Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-65cd981c76f10-600x375.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்  என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இன்னிலையில் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371513

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைந்த இந்திய தரப்பு அமரர் ராஜீவ் பிறந்த தினம் வரை பொறுத்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதாக நினவுள்ளது.

21 minutes ago, satan said:

சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.

சிங்களமே ஒரு கட்டத்தில் களைத்துப்போய் எமது உரிமைகளை தந்தாலும் அதை தட்டிப்பறிக்கும் சகுனி இந்தியாவும், அவர்களிடமே பெற்ற உரிமைகளை திருப்பிக்கொடுத்து விசுவாசம் காட்டி இந்தியாவுக்கு சேவகம் செய்ய காத்திருக்கும்  வக்கற்ற தலைமைகளையும் கொண்ட நாம் அதிகாரம் என்றெல்லாம் கனவு காணக்கூடாது என்பதே எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன

இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை. 

கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும்,  இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில் இந்த செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள். 

Edited by P.S.பிரபா
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பதற்கு முன்பே சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்? - தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Published By: RAJEEBAN    29 FEB, 2024 | 02:55 PM

image

சாந்தனை அவர் இறப்பதற்கு முன்பே இலங்கைக்கு ஏன் அனுப்பவில்லை என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த 22ஆம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஜனவரி 24ஆம் தேதி முதலே சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

https://www.virakesari.lk/article/177595

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாக கூறினார்

அட பாவிகளா 14 மாதமா பணிகள் நடக்குதா?

எஞ்சியுள்ளவர்களை என்ன செய்யலாம் என்று திட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 00:58, satan said:

சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

அண்ண‌ன் சீமான் 2009க‌ளில் ம‌ற்றும் 2010க‌ளில் அதிக‌ம் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்...........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இவ‌ர்க‌ள் எந்த‌ சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம் என்று ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து..........ஜெய‌ல‌லிதா கால‌த்தில் காங்கிர‌ஸ் ஆட்சியின் போது இவர்க‌ளுக்கு தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ அதை க‌டுமையா த‌டுத்து நிறுத்திய‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி

செங்கொடியும் இவ‌ர்க‌ளின் தூக்கை க‌ண்டித்து த‌ன‌க்கு தானே தீய‌ மூட்டின‌வா

அண்ண‌ன் சீமான் அப்போது சொன்ன‌து எங்க‌ள் பின‌த்தை க‌ட‌ந்து தான் இவ‌ர்க‌ளை தூக்கிலிட‌ முடியும் என்று............த‌மிழ் நாட்டில் எதிர்ப்பு கில‌ம்ப‌ தூக்கு த‌ண்ட‌ன‌ய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை...............அக‌திக‌ல் முகாமில் சாந்த‌ன் அண்ணாவை த‌ங்க‌ வைச்ச‌ போது அண்ண‌ன் சீமான் ப‌ல‌ முறை ச‌ந்திக்க‌ கேட்டும் இப்ப‌ இருக்கும் அர‌சால் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அத‌னால் சீமான் அண்ணாவாள் நேரில் சாந்த‌னை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........சாந்த‌ன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்🙏.....................

நீங்க‌ள் சொல்வ‌து பொய் இவ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ் நாட்டில் யாரும் குர‌ல் கொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து.............க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை திரும்பி பாருங்கோ இவ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ம் யார் குர‌ல் கொடுத்த‌து என்று................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 00:58, satan said:

சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

Screenshot-20240301-192635-Chrome.jpg

இதை எல்லாம் த‌மிழ் நாட்டில் முன் நின்று செய்த‌து யார் என்று பாருங்கோ...........ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ சிறைச்சாலையில் சாந்த‌ன் அண்ணா கூட‌ அதிக‌ம் க‌தைச்ச‌து ப‌ழ‌கின‌து அண்ண‌ன் சீமான் தான்...............அண்ண‌ன் சாந்த‌னின் ம‌ர‌ண‌த்தில் ப‌ல‌ ம‌ர்ம‌ம் இருக்கு எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்😥...................

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2024 at 00:30, P.S.பிரபா said:

இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை

இப்படி இன்னமும் ஆட்கள் இருக்கிறார்களா? ஓ, தமிழரசுக் கட்சியைச் சொல்கிறீர்களா? உண்மைதான். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் புதுவருடத்திற்கும் தீர்வு வரப்போவதாகச் சொல்லும் ஆட்கள் தானே??
 

 

On 1/3/2024 at 00:30, P.S.பிரபா said:

கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும்,  இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில்

ஏனோ யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிகரன் இசைநிகழ்ச்சியும், சிட்னியில் நடக்கவிருக்கும் அனிருத்தின் இசைநிகழ்ச்சியும் மனதில் வந்து தொலைக்கிறது. 

காங்கிரஸ் உதவியுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தீம்காவே இக்கொலையை நடத்தியதாக நான் உணர்கிறேன். ரஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று புலிகளையும், ஒன்றரை இலட்சம் தமிழர்களையும் அழித்த காங்கிரஸ் , இறுதியாக தமிழ்நாட்டுச் சிறையில் இருந்த சாந்தனையும் கொன்றுவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் 2009க‌ளில் ம‌ற்றும் 2010க‌ளில் அதிக‌ம் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்...........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இவ‌ர்க‌ள் எந்த‌ சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம் என்று ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து..........ஜெய‌ல‌லிதா கால‌த்தில் காங்கிர‌ஸ் ஆட்சியின் போது இவர்க‌ளுக்கு தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ அதை க‌டுமையா த‌டுத்து நிறுத்திய‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி

செங்கொடியும் இவ‌ர்க‌ளின் தூக்கை க‌ண்டித்து த‌ன‌க்கு தானே தீய‌ மூட்டின‌வா

அண்ண‌ன் சீமான் அப்போது சொன்ன‌து எங்க‌ள் பின‌த்தை க‌ட‌ந்து தான் இவ‌ர்க‌ளை தூக்கிலிட‌ முடியும் என்று............த‌மிழ் நாட்டில் எதிர்ப்பு கில‌ம்ப‌ தூக்கு த‌ண்ட‌ன‌ய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை...............அக‌திக‌ல் முகாமில் சாந்த‌ன் அண்ணாவை த‌ங்க‌ வைச்ச‌ போது அண்ண‌ன் சீமான் ப‌ல‌ முறை ச‌ந்திக்க‌ கேட்டும் இப்ப‌ இருக்கும் அர‌சால் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அத‌னால் சீமான் அண்ணாவாள் நேரில் சாந்த‌னை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........சாந்த‌ன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்🙏.....................

நீங்க‌ள் சொல்வ‌து பொய் இவ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ் நாட்டில் யாரும் குர‌ல் கொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து.............க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை திரும்பி பாருங்கோ இவ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ம் யார் குர‌ல் கொடுத்த‌து என்று................

 

On 28/2/2024 at 17:05, தமிழ் சிறி said:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

On 28/2/2024 at 17:05, தமிழ் சிறி said:

சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்  என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

முப்பத்தியிரண்டு ஆண்டுகளின் பின்  கிடைத்த விடுதலையை, சிறை வாசத்தை இன்னொரு சிறப்பு முகாமில் கழித்து தன் வாழ்நாள் இறுதி ஆசை நிறைவேறாமலே இந்த உலகை அயல் மண்ணில், உறவுகளற்ற நிலையில் வாழ்ந்து முடித்துவிட்டார் சாந்தன். தமக்கு விடுதலை கிடைக்காதா, உறவுகளை பார்க்க மாட்டோமாஎனும் ஏக்கத்தோடு காத்து   இருப்பவர்களையாவது தங்கள் சொந்த மண்ணில் சொந்த உறவுகளோடு இருக்கும் சொற்ப காலத்தையாவது கழிக்க தமிழக அரசியல்வாதிகள், உறவுகள் முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2024 at 04:10, ஈழப்பிரியன் said:

அட பாவிகளா 14 மாதமா பணிகள் நடக்குதா?

எஞ்சியுள்ளவர்களை என்ன செய்யலாம் என்று திட்டம்?

 

50 minutes ago, ரஞ்சித் said:

ரஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று புலிகளையும், ஒன்றரை இலட்சம் தமிழர்களையும் அழித்த காங்கிரஸ் , இறுதியாக தமிழ்நாட்டுச் சிறையில் இருந்த சாந்தனையும் கொன்றுவிட்டது. 

தனது நலனுக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக, குற்றமேதும் செய்யாத  தமிழரை ராஜீவ் காந்தியின் கொலையுடன் பயன்படுத்திக்கொல்கிறது இந்தியா. இது தொடரும் ....... 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

இப்படி இன்னமும் ஆட்கள் இருக்கிறார்களா? ஓ, தமிழரசுக் கட்சியைச் சொல்கிறீர்களா? உண்மைதான். 

அவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன். 

இவர்களை நம்பி ஒருதரம் வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள், ஒன்றும் நடக்கவில்லை. இரண்டாம் முறையும் செய்தார்கள் அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி தங்களது சந்ததிக்கு செல்வம் சேர்த்ததுதான் நடக்கிறது. இப்படி இவர்கள் தங்களுக்கு நன்மையோ அல்லது எம் இனத்திற்காக நன்மை செய்யவில்லை எனத் தெரிந்தும் வாக்குகளைப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.