Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகா வரவின் நோக்கம், பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகா வரவின் நோக்கம், பின்னணி

துவாரகா குறித்து தமக்கு தெரியாது, அவர் எங்களுடன் பேசியதே இல்லை என்று, பிரபாகரன் அண்ணன், மகன், டென்மார்க்கில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

அநேகமான, தமிழக தமிழ் தேசிய வட்டாரங்கள் கூட இதனை போலி என்று நிராகரிக்கின்றன.

இது உண்மை என்று சொல்பவர்களின் பக்கம் பார்த்தால், அவர்கள் அனைவருமே, இந்திய ரோ உடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டவர்களாகவே தெரிகின்றனர். 

சிவாஜிலிங்கம் முதல், காசி ஆனந்தன் என்று நீள்கிறது பட்டியல்.

சரி... நோக்கம் எதுவாக இருக்கலாம்?

1980 களின் ஆரம்பத்தில், இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆதரித்து வளர்த்தது. அப்போது அதன் எதிரி அமெரிக்காவாக இருந்தது. அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ள, புலிகளும் இந்திய கட்டுப்பாட்டுக்கு வெளியே வர அதனை அடக்கி ஒடுக்க, இந்திய படை உள்ளே வந்தது. பின்னர் 2009ல் புலிகளை ஒழிக்க, சிங்களத்துடன் கூட்டு சேர்ந்தது இந்தியா.

இன்று நிலை, தலைவலி போய், திருகுவலி வந்த கதை.

சீனா வந்து, தென்பகுதியில் கால் நீட்டி, வடக்கே பூர தலைப்படுகிறது. அதனால் திணறுகிறது இந்தியா.

இம்முறை, சிங்களம், சீனாவுடன் சேர்ந்து கபட வேலை செய்கிறது.

இலங்கை, இந்திய, சீன பூலோக அரசியலுக்குள் சிக்கி கொண்டுள்ளது என்று கடந்தவாரம், அந்த நாட்டு ஜனாதிபதி இந்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

ஆனால், இந்த போட்டியால் திணறுகிறது இந்தியா. காரணம் இலங்கை முழுவதுமே, ஒரு விடயத்தில் இன, மத பேதம் இன்றி ஒரே கருத்தினை கொண்டிருக்கிறார்கள் என்றால் அது, இந்தியாவை எக்காரணம் கொண்டும் நம்ப முடியாது என்பதனை.

இந்த நிலைமையில், இந்தியாவுக்கு, இலங்கைத்தமிழர் நம்பக்கூடிய ஒரு துருப்பு சீட்டு தேவை. அதுவே தேசிய தலைவரின் குடும்பம்.

அவர்களது கண்டுபிடிப்பே துவாரகா.

இதன் மூலம், தமிழர் நிலைமையினை 1980 காலப்பகுதிக்கு கொண்டுபோய், துவாரகா தலைமையில் தமது சொல் கேட்கும் 'பையன்களுக்கு' டிரைனிங் கொடுக்கிறோம், மீண்டும் ஈழ போராட்டம் தொடங்குகிறது என்று ஒரு திட்டம் இருக்குமோ தெரியாது.

ஆனால், இந்தியாவின் கபடத்துக்கு ஆட, தமிழர்கள் இனியும் தயாரில்லை. பிச்சை வேண்டாம் நாயை பிடி கதைதான்.

இதிலும் பார்க்க, சீனர்களுடன் பேசலாம். சிங்களத்துடன் ஒரு கவுரவமான தீர்வினை பெற்று தந்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி அமைதியாக வாழலாம்.

ஆனால் அங்கே ஒரு மூன்றாவது சக்தி, மேற்கு உள்ளது. அதன் நோக்கம் வேறு. அது எப்படிப்பட்ட அணுகுமுறை எடுக்கும் என்பது கேள்விக்குரியது. ஏனெனில் அது கடந்த 2022ம் ஆண்டு தனது பலத்தினை நிரூபித்துள்ளது.

அதன் காரணமாக இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் பதவிக்கு வந்த கோத்தா வெளியேறி, இந்தியா விரும்பாத ரணில் பதவிக்கு வந்தார்.

ஆக, ரணில் சொன்னது போல, இல்லாமல், உண்மை நிலையானது, நாடானது, இரண்டல்ல, மூன்று பலம் மிக்க வல்லரசுகளின் பிடியில் சிக்கி விட்டது. மூன்றாவது, மேற்கு - ஒன்றல்ல, பல பலமிக்க நாடுகளின் கூட்டு என்றால் மிகையில்லை. 

*** உடான்ஸ் சுவாமிகள் ஆசியுடன் சுஜ ஆக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நாதம்ஸ்......!  

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நாதம்ஸ்......!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

*** உடான்ஸ் சுவாமிகள் ஆசியுடன் சுஜ ஆக்கம்.

🤣 சுவாமிகள் கடாட்சம் உண்டாகட்டும்🤣.

நல்ல பதிவு நாதம்.

பலரும் போலி-க்காவின் தோற்றம், பேசிய விதம் கொண்டு அவர் போலி என கூறியது மிக சரியே.

ஆனால் இவர் போலி அதுவும் இந்திய தயாரிப்பு என்பதை அப்பட்டமாக காட்டி நிற்பது - உரையில் சொல்லப்படாத விடயங்களே.

இந்த நாடகமும், உரையும் துவாரகா இருக்கிறார் என்பதை மட்டும் வெளிகொணரவே நடத்தப்பட்டுள்ளது.

மறந்தும் எமது அபிலாசைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி எதுவும் கூறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து உள்ளார்கள்.

அதாவது துவராக வருவது போலவும் இருக்க வேண்டும், ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காகியது போல் இதனால் ஈழ தமிழினம் தன்னெழுச்சி கொண்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வேலையை பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. இலங்கையை சுரண்டோ சுரண்டு என்று சுரண்டி பிச்சைக்கார நாடாக தங்களுக்கு கீழ் கட்டுப்பாட்டில் வைப்பதே இந்தியாவின் கொள்கை. 

இந்தியா சிதறுண்டு பிரிவினை ஏற்படும்போது இலங்கைக்கு விமோசனம் கிடைக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு 13ஐ திணிக்க ஒராள் தேவைப்பட்டிருக்கு.

இந்தாள் இனி அடிக்கடி வந்தும் போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.