Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நேற்று முழுதும் இதனை எப்படி இளையராஜா தாங்கப் போகின்றார் எனும் ஏக்கமே மனசில் நிறைந்து இருந்தது. தன் இசையால் பல இலட்சக்கணக்கானவர்களின் மனசை, வாழ்வை ரம்மியமாக்கிய இளையராஜாவின் இசையின் ஆன்மா இதனால் எந்தளவுக்கு காயப்பட்டு இருக்கும் என நினைக்கவே கவலையாக இருக்கின்றது. இந்த வயதில் அவரால் தாங்கக் கூடிய இழப்பாகவா இது இருக்கப் போகின்றது..

யோசித்துப் பார்த்தால், எங்கள் வாழ்வை, அதன் அர்த்தத்தை அப்படியே மாற்றக் கூடிய நிகழ்வு ஒன்று எத்தனை வயதிலும் எமக்கு நேரலாம் எனும் உண்மை தான் நெஞ்சில் அறைகின்றது.

சுவர்ணலதாவுக்கு அடுத்ததாக வாழ்வை அதன் முழுமையை அண்மிக்க முதலே பவதாரிணியும் காலமாகி விட்டார். இரண்டு இசைக் குயில்களின் வாழ்வையும் காலம் அவகாசம் கொடுக்காமல் தின்று தீர்த்து விட்டது.

கண்ணீர் அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

spacer.png

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர்,காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான பொதுமக்களும் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பவதாரிணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.((15)

 

http://www.samakalam.com/பாடகி-பவதாரிணி-உடல்-சொந்/

  • கருத்துக்கள உறவுகள்

baatharani.jpg?resize=600,375&ssl=1

பாடகி பவதாரணியின் உடல் நல்லடக்கம்.

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் தற்போது தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

தற்போது இவரது உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் அவரது மனைவியான ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது இறுதி சடங்கானது இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடிய பிறகே ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1367326

###################      #################    ################

spacer.png

 

#################     ##############   #################

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
May be an image of 3 people
 
 
 
“பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும்.
“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.