Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் வேனில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு குழு அட்டகாசம்.. பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04 DEC, 2023 | 08:25 PM
image
 

யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர்.

இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்ல ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்ளது.

பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வாள்வெட்டு குழுவை துரத்தி சென்ற போதும் ஹயஸ் வானில் குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.

ஹயஸ் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/170978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தெல்லிப்பழையில் வாள்வெட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் வானுடன் கைது!

Published By: DIGITAL DESK 3   06 DEC, 2023 | 09:38 AM

image
 

தெல்லிப்பழையில் திங்கட்கிழமை (04) இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வான் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நடாத்தப்பட்ட நிலையில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் குறித்த  வான்  தப்பிச் சென்றது.

இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதோடு யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் முல்லைத்தீவு பகுதியில் வைத்து குறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/171066

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

06 DEC, 2023 | 12:02 PM
image
 

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, திங்கட்கிழமை (05) இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து, ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை - யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில் , வாகனத்தை விட்டு இறங்கி வன்முறையில் ஈடுபட்டு, வீதியில் சென்றவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். 

அது தொடர்பில் மல்லாகம் சந்தியில் கடமையில் நின்ற பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது , வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர். 

தப்பியோடிய வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், வன்முறை கும்பல் தப்பியோடி இருந்தது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேகநபர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (6) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து, வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை விடுவித்து இருந்தது. 

அதேவேளை, தெல்லிப்பழையில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டு இருந்தனர். 

அத்துடன் , தெல்லிப்பழை முதல் சுன்னாகம் வரையிலான வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம், வன்முறை கும்பல் பயணித்த வாகனத்தை அடையாளம் கண்டு இருந்தனர். 

அதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வாகனத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் , பதுங்கி இருந்தப்பதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை மீட்டதுடன், அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில். வன்முறையில் ஈடுபட்டு பதுங்கியிருந்த இருவர் கைது ; வாகனமும் மீட்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள்.. ஆனால் குற்றவாளிகள் மீது பட்டிருக்காது.

ஏனெனில்.. குற்றவாளி.. பொலிஸ் எல்லாமே கூட்டுக் களவாணி தான். சுட்டால் தானே சன்னக் கணக்குக் காட்டி பதவி உயர்வுக்கு ஏதாவது செய்யலாம். முயன்று தோற்றது என்று காட்டுவமில்ல.

வடக்குக் கிழக்கில்.. சிங்கள அரச படைகளுக்கும் புலனாய்க்குழுக்களுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் தப்பி.. யாருக்கும் இயங்க முடியாது. ஏனெனில்.. அவைக்கு துப்புச் சொல்ல.. ஆள் எல்லா இடத்திலும் கூலி வாங்கிட்டு ரெடியா இருக்குது. அப்படி இருக்க.. இவை எப்படி நிகழுது.. எப்படி தப்பிக்க முடியும..??!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். இடம்பெறும் வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்கள்!

adminDecember 7, 2023
Vall-veddu.jpg?fit=900%2C500&ssl=1

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தெல்லிப்பழையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய காவற்துறைப் பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளார்கள். அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் காவற்துறையினரால்  தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

சில குழுவினரிடையே இருந்து வரும் பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக தெல்லிப்பளை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது குற்ற செயல்கள் இடம் பெற்றால் அவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக்கூடியதாகவுள்ளது.

அதே போல யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கப்போவதில்லை.

அவ்வாறு யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது காவற்துறையினரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்

பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் காவற்துறையினர்  தொடர்ச்சியாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்

 

https://globaltamilnews.net/2023/198277/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231207-WA0004.jpg?resize=750,375&s

தெல்லிப்பளைத் தாக்குதலுக்கான காரணம் வெளியானது!

தெல்லிப்பளைத் தாக்குதலுக்கான காரணம் வெளியானது!

தெல்லிப்பளைத் தாக்குதலுக்கான காரணம் வெளியானது!

 
29
SHARES
973
VIEWS
 

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே  தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் உள்ள  இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்  குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாகவே கடந்த திங்கட் கிழமை  தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்ற நபர் மீது மற்றைய வன்முறைக்  கும்பலைச் சேர்ந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் நேற்றைய தினம் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மூவரை கைது செய்ததுடன் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் ரக வாகனம், 2 வாள்கள் என்பனவற்றையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1362371

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.