Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் உள்ளடக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, இந்தப் பிரதேசத்தில் சரியான கல்வியின்மையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த பாலியல் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் நம்புகின்றனர்.

புதிய பாலினக் கல்வி பாடத்திட்டத்தின் அறிமுகம் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் ஒரு கூட்டு அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சிறுவர் பாதுகாப்புக்கு இலங்கை தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த முயற்சிகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தமான பிரச்சினையை கையாள்வதில் குறிப்பிடத்தக்க முன்னோக்கினைக் குறிக்கின்றன.

https://thinakkural.lk/article/281546

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, இந்தப் பிரதேசத்தில் சரியான கல்வியின்மையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த பாலியல் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் நம்புகின்றனர்.

புதிய பாலினக் கல்வி பாடத்திட்டத்தின் அறிமுகம் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் ஒரு கூட்டு அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சிறுவர் பாதுகாப்புக்கு இலங்கை தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த முயற்சிகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தமான பிரச்சினையை கையாள்வதில் குறிப்பிடத்தக்க முன்னோக்கினைக் குறிக்கின்றன.

https://thinakkural.lk/article/281546

நல்லது தான்  நாங்கள் படித்த காலத்தில்  எங்களுக்கும் படிப்பித்திருக்கலாம்.  எதுவும் தெரியாது ரொம்ப கஸ்ரப்பட்டு போனோம்  🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

நல்லது தான்  நாங்கள் படித்த காலத்தில்  எங்களுக்கும் படிப்பித்திருக்கலாம்.  எதுவும் தெரியாது ரொம்ப கஸ்ரப்பட்டு போனோம்  🤣😂

புரிந்துகொள்லும் வயதில் தலை நரைத்துவிட்டது என்கிறீர்கள்? 

அனேகரின் நிலை அப்படித்தான் என நினைக்கிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

நல்லது தான்  நாங்கள் படித்த காலத்தில்  எங்களுக்கும் படிப்பித்திருக்கலாம்.  எதுவும் தெரியாது ரொம்ப கஸ்ரப்பட்டு போனோம்  🤣😂

ரொம்பவும் கஷடப்பட்டுவிடதீர்கள் போல. அவ்வளவு பழைய காலத்து சொந்தங்களா நீங்கள்? பேரப்பிள்ளைகள் எல்லாம் உண்டோ?😜

  • கருத்துக்கள உறவுகள்

”பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி போதுமானதாக இல்லை”

இலங்கையில் பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி போதுமானதாக இல்லை என மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜகத் குமார் சுமித்ரஆரச்சி முன்வைத்த வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய நாட்டில் 2287 சிறுவர் தாய்மார்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் தொடர்பான அறிவு வயதிற்கு இணங்க வழங்கப்படாமையினால் சிறுவர்களின் பாலியல் கல்வி குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், வயது வித்தியாசத்திற்கு இணங்க படிப்படியாக தமது உடலின் தன்மை தொடர்பாக சிறுவர்களுக்குக் கல்வி வழங்கப்படுவதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

16 வயதிற்கு உட்பட்ட பிள்ளையுடன் பழகுவது தவறு என்பதுடன் சிறுவர்களின் பாதுகாப்பைத் திட்டமிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிறுமியொருவரை கர்ப்பமடையச் செய்தால், அது குறித்து அரசாங்கம் அவசியமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மட்டப் பிள்ளைகள் சட்ட உதவிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெளிவுபடுத்தினார்.

 

http://www.samakalam.com/பிள்ளைகளுக்கான-பாலியல்/

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கல்வி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் ஜீவன் வலியுறுத்தல்

Published By: VISHNU   04 DEC, 2023 | 06:54 PM

image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்த வேண்டும் அப்போது தான் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு  மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,தரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சபையில் குறிப்பிடப்பட்டது.ஆனால் இந்த பிரச்சினையில் உள்ள உண்மை அம்பலப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

பாலியல் கல்வி மற்றும் உறவு நிலைகளின் முக்கியத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய நிலையில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவு சமூக மட்டத்தில் மிகவும் குறைவான மட்டத்தில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆகவே பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்தாமல் இருந்தால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. களனி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுக்கமைய, 62 சதவீதமான பெண்கள் தமது நெருக்கமானவர்களினால் தாக்கப்படுகிறார்கள், 50 சதவீதமான பெண்கள் தமது கணவன்மார்களினால் கொலை செய்யப்படுகிறார்கள்., 82 சதவீதமான பெண்கள் தமது வீட்டில் இடம்பெறும் முரண்பாடுகளினால் கொலை செய்யப்படுகிறார்கள்.ஆகவே இவ்வாறான நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள பாடசாலைகளில் 23 சதவீதமான பாடசாலைகளில் மாத்திரம் ' சிறுவர் பாதுகாப்பு மையங்கள்' உள்ளன.ஆகவே பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தரப்படுத்தல்களை முன்வைப்பது முன்னேற்றகரமானதல்ல,நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/170967

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.