Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!

spacer.png


வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்தது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


http://www.samakalam.com/ஜனாதிபதிக்கு-எதிராக-போரா/

 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகம் ; சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டதால் பதற்றம் !

Published By: VISHNU  05 JAN, 2024 | 01:01 PM

image

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். 

இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர். 

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்தது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240105_104500.jpg

IMG_20240105_105022.jpg

IMG_20240105_105046.jpg

IMG_20240105_110317.jpg

IMG_20240105_110112.jpg

IMG_20240105_110404_1.jpg

IMG_20240105_110340_2.jpg

IMG_20240105_110453.jpg

IMG_20240105_110440.jpg

Videoframe_20240105_121355_com.huawei.hi

IMG_20240105_110645_5.jpg

Videoframe_20240105_121456_com.huawei.hi

Videoframe_20240105_121439_com.huawei.hi

https://www.virakesari.lk/article/173195

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக ரீதியாக போராட விடாமல் தடுத்து விட்டு ஜனநாயக நாடு என பீத்தக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

ஜனநாயக ரீதியாக போராட விடாமல் தடுத்து விட்டு ஜனநாயக நாடு என பீத்தக்கூடாது.

சீச்சீ நீங்கள்அப்படிக் கூறக்கூடாது. சிறிலங்காத் தமிழ் ஜனநாயகக் காவலர்களுக்குக் கோபம் வரப்போகிறது.

12 minutes ago, ஏராளன் said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகம் ; சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டதால் பதற்றம் !


சிங்களத்துக்கு எதிராகக் காத்திரமாக நின்று உண்மையாகப் போராடும் இவர்களை ஒருவித பதற்றத்தோடு பார்க்கிறது. சிங்களம். இவர்களையோ, இவர்களது கோரிக்கையையோ தொடர்ந்து தட்டிக்கழிக்க முடியாது. பதில் கொடுக்கவேண்டும்.அந்த பதிலே சிங்களத்துக்கு ஆப்பாகவும் மாறலாம். அதனால் காலத்தைக்கடத்துகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3   06 JAN, 2024 | 11:09 AM

image

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து, வடகிழக்கு வலிந்துஅகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

https://www.virakesari.lk/article/173252

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களுக்காக போராடுபவர்களின் போராட்டம் உண்மையில் ஒரு உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டம், 87 காலப்பகுதியில் பெரும்பான்மை இனமக்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டனர், இது ஒரு சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிரான போராட்டம்,

அனைத்து மக்களுக்கும் சட்டம் மூலம் உரிய பாதுகாப்பினை உறுதி செய்யும் போராட்டம் என்பதனை சகல மக்களும் உணர்ந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும்.

தமிழ் மக்களில் கூட இந்த போராட்டத்தினை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அதற்காக அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களின் செயற்பாட்டை உணர்ச்சிவசப்படுபவர்கள் என கொச்சைபடுத்துபவர்களும் நம்மில் இருகின்றார்கள்.

அவர்களின் போராட்டம் ஒரு சுயநல போராட்டம் அல்ல மறைமுகமாக ஒட்டு மொத்த இனங்களின் சாமானியனின் அடிப்படை சட்ட உரிமைக்கான போராட்டம்.

இந்த போராட்டத்தினை கொச்சைபடுத்துபவர்கள் தமக்கு இவ்வாறு இழப்புகள் ஏற்படும்போதுதான் அந்த வலியினை உணருவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.