Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறிப்போன காயங்களின் வலி

Featured Replies

ஆறிப்போன காயங்களின் வலி உண்மையில் அவை ஆறிப்போகாத வடுக்களின் நினைவுகள் தான். 18 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக செயற்ப்பட்ட வெற்றி செல்வியின் ஏழாவது நூல் இதுவாகும்.  பெயருக்கு ஏற்றாற்  போல அவர் வெற்றி செல்வியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நம் வாழ்க்கையில் தினம் தினம் எத்தனையோ நூல்களை வாசிக்கின்றோம். ஆனால் ஏனோ ஒரு சில நூல்கள் தான் எப்போதும் நெஞ்சை வருடிக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் இந்த நூலும். அவர் வாழ்ந்த சமூக சூழலில் உள்ள மக்களின் பிரச்சினைகள்தான் அவரது படைப்புக்களின் கருவாக மாறியுள்ளது.  ஆறிப்போன காயங்களின் வலி என்ற  இந்நூல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவமணி வெளியீட்கதால் வெளியிடப்பட்டது.

 

ஈழப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ்வு எனும் தடுப்பு முகாமில் வாழ்ந்த அனுபவங்களை ஒரு வரலாற்று ஆவணமாக பதிவு செய்துள்ளார். இந்த பெருங்கதை பம்பை மடு தடுப்பு முகாமை மையப்படுத்தி பேசுவதாய் அமைந்துள்ளது .ஒரு மாபெரும் யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு நகர்ந்தது என்பதை பதிவு செய்த வரலாற்று ஆவணமாகவும் விளங்குகிறது .புனர்வாழ்வு என்ற பெயர் உண்மையில் அந்த முகாமிற்கு இட்ட பெயராக மாத்திரமே இருந்திருக்கிறது

பம்பைமடு முகாமில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட  இல்லாமல் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் ஏங்கிய மக்களின் வாழ்க்கை சரித்திரம். இந்த பதிவானது அவர் கடைசியாக எழுதிய "ஈழப் போரின் இறுதி நாட்கள்" என்ற அனுபவப் பகிர்வின்  தொடர்ச்சியான பதிவாக காணப்படுகின்றது .அந்த முகாமில் வாழ்ந்த அனைவருக்கும் உறக்கம் கூட ஒருவகை சுமையாக தான் இருந்திருக்கிறது. ஒரு பெரும் புயலுக்கு பின்னர் நிமிர்ந்து நிற்கும் புற்களைப் போலத்தான் அங்குள்ள முகாம் வாசிகளும். சாதாரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க கூட சரியானதொரு மலசல கூடம் இல்லாமல் தினம் தினம் அவஸ்தைப்படும் மக்களை கண்முன்னே காட்டி இருக்கிறார் வெற்றிச்செல்வி. பெரும் போராட்டத்திற்குப் பின் உடைமைகளை இழந்து உரிமைகளை இழந்து உறவுகளையும்  இழந்து ஏன் உடல் உறுப்புக்களை கூட இழந்து அல்லல்ப்படும் மனங்கள் தனக்குத் தெரிந்த ஒருமுகம் இந்த இந்த பம்பைமடு முகாமில் தென்படாதா ? என ஏங்கி நிற்கின்றார்கள்.

 

Vetriselvi-book-002.jpg

    வாழ்வா சாவா என்ற என்ற களத்தில் இருந்த  உள்ளங்கள் பெரும் அழிவிற்கு பின்னர்  கணத்து  போயிருந்தாலும் கூட, முகாமிற்குள்ளே தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் மனிதத் தன்மையோடு உதவி செய்து கொண்டு தான் வாழ்ந்து இருக்கின்றார்கள் .வெற்றிச்செல்வி  இந்த நூலில் தாம் ஏற்கனவே வாழ்ந்த முகாமிற்கு திரும்பவும் சென்று அந்த இடங்களை மீண்டும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளமை மிகவும் நெகிழ்ச்சியானதாக இருக்கின்றது.     

                        இந்த நூல் மூலம் அவர் காட்டி இருக்கின்ற அவலம் அவருடைய சொந்த அனுபவம் மட்டுமல்ல அவரோடு அந்த முகாமில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உறவுகளின் அனுபவப் பகிர்வு. இதில் அவர் எம்மோடு உரையாடுவதை போன்ற பாணியில்  எழுதியிருக்கின்ற மொழி நடை இந்நூலை தொய்வில்லாமல் வாசிக்க தூண்டுவதாய் அமைந்துள்ளது. தமது சொந்தங்கள் யாரேனும் தம்மை வந்து சந்திக்க மாட்டார்களா?  என்ற ஏக்கத்தையும் அவர்களை சந்தித்த பின்பு அவர்களோடு இன்புற்றுக் கதைக்க முடியாமல் தடுமாறுகின்ற உணர்வுகளையும் கொட்டி தீர்த்து இருக்கிறார் நூலாசிரியர்.

 

       மேலும் இந்த நூலின் மூலம் அவர் நிறைய மனிதர்களை பதிவு செய்து வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார். அடுத்த கொட்டிலில் இருந்த மருத்துவ போராளி குயிலி. போராட்டங்களுக்குப் பின்னரும் கூட முகாம் வாழ்க்கையில் தொடர்ந்தும் தமது சேவையை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு சேவகியாக நின்று மனதிலே ஒரு நீங்காத இடத்தை பெற்று விட்டார் என்று கூட சொல்லலாம். தான் பெற்ற மகளை தூக்கி சற்று நேரம் கொஞ்சுவதற்கு கூட வழி இல்லாமல் தவிக்கும் ஒரு தாய். பிறப்பால் ஒன்றாகப் பிறந்து இயக்கத்திலும் ஒன்றாக இருந்து புனர்வாழ்வு முகாமில் பிரிக்கப்பட்ட இரு சகோதரர்களின் பாச போராட்டம்,  இவை மட்டுமா தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை தொலைத்து விட்டு கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தாய்  என எத்தனை எத்தனை மனிதர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் வெற்றிச்செல்வி.

                      ஒரு ரணமான சூழலை கூட மகிழ்ச்சியான சூழலமைவாக மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு உண்மையிலேயே ஒரு மனத்திடம் வேண்டும் . இந்த தலைமுறையினர்  சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றார்கள். ஆனால் அவர்களது மன தைரியத்தோடு எம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாங்கள் எந்த புள்ளியில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. தத்ரூபமான சம்பவங்களை உண்மையான கதாபாத்திரங்கள் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். மகிழ்ச்சி, கோபம், அழுகை ,விரக்தி, பயம் அனுதாபம் என்ற பல உணர்வுகளைக் கொண்ட ஒரு வெளியாக இந்த பம்பைமடு தடுப்பு முகாம் அமைந்திருக்கின்றது.                                                  ஆழ்மனதிற்குள்ளே சுட்டெரிக்கும் சூரியனைப் போல பல வலிகளை சுமந்து கொண்டு திரிந்தாலும் கூட  தமது திறமைகளை வெளிக்கொணரும் முகமாக பல கலை நிகழ்வுகளையும் அரங்கேற்றி அந்த தடுப்பு முகாமை தமக்கு இசைவான ஒரு களமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். மனதை அழுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாக அவை அமைய பெற்றுள்ளது. உறவுகளை தொலைத்தவர்கள் கை, கால் இல்லாமல் போனவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருமே அந்த முள்வேலி காட்டில் கூட தமது சுபாவத்தை மாற்றிக் கொள்ளாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியப் பட வைக்கின்றது.

                     தனக்காக மட்டும் சிந்திக்காமல் பிறருக்காகவும் சிந்திப்பவர்கள்தான்   தான் உண்மையான எழுத்தாளர்களாகின்றார்கள். அவர்களது  சிந்தனை மிகவும் பரந்தது. சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் அவர்களை  தாக்கி கொண்டேயிருக்கின்றது உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ ஒருவர்  சிந்தும் சிரிப்பொலி இன்பத்தை அள்ளிக் கொடுக்கின்றது. இத் தாகத்தால் தோன்றும் கருவை தமது அனுபவத்தின் சாரத்தை ஊட்டி வளர்த்து உரிய நேரத்தில் பிரசவிக்கும் போதுதான் அது அமரத்துவமான படைப்பாகின்றது. திடீர்த் திருப்பங்களையும் அதிகமான கற்பனைகளையும் கலந்து மக்களை மயக்க முயல்வது போலித்தனமானவையாகும் . மக்களின் பார்வைக்கு சுலபமாக எட்டக் கூடிய நியாயமான பாதையைக் காட்டுவது தான் பயன் தரும் படைப்பாகும். சோகமும் சோதனைகளும் நிறைந்த வாழ்வில் பலத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுவதுதான் எழுத்தாளனின் வெற்றி. அந்த வெற்றி படிக்கட்டுகளில் நிற்பவராகத்தான் எனக்கு வெற்றிச்செல்வி தென்படுகின்றார்.

                  இவ்வாறு கடந்து சென்ற நாட்களை எல்லாம் வெற்றி செல்வி எழுத்துக்களாக சுமந்து கொண்டதால் தான் அந்த சம்பவங்கள் இன்றும் உயிரோடு உலாவிக் கொண்டிருக்கின்றன. அந்த பேரிறைச்சலுக்குள்ளேயும் அவர் பேனை பிடித்து கவிதைகள் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பதும் சற்று வியப்பாகத்தான் இருக்கின்றது.

   

             என் சனங்களின் அளவற்ற கண்ணீரை  என்னால் துடைக்க இயலாமல் இருக்கலாம். என்றாலும் அதற்காகவே வாழ வேண்டும் .என்னால் எவ்வளவு நன்றாக வாழ முடியுமோ அவ்வளவு நன்றாக வாழ வேண்டும். தோற்றுப்போனவர்களின்  அடையாளமாக அல்லாமல் சாதனை படிகளை கடக்கும் துணிவுடன் முன்னேறியே ஆக வேண்டும் . யாருக்கும் பின்னால் அல்ல முன்னால் என்று அவரின் இறுதி முடிவு எனக்கு இந்த நூலில் மிகவும் விருப்பமான வரிகளாக அமைந்துள்ளது.

      ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூலின் மூலமாகத்தான் தமிழர்கள் கடந்து வந்த ஒரு மாபெரும் சகாப்தத்தை நான் அறிந்து கொண்டேன். உலக வரலாற்றை தேடித்தேடி படிக்கும் நாம் உண்மையில் எம்மைப் பற்றிய வரலாற்றை தேடியறிய வேண்டும் என்ற ஆவலை இந்நூல்  எனக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. ஆறிப்போன காயங்களின் வலி என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் அவை இன்றுவரையிலும் ஆறாத காயங்களின் வழியாகத்தான் நீண்டு கொண்டிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

அறியத்தந்தமைக்கு  நன்றி ரதி கலா!  நல்வரவு யாழ் களத்துக்கு .யாழில் தொடர்ந்து இணைந்து இருங்கள்.    

ஆறிப்போன காயங்கள் வலிக்காது அவை வடுக்கள்.. தழும்புகள். வரலாற்றுச் சுவடுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2023 at 21:37, ரதிகலா said:

என் சனங்களின் அளவற்ற கண்ணீரை  என்னால் துடைக்க இயலாமல் இருக்கலாம். என்றாலும் அதற்காகவே வாழ வேண்டும் .என்னால் எவ்வளவு நன்றாக வாழ முடியுமோ அவ்வளவு நன்றாக வாழ வேண்டும். தோற்றுப்போனவர்களின்  அடையாளமாக அல்லாமல் சாதனை படிகளை கடக்கும் துணிவுடன் முன்னேறியே ஆக வேண்டும் . யாருக்கும் பின்னால் அல்ல முன்னால் என்று அவரின் இறுதி முடிவு எனக்கு இந்த நூலில் மிகவும் விருப்பமான வரிகளாக அமைந்துள்ளது.

எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடித்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.