Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயநினைவுடன் நோயாளி ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளையில் சத்திரசிகிச்சை - அனுராதபுரம் வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளைகட்டியை பிரித்தெடுக்கும் ஒருவகை சத்திரசிகிச்சையை 'awake craniotomy’ அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நோயாளி சுயநினைவுடன் உள்ளவேளை மேற்கொள்ளப்படும்  என்ற சத்திரசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும்.

குறிப்பிட்ட மருத்துவ குழுவினர் இவ்வாறான மூன்றாவது சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர், முதலாவது சத்திரசிகிச்சையும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெற்றது.

நோயாளியின் மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை பிரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் குறைந்தபட்ச மயக்கநிலையிலேயே காணப்பட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

36 வயது சிற்பக்கலைஞரான நோயாளி சத்திரசிகிச்சை இடம்பெற்றவேளை ஓவியம் வரைந்துள்ளார்,

பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது மூளையின் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நொச்சியாகமவை சேர்ந்த இந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர், எந்த வித பாதிப்பும் இல்லாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சுயநினைவுடன் நோயாளி ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளையில் சத்திரசிகிச்சை - அனுராதபுரம் வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

உடலுக்கெல்லாம் உணர்வை வழங்கும் மூளையில் வலியை உணரும் நரம்புகள் இல்லை, எனவே, வெளிநாடுகளில் இது போன்ற மூளை சத்திர சிகிச்சைகளை நோயாளி விழித்திருக்கத் தக்கதாக, தோலுக்கு மட்டும் local anesthesia கொடுத்த நிலையில் செய்திருக்கிறார்கள். இலங்கையிலும் இது கண்டி, பேராதனையில் ஏற்கனவே நடந்திருக்கக் கூடுமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

மூளையில் வலியை உணரும் நரம்புகள் இல்லை

அட பாவியளா எல்லாருக்கு இப்படித்தானா? அப்ப என்னை மட்டும் ஏன் “மண்டை விறைச்ச கேஸ்” என்கிறார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

உடலுக்கெல்லாம் உணர்வை வழங்கும் மூளையில் வலியை உணரும் நரம்புகள் இல்லை

அண்ணை, அப்போ தலையிடி எப்படி உணரப்படுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அட பாவியளா எல்லாருக்கு இப்படித்தானா? அப்ப என்னை மட்டும் ஏன் “மண்டை விறைச்ச கேஸ்” என்கிறார்கள்🤣.

அது வேற விறைப்பு சகோ.

எனக்கும் வீட்டில் காலை எழுந்தவுடன் சகல கசாயமும் தருவார்கள் கொழுப்பை குறைக்க என்று. நான் சொல்வது இதை உங்களால் குறைக்க முடியாது 😂 ஏனெனில் அதன் பெயர் கொழுப்பல்ல திமிர் அல்லது தடிப்பு என்று 🤪

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அண்ணை, அப்போ தலையிடி எப்படி உணரப்படுகிறது?

தலையில், மண்டையோட்டிற்கு வெளியே இருக்கும் தசைகள், நரம்புகள், இரத்தக் குழாய்களில் இருந்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.