Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சூத்தியதாரியைப் பிடிப்பதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது.

 

யாழ் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்தன . அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது.மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தின் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://seithy.com/breifNews.php?newsID=312274&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியத்திலிருந்து 17 இலட்சம் ரூபா ஒப்பந்தம் : யாழில் கடைகள், வாகனங்கள் தீக்கிரை : சூத்திரதாரிகள் மூவர் கைது

20 JAN, 2024 | 01:36 PM
image

யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில்,  நேற்று வெள்ளிக்கிழமை (19) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டதுடன்  2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. 

இவை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது  பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியத்தில் உள்ள நபர் ஒருவரின்  உத்தரவுக்கு அமையவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் . 

கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தில் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணம் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது . 

இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174387

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் அங்கு பணம் எங்கிருந்து வருகுதென்று. @MEERA சொன்னதுபோல பணம் கொடுப்பவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும் செய்யவும் வேண்டும். இதுதானின்குள்ள நிலைமை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

பாருங்கள் அங்கு பணம் எங்கிருந்து வருகுதென்று. @MEERA சொன்னதுபோல பணம் கொடுப்பவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும் செய்யவும் வேண்டும். இதுதானின்குள்ள நிலைமை. 

என்ன சொல்லுகிறீர்கள?? அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா?? 

வெட்டுடா.  கொத்தாடா   கொல்லடா     ...      .என்று சொல்வதை எல்லாம்  முன் பின் யோசனையின்றி  செய்யலாமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

என்ன சொல்லுகிறீர்கள?? அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா?? 

வெட்டுடா.  கொத்தாடா   கொல்லடா     ...      .என்று சொல்வதை எல்லாம்  முன் பின் யோசனையின்றி  செய்யலாமா?? 

இல்லை . இப்படித்தான் இங்குநடக்குது. பாருங்கள் இவ்வளவு பணம் கொடுத்து என்ன அடாவடி எல்லாம் பண்ணுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

பாருங்கள் அங்கு பணம் எங்கிருந்து வருகுதென்று. @MEERA சொன்னதுபோல பணம் கொடுப்பவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும் செய்யவும் வேண்டும். இதுதானின்குள்ள நிலைமை. 

இன்று ரணில் செய்வதை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லை.

8 hours ago, Kandiah57 said:

என்ன சொல்லுகிறீர்கள?? அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா?? 

வெட்டுடா.  கொத்தாடா   கொல்லடா     ...      .என்று சொல்வதை எல்லாம்  முன் பின் யோசனையின்றி  செய்யலாமா?? 

நாட்டின் தலைவரே IMF இன் சொல் கேட்டு ஆடும் நிலையில் மக்கள் எம்மாத்திரம்?

ஆனால் நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமானவர்களை நீதிமன்றம் அறிவித்தும் ஒன்றும் செய்யாது உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூல் நிலையம்  40 வருடங்களுக்கு முன் எரித்தமைக்கு  புலம்பெயர் தமிழர்கள் காரணம் என சில சிங்கள, தமிழ் அரசியல் வாதிகள் அறிக்கை விடலாம்😃:(

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இன்று ரணில் செய்வதை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லை.

நாட்டின் தலைவரே IMF இன் சொல் கேட்டு ஆடும் நிலையில் மக்கள் எம்மாத்திரம்?

ஆனால் நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமானவர்களை நீதிமன்றம் அறிவித்தும் ஒன்றும் செய்யாது உள்ளார்.

ரணில் உகாண்டாவில் என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. ஆபிரிக்க நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் தான் உதவி செய்வதாக கூறி இருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் செங்களடலுக்கு போர் கப்பலை அனுப்புகிறார்.

நீங்கள்தான் திருந்த வில்லை. நாங்கள் வளமாக இருக்கினறோம். IMF எத்தனையோ நாடுகள் கடன் வாங்குகின்றன. ஸ்ரீ லங்கா வாங்குவது மட்டும் எப்படி பிழையாக இருக்க முடியும். நீங்களே கூறினீர்கள் பணம் கொடுப்பவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டுமென்று. அப்போது IMF சொல்வதை கேட்க கூடாதா?
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

ரணில் உகாண்டாவில் என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. ஆபிரிக்க நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் தான் உதவி செய்வதாக கூறி இருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் செங்களடலுக்கு போர் கப்பலை அனுப்புகிறார்.

நீங்கள்தான் திருந்த வில்லை. நாங்கள் வளமாக இருக்கினறோம். IMF எத்தனையோ நாடுகள் கடன் வாங்குகின்றன. ஸ்ரீ லங்கா வாங்குவது மட்டும் எப்படி பிழையாக இருக்க முடியும். நீங்களே கூறினீர்கள் பணம் கொடுப்பவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டுமென்று. அப்போது IMF சொல்வதை கேட்க கூடாதா?
 

மகிழ்ச்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.