Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sanakkiyan.webp?resize=750,375&ssl=1

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர்.

எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான  மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்படுகின்றது. இத்தேவையை பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு  மூலம் செயற்படுத்த  முடிந்த போதிலும் இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடைவதைக்  காணக்கூடியதாக உள்ளது.

எனவே திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.

பாடகி  யொஹாணிக்கு கொழும்பில் வீடொன்றினை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு 2  தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த  71 வயதான முல்லைத்தீவினைச் சேர்ந்த அகிலத்திருநாயகிக்குச்  செய்யப்போவது என்ன?

அதுமட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் Under 19 கிரிக்கட் குழுவில் தெரிவாகியுள்ளார். இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன். இவர் கொழும்பை சேர்ந்தவர் ஆகினும் தமிழர் என்னும் அடிப்படையில் புறக்கணிக்காது அவருக்கான இடம் வழங்கப்பட வேண்டும். வட கிழக்கை சேர்ந்த பல திறமையானவர்கள் காலம் காலமாக ஒதுக்கப்பட்டு வருகின்றார்கள் இனிவரும் காலங்களில் அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். மற்றும் செல்வசேகரன் ரிஷுதன் எனும் இளைஞன் 6 விதமான பந்து வீசும் திறமையுடையவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவரை “முத்தையா” எனவும் அழைக்கின்றனர். மேலும் இவர் 4 ஓவர் இல் எந்தவித ஓட்டங்களும் எடுக்கப்படாமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை ஒரு பெரிய சாதனையாகும். இவர்களைப் போன்ற எமது நாட்டின் பொக்கிஷங்களை உள்வாங்கி இவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1362109

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு வயது போயிட்டுதாம். அத்துடன் அவா கொழும்பில் வந்து சீவிக்க விருப்பம் இல்லை எண்டு சொன்னன்வாவாம். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் "செவிடன் காதில் ஊதிய சங்கு" தான் இருந்தாலும் ஊதிக்கொண்டுதான் இருக்க வேண்டும், அப்போதுதான் பத்தில் ஒன்டாவது தேறும்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

அம்மாவுக்கு வயது போயிட்டுதாம். அத்துடன் அவா கொழும்பில் வந்து சீவிக்க விருப்பம் இல்லை எண்டு சொன்னன்வாவாம். 

அப்போ முல்லைதீவில் ஒரு வீட்டை கட்டி கொடுக்கிறது. மனமுண்டால் இடமுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/12/2023 at 08:52, தமிழ் சிறி said:

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

இனத்துவேஷம்  என்பது அவர்கள் நாடி நரம்பில் ஊறியது. கிட்டத்தட்ட யூதர்கள் மாதிரி....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

அப்போ முல்லைதீவில் ஒரு வீட்டை கட்டி கொடுக்கிறது. மனமுண்டால் இடமுண்டு.

அவவுக்கு முல்லைத்தீவில் வீடு இருக்குதாம். இலங்கை அரசு ஒரு போதும் இனவாதத்துடன் சிந்திப்பதில்லை. எப்போதும், எல்லோரையும் சமமாகவே நடத்துகின்றது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

அவவுக்கு முல்லைத்தீவில் வீடு இருக்குதாம். இலங்கை அரசு ஒரு போதும் இனவாதத்துடன் சிந்திப்பதில்லை. எப்போதும், எல்லோரையும் சமமாகவே நடத்துகின்றது. 😜

என்று தான் சரத் வீரசேகரவும் சொல்கிறார்.😄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

என்று தான் சரத் வீரசேகரவும் சொல்கிறார்.😄

வீரசேகரா மட்டுமில்லை எல்லா சிங்களங்களும் அப்படிதான் சொல்லுது ஒரு சிலரை தவிர.  😛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.