Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர்  பாடலாசிரியராக அறிமுகமாகின்றார்.

 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார்.

அத்துடன்”பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட  பூவன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகச்  சுட்டிக்காட்டிய சந்தோஷ் நாராயணன் “ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும், அதற்கேற்றது போல யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1351502

  • கருத்துக்கள உறவுகள்

பூவன் மதீசனுக்கு வாழ்த்துக்கள்........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

Poovan Matheesan 

 
 
அக்கறையுள்ள நண்பர்கள் முடிந்த வரை தொடர்ந்து வாசிக்கவும்.
சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் எழுதிய பூவன் மதீசன்.
ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்றது போல யாழ்ப்பாணத்தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நன்றி குவியம் இணையம்
மேற்குறித்த செய்தியை சந்தோஷ் நாராயணன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்ததன் பின்னர் நிறைய நண்பர்கள் நான் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டேன் என எண்ணிப் பெருமை அடைவதோடு மட்டுமல்லாமல் என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அனைவருக்கும் எனது பெரு நன்றிகள். நண்பர்கள் உறவினர்கள் என்று என் மீது அக்கறை உள்ள பலர் இதுகுறித்து பெருமை அடைந்து இருப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. காரணம் தென்னிந்திய சினிமாவில் கால் பதித்தால் தான் அது ஒரு உச்சகட்ட சாதனை என்னும் அளவுக்கு நமது எண்ணங்கள் சிந்தனைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பூவன் மதிசனும் விதிவிலக்கு அல்ல.
தென்னிந்திய சினிமாவிற்குள் நுழைவது என்பதன் மூலமாக எனக்கும் சில அனுகூலங்கள் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இருப்பினும் எனது சிறு வயது முதலே நான் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழையும் ஆசை உள்ள ஒருவன் கிடையாது. ஒருபோதும் நான் தென்னிந்திய சினிமாவின் கதவுகளை தட்ட முனைந்ததில்லை. என்னுடைய நிலைப்பாட்டுக்கு என்னுடைய படைப்புகள் அனைத்துமே சாட்சியாக அமையும். 2009 க்கு முன்னர் நமது மக்கள் தென்னிந்திய சினிமா பாடல்களையும் கேட்டு வந்தனர். அதற்குப் பின்னர் எமது மக்கள் பெருவாரியாக தென்னிந்திய சினிமா பாடல்களை மட்டுமே கேட்டு வருகின்றனர். (இதில் நான் எந்த ஒரு பக்கச் சார்பு அரசியலும் பேசவில்லை வரலாற்றை மட்டுமே பேசுகிறேன்)
நான் மேலே சொன்ன அனைத்துமே கொள்கை சார்ந்த விடயங்கள். கொள்கைகளுக்கு மட்டுமே இந்த இனம், மதம், மொழி,அரசியலெல்லாம் தெரியும். ஆனால் இசை என்னும் பெரும் கலை வடிவம் இவை அனைத்தையும் தாண்டியது. நான் ஒரு இசையமைப்பாளராக தென்னிந்தியா சினிமாவில் வராத மக்கள் கேட்டிராத வித்தியாசமான இசை வடிவங்களை ஆராய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவன்.அந்த மாற்று இசை தொடர்பான தேடல்தான் என்னை ஒரு சுதந்திர இசையமைப்பாளராக மாற்றம் காண வைத்தது. சந்தோஷ் நாராயணனை பொறுத்தவரையில் தனது ஆரம்ப காலம் முதலே சினிமா இசையுடன் சுதந்திர இசைகளை கோர்க்கும் அற்புதமான ஒரு கலையினை நன்கு அறிந்திருந்தார். இதற்கு ஒரு சாலச் சிறந்த உதாரணம் என்ஜாய் என் சாமி பாடல்.
சந்தோஷ் நாராயணன் அவர்கள் ஒரு இசையமைப்பாளர் என்பதை தாண்டி ஒரு பாடகராக எனக்கு மிகவும் பிடித்தவர். என்னுடைய என்ர சனமே, மங்கினி மன்னன், கோமாளி போன்ற பல பாடல்களை எழுதும் போதோ அல்லது மெட்டமைக்கும் போதோ இதனை இவர் பாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்திருக்கிறேன். உண்மையை சொல்லப் போனால் அவருடைய whatsapp இலக்கத்தினை கண்டுபிடித்து அந்த பாடல்களை அவருக்கு அனுப்பியும் இருக்கின்றேன்.
கொவிட் நேரத்தில் ஒரு குழந்தைகளுக்கான பாடல் போட்டிக்கு நடுவராக இருக்குமாறு அருண் என்பவர் அழைத்திருந்தார். அதற்கு பின்னர் அவருக்கு எனக்கும் எந்த ஒரு நேரடியான தொடர்பும் இருந்ததில்லை. ஏன் அவரை நான் நேரில் கூட பார்த்ததாக ஞாபகம் இல்லை. இந்த வருடம் மே மாதத்தின் நடுப்பகுதியில் எனக்கு அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. சந்தோஷ் நாராயணர்கள் யாழ்ப்பாண தமிழில் பாடல் வரிகள் கேட்கிறார் உங்கள் பாடல்களை அனுப்பி இருந்தோம் அவருக்கு பிடித்திருந்தது எழுதி தருவீர்களா? என்று கேட்டார். அவர்களுக்கு மிக அவசரமாக தேவைப்பட்ட நிலையில் ஒரு 30 நிமிடத்தில் வழங்கப்பட்ட டியூனுக்கு நான் எழுதி அனுப்பிவிட்டேன்.அருண் அண்ணா மற்றும் அவருடைய நண்பர் ஜேசன் இருவருக்கும் என்னுடைய பெரு நன்றிகள். இதற்குக் காரணமான அனைவருக்கும் என்னுடைய பெரு நன்றிகள்
இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டி உள்ளது. "புத்திகெட்ட மனிதர் எல்லாம்" படத்தை தொடர்ந்து நமது அடுத்த திரைப்படம் "டக் டிக் டோஸ் " இல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றேன். காரணம் நான் வென்று விட்டேன் என்பதை விட நாம் வென்றுவிட்டோம் என்பதில் தான் எனக்கு அதிக போதை உள்ளது. இப்படிக்கு சுதந்திரப் பாட்டுக்காரன் பூவன் மதீசன்
May be an image of 4 people, beard, people smiling and text
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோஷ் நாராயணன் ஈழத்து மருமகனாக்கும்......:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்.

இப்போது தான் தெரியும் இவர் ஈழத்துப் பெண்ணை திருமணம் செய்திருப்பது.

ஈழத்திலிருந்து ஒரு பாடலாசிரியரை உருவாக்குவது சந்தோசமாக உள்ளது.

பாடலாசிரியர் மதீசன் பல பாடல்கள் எழுதி மேன்மேலும் புகழடைய வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.