகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல்” என்றார்.

சந்துல சிந்து பாடி இருக்காரு சந்திரகாந்தன் அரசியல் முக்கியம் குமாரு  என்ற நிலை

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ட்டர் குண்டுவெடிப்புக்களை ஒழுங்குசெய்தவர் இவர் என்று இன்றைக்கு சனல் 4 பேசப்போகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துவக்குகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல்” என்றார்.

இயக்கத்திற்கு போவதற்கு முதல் இந்த ஞானோதயங்கள் வரவில்லையா? அல்லது தமிழின வரலாறுகள் தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம்,

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மூளையிலதான் பிழையென்றால், செவிட்டிலும் பிழையோ அல்லது இனவாதிகளின் கூக்குரல் விழவில்லையோ? போனவர்களை குறை சொல்கிறார், இவரேதான் பதவியில் இருந்தபோது ஒரு பியூனைக்கூட நியமிக்க முடியாத அதிகாரமற்ற கதிரையில் இருந்து புலம்பியவர். இவர் கண்முன்னாலேயே தமிழ் விவசாயிகளின் மேய்ச்சல் தரை பறிபோயிருக்கிறது தடுக்க முடியவில்லையே இவரால்? சிங்களம் தான் செய்யும் அடாவடிகளை சாதனையாக காட்ட இப்படியான விலைபோனதுகளை பக்கத்தில் வைத்து அலம்பறை பண்ண வைப்பது. தான் கடந்த காலங்களில் அரசோடு சேர்ந்து எதை சாதித்தார்? மக்கள் குறைவின்றி வாழ்ந்திருக்க வேண்டுமே? ஏன் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? அன்றாட பிழைப்புக்காக கோசம் போட்டு, மற்றவரை குற்றம் சாட்டி அரசியல் செய்வதே இந்த கையாலாகாதவர்களின் பிழைப்பு. அவர்கள் செய்யவில்லை, நாம் சிங்களம் செய்யும் தவறை கண்டிக்கக்கூடாது, எல்லாம் எங்கள்மேற்தான் தப்பு என்று சொல்லி சிங்களத்தை காப்பாற்றுவதற்கு  கைக்கூலி, போலி அரசியல்வியாதிகள் பெருகிவிட்டார்கள். இதை சொல்வதற்கு இவர் அரசியல் செய்கிறார். பாவம் இவர்கள்! இதை சொல்லாமல் தாங்களாகவே பிழைப்பு நடத்தவும் முடியாது, இதிலிருந்து  ஒதுங்கியிருக்கவும் முடியாது இவர்களால். இவர்கள் செய்தது இவர்களை இப்படி பொறியில் மாட்டி வைத்திருக்கிறது. இப்படி கத்தி கத்தியே மடிவதுதான் இவர்களின் விதி! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இயக்கத்திற்கு போவதற்கு முதல் இந்த ஞானோதயங்கள் வரவில்லையா? அல்லது தமிழின வரலாறுகள் தெரியவில்லையா?

அவர் இயக்கத்தில் இணையும்போது சாதாரண போராளி. இன்று அவர் அதே இயக்கத்திற்கெதிராக இயங்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகளின்  மரணத்திற்குக் காரணமாயிருப்பவர். அரசால் தமிழினத்திற்கெதிராக இறக்கி விடப்பட்டவர். இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

அவர் இயக்கத்தில் இணையும்போது சாதாரண போராளி. இன்று அவர் அதே இயக்கத்திற்கெதிராக இயங்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகளின்  மரணத்திற்குக் காரணமாயிருப்பவர். அரசால் தமிழினத்திற்கெதிராக இறக்கி விடப்பட்டவர். இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? 

கொஞ்சம் பெறுங்கள். இன்றைக்கு சேனல் 4 என்ன சொல்லுதென்று கேட்ப்போம். முதலே செய்திகள் வெளி வந்தாலும் உண்மை எதுவென்று அறிந்து கொள்ளுவோம். பின்னர் இந்த கொலையாளியின் கருத்தை அறிந்து கொள்ளலாம். அதட்கு பின்னரும் இதே நிலைபாடா இல்லை மாறுதா என்று தெரியவரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன மாற்றம் வரப்போகிறது? புலம்பெயரின் சதி, பணம், சர்வதேசத்தின் சதி என்று வழமைபோல் தன் பிழையை மற்றவர் மேல் போட்டு தப்பித்துவிடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.