Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா நேரடியாக பேசாது என்ற இந்து "ரா"மின் கூற்று உண்மையா?

Featured Replies

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு.

மேலும் வாசிக்க

இத்தனை தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தை செய்யும்போது, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் கூறுவதற்கு யார் இவர் ?

ஈழத் தமிழருக்கான உரிமைகள் கிடைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார் ராம்.

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.

//பார்ப்னர்களாகிய நாங்கள் நடமாடுகின்ற போது- இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்கள் இருக்கும்போது அப்படி ஒருபோதும் பேசவிட வேமாட்டோம் என்ற பார்ப்பன ஆதிக்க வெறியும்தான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சலுக்குக் காரணம்!

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.///

புதினத்துக்கும் ஆரிய திராவிட பார்ப்பன வியாதி வந்துட்டுதா? எங்கயப்பா போய்ட்டினம் யாழ்க் கழ பார்ப்பன அனுதாபிகள்? :P

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராமும் இலங்கை நெருக்கடியும்

சென்னையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான `இந்து'வின் பிரதம ஆசிரியர் நரசிம்மன் ராம் கொழும்புக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை இனநெருக்கடி தொடர்பில் கருத்துகளைத் தெரிவிக்கும்போது இந்தியாவின் சார்பில் பேசுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டவர் போன்ற தோரணையில் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று அவர் பொதுவில் பேசினாலும் கூட, அவர் கருத்துகளைத் தெரிவிக்கின்ற பாணி அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்ற சக்திகளுக்கே மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. கடந்த வாரம் இலங்கை- இந்திய நட்புறவுச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு ராம் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கை இனநெருக்கடி மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் தனதுரையில் அவர் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் ஒரு கால கட்டத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனுபவத்தையும் ராம் கொண்டிருக்கிறார். சிறந்த அரசியல் விமர்சகர் என்று வர்ணிக்கப்படுகின்ற ராம் இலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை இன்னமும்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளில் அவருக்கு இருக்கின்ற முனைப்பு காரணமாக சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் தொடர்பில் சரியானதொரு மதிப்பீட்டை அவரால் இன்று செய்யமுடியாதிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா பங்கேற்க வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியாது என்கின்ற அதேவேளை, தமிழர்களுக்கு கணிசமான அளவுக்கு சமத்துவத்தை உறுதிசெய்யக்கூடிய தீர்வொன்றைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உற்சாகத்தை இந்தியா கொடுத்துவரும் என்று கூறியிருக்கும் ராம், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கை (முன்னைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு) மாற்றத்துக்குள்ளாகியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.