Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம்.

கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்தருணம் எனது பரிசோதனை முடிவினை பார்வையிட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஆம் அந்த முடிவில் சாதாரணமாக வளர்ந்த சுகதேகியான ஆண் ஒருவருக்கு 0.8 தொடக்கம் 1.3 mg/dl இருக்கவேண்டிய Creatinine இன் அளவு எனது பரிசோதனை முடிவில் 4.4 mg/dl ஆக காணப்பட்டது. இந்த அளவானது இரண்டு சிறுநீரகங்களும் தீவிரமான பாதிபைக்கொண்டுள்ளது என்பதனை தெரிவித்தது. 31வயதுடைய ஆண்மகன் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு என அறிவிக்கப்பட்டால் அந்த ஆண்மகனின் மனநிலை அல்லது உளநிலை என்னவாக இருந்திருக்க முடியும் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.

அந்த மனமுடைந்த மனோநிலையில் பணிப்பாளரை மாலை 6.15 மணியளவில் சந்தித்தபோது அவர் கூறியது இவ் பரிசோதனை முடிவு தொடர்பாக நான் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க பரிந்துரைக்கப்பட்டதுடன் மீண்டும் RFT (Renal Function Test) எனப்படும் முழுமையான சிறுநீரக பரிசோதனைக்கும் பணிக்கப்பட்டு அதற்கான குருதி மாதிரியை வழங்கச் சென்றிருந்தபோது PRO அவர்களினால் தனியாக மாதிரி தேவையில்லை எனவும் காலையில் serum creatinine பரிசோதனைக்கு வழங்கிய குருதி மாதிரியில் RFT பரிசோதனையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு மறுநாள் மாலை 6.00 மணிக்கு சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் ஒருவருக்கும் என்னால் முற்பதிவு செய்யப்பட்டது.

மறுநாள் 13.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு RFT பரிசோதனை முடிவினை பெற்று பார்த்தபோது அதிலும் serum creatinine அளவு எவ்வித மாற்றமும் இன்றி 4.4 mg/dl ஆகவே இருந்தது.

மனமுடைந்த நிலையில் மாலை சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரின் ஆறுதல் தரும் வார்த்தை எதையாவது கேட்கமுடியாதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்து மாலை 7.00 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரை சந்தித்தபோது என்னை முழுமையாக அன்பாக சிறுநீரக பாதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் குணங்குறிகளை பார்த்தும் கேட்டும் ஓர் முடிவிற்கு வந்த வைத்திய நிபுணர் அவர்கள் இந்த Serum Creatinine மற்றும் RFT பரிசோதனை முடிவில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் பரிந்துரைக்கும் வேறு ஒரு தனியார் ஆய்வுகூடத்தில் 8 விதமான பரிசோதனைக்கு பரிந்துரைத்துவிட்டு அவர் கூறிய வார்த்தை "இங்கு (அவ் வைத்தியசாலையில்) நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசோதனை முடிவானது பிழையான முடிவாகவே இருந்துவிடவேண்டும்" என்றாகும். அவரது வார்த்தையில் இருந்து இது எந்தளவு பாரதூரமான நிலை என்பதை என் போன்றே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

அதன்பின் மறுநாள் காலை 14.09.2023 காலை 8.30 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்தமைக்கமைய அந்த தனியார் ஆய்வுகூடத்தில் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளை வழங்கிவிட்டு சிறந்த சாதகமான முடிவிற்காக காத்திருந்து அன்றைய தினம் மாலை முடிவுகளை பெற்று பார்தவுடன் மீண்டும் உயிர்பெற்றது போன்ற ஒரு உணர்வினை அனுபவித்தேன்.

ஆம் அந்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியான சாதாரண அளவுகளையே காண்பித்தன. அதன் பின் நேற்றய தினம் (19.09.2023) மீண்டும் அதே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் இன்றைய தினம் (20.09.2023) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணருக்கு முற்பதிவினை மேற்கொண்டு பரிசோதனை முடிவினை காண்பித்தபோது அனைத்தும் சரியாக உள்ளது என்றும் தவறான Serum Creatinine பரிசோதனை முடிவினால் ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அவ் வைத்தியசாலையின் PRO மற்றும் அவர் முன்னிலையில் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தரும் (MLT) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் இவ்வாறான தவறு அங்கு இடம்பெறுவது இது 2ஆம் தடவை எனவும் முதல் தடவை ஏற்பட்ட தவறின்போது வைத்திய நிபுணர் அவர்களால் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தருக்கு பரிசோதனை செய்யும் இயந்திரம் சரியான பிரமாணத்திற்கமைய( Calibration) ஒழுங்கு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டும் அது இன்றுவரை சரிப்படுத்தப்படவில்லை என எச்சரிக்கப்பட்டனர்.

ஓர் முதலுதவி போதனாசிரியர் என்றவகையில் எனக்கிருக்கும் மருத்துவ அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்டையில் வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவு தவறானது என என்னால் ஊகித்துக்கொள்ள முடிந்தபோதும் 12.09.2023-14.09.2023 வரை( சரியான பரிசோதனை முடிவு வரும்வரை) மனதளவில் தளர்ந்த நிலையினையே உணரமுடிந்தது.

மருத்துவ அறிவுள்ள எனக்கே இவ்வாறான ஒரு நிலை என்றால் சாதாரணமாக மருத்துவ அறிவில்லாத ஒருவருக்கு இவ் நிலை ஏற்பட்டிருந்தால் அவரது மனோவியல் நிலை என்ன? இவ்வாறான ஒருவர் மீண்டும் வைத்திய நிபுணரிடம் பரிசோதனை முடிவினை காண்பிக்கும்வரை அவர் எவ்வாறான ஒரு மனவுளைச்சலுக்குள்ளாகி இருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்...

குறிப்பு : அவ் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண்பிள்ளைகளின் வாழ்வாதார நிலையின் நல்லெண்ணம் கருதி வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை...

** Via What's Up message

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சில மருத்துவமனைகளின் பணியாளர்கள் எழுந்தமானமாக பலரின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றார்கள்........!   

நன்றி நாதம்ஸ்.......! 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் Asiri, Durdans கொழும்பு வைத்தியசாலைகளின் ஆய்வுகூடங்களில் தான் நம்பகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

டுபாயில் என் நண்பர் ஒருவருக்கு HIV Positive என தவறுதலாக பரிசோதனை முடிவு கிடைத்து, மீண்டும் பரிசோதனை செய்து அது இல்லை என்று உறுதியானது. இடைப்பட்ட ஒரு வாரத்தில் அவன் பட்ட மனவுளைச்சல் கொடுமையானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

டுபாயில் என் நண்பர் ஒருவருக்கு HIV Positive என தவறுதலாக பரிசோதனை முடிவு கிடைத்து, மீண்டும் பரிசோதனை செய்து அது இல்லை என்று உறுதியானது. இடைப்பட்ட ஒரு வாரத்தில் அவன் பட்ட மனவுளைச்சல் கொடுமையானது.

ஒரு 50 வயது பெண்ணுக்கு வயிற்றில் புற்று, ஆப்பிரேசன் செய்ய நாள் குறித்து போய், இன்னுமோர் ஸகான் பண்ண, பிள்ளை துடிக்குது.

அதாவது, வயித்தில் வளர்ந்த பிள்ளையை கட்டி என்று சொல்லி விட்டிருக்கிறார்கள்.

தியேட்டரால வெளீல வந்த அந்தப் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியா, நிம்மதியா என்று புரியாத கொடுமை!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

குறிப்பு : அவ் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண்பிள்ளைகளின் வாழ்வாதார நிலையின் நல்லெண்ணம் கருதி வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை...

மூன்று நாட்களுக்கு முன் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.

பதிவுக்கு நன்றி நாதம்.

சோதனையின் கணிப்புகளும் போட்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் விளங்காவிட்டாலும் @Justin போன்றவர்களுக்கு விளங்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆய்வு கூடத் தவறுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை முறைகள் (checks) புளக்கத்தில்  இருக்கின்றன. அதில் ஒன்று தான் வைத்தியர் இரத்த சோதனை அறிக்கையோடு குணங்குறிகள் பொருந்தவில்லையென மீளப் பரிசோதிக்கக் கோரியமை. இந்த வழியில், பெரும்பாலான தொழில் நுட்ப ஆய்வுகூடத் தவறுகளால் நோயாளிக்கு ஆபத்து ஏற்படாது, ஆனால் பண இழப்பை நோயாளி ஆய்வு கூடத்திடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், நான் முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, நவீன உலகில், எங்கள் ஒவ்வொருவருக்கும்  எங்கள் உடலின் இயக்கம், பொதுவான நோய்கள், பொதுவான மருந்துகள் பற்றிய ஆரம்ப நிலைப் புரிதல் இருக்க வேண்டும் - அது எங்கள் உடல் ஆரோக்கியம் மீதான எங்களுடைய பொறுப்பு. இது இருந்தால் எதையும் தேடியறியும் ஆர்வம் வரும். அப்படி அறிந்து கொண்டால், எங்கள் இரத்த பரிசோதனை அறிக்கையில் என்ன இருக்கிறது அதன் அர்த்தம் என்ன போன்ற ஒரு புரிதலும் வரும்.

மிகுதியைத் தெளிவாக்க, சந்தேகங்கள் இருக்கும் போதெல்லாம் இரண்டாம் அபிப்பிராயம் (second opinion) பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மருத்துவர் புற்று நோய் என்றால், தலையாட்டி விட்டுப் போகாமல், இன்னொரு மருத்துவரிடம் இரண்டாம் ஆலோசனை பெறுவது அனேக நாடுகளில் ஊக்குவிக்கப் படுகிறது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.