Jump to content

தோற்கும் விளையாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தோற்கும் விளையாட்டு
------------------------------------
விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். 
 
சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். 
 
குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது.
 
சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது.
 
ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள்  என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். 
 
இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள்.
 
விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது.
 
குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது.
 
ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது.
 
பந்தயங்களின் உலக தலைநகரான  லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே.
 
ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை

2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன்.

சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள்.

நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ்.

இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன்.

சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள்.

நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ்.

இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.

கோடை நாட்களில் நடுராத்திரியிலும் அதே அனல் காற்று அங்கே வீசும். குளிர் காலங்களில் அளவில்லா குளிர். அந்தக் கொடுமையில் உள்ளேயே இருந்து, கொண்டு வந்த காசு எல்லாவற்றையும் அங்கிருக்கும் மேசை விளையாட்டுகளிலோ அல்லது இயந்திரங்களில் இழந்து விட்டு வீடு திரும்ப வேண்டியது தான்.
 
முன்னர் பொதுவாக பார்க்கிங் இலவசம். உணவும் மிக மலிவு. ஆனால் இப்போது அங்கே பெரும்பாலான இடங்களில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்துவிட்டனர்.
 
ஒவ்வொரு வியாழன் இரவும் அங்கு போய், ஞாயிறு இரவு திரும்பி வருபவர்களும் உண்டு. எம்மக்களில், எனக்குத் தெரிந்த வரை, அப்படியானவர்கள் எவரும் இல்லை.   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கணனி யுகம்.....எல்லாவற்றிலும் கணனி உட்புகுந்து விட்டது....... சாதாரணமானவர்களினால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.....ஏதோ பேருக்கு ஒரிருவருக்கு கிடைக்கும் ......அவ்வளவுதான்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை விட இலங்கை நன்று போல இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

அமெரிக்காவை விட இலங்கை நன்று போல இருக்கிறது 

காலநிலையை சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களை விட இலங்கையின் காலநிலை வருடம் முழுவதும்  சிறந்தது.
 
லாஸ் வேகாஸ் பற்றி சொல்கிறீர்கள் என்றால், அதன் இன்னொரு பெயரே Sin City. பெயரிலேயே எல்லாம் அடங்கிவிட்டது......😀
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:
காலநிலையை சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களை விட இலங்கையின் காலநிலை வருடம் முழுவதும்  சிறந்தது.
 
லாஸ் வேகாஸ் பற்றி சொல்கிறீர்கள் என்றால், அதன் இன்னொரு பெயரே Sin City. பெயரிலேயே எல்லாம் அடங்கிவிட்டது......😀

நன்றிகள் பல. .   தொடர்ந்தும் எழுதுங்கள் வாசிக்கின்றேன் 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அவுஸ்ரேலியா நாட்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைசாலிக‌ள்.............கிரிக்கேட்டில் ம‌க‌ளிர் கிரிக்கேட் அணியும் ஆண்க‌ள் கிரிக்கேட் அணியும் ச‌ரி ச‌ம‌ம்.............ம‌க‌ளிர் அணி அதிக‌ முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌து என்றால் அது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி

அதே போல் ஆண்க‌ள் கிரிக்கேட்டை எடுத்து கொண்டால் அவ‌ர்க‌ள் எல்லா கோப்பையும் கிரிக்கேட்டில் தூக்கி விட்டின‌ம்.........50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அதிக‌ முறை வென்ற‌ பெருமை அவுஸ்ரேலியாவுக்கு

Rugby League விளையாட்டில் அவுஸ்ரேலிய‌ தான்...... இன்னும் ப‌ல‌ விளையாட்டில் அவுஸ்ரேலியாவீன் ஆதிக்க‌ம் இருக்கு................

Bet365  உல‌கில் மிகப் பெரிய‌ சூதாட்ட‌ த‌ள‌ம்..........இது உல‌க‌ அள‌வில் எல்லா நாட்டிலும் இருக்குது.............பேர் ஆசை பெரும் நஷ்ட‌ம்...............சூதாட்ட‌ம் ந‌ல்ல‌ ம‌னித‌ர‌ கூட‌ ம‌ன‌நோயாளி ஆக்கி விடும்................

வெளி நாட்ட‌வ‌ர் ப‌ல‌ர் திரும‌ண‌ம் செய்து உந்த‌ சூதாட்ட‌த்துக்கை போய் காசை இழ‌ந்து விவ‌கார‌த்து செய்து போட்டு இருக்கின‌ம்.................சூதாட்ட‌த்தை விட்டு எவ‌ள‌வு தூர‌ம் த‌ள்ளி நிக்க முடியுமோ அவ‌ள‌வு தூர‌ம் த‌ள்ளி நின்றால் ம‌னித‌ வாழ்க்கை ந‌ல்ல‌ ப‌டியா இருக்கும்...............

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு................................................

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை  செய்யலாம்
    • எதிரிகள் ஒற்றுமையானதின் உள்நோக்கம்...இரு எதிர்களும் முதலாளிகள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க .. இந்த ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்து சோசலிச சித்தாந்தத்தை சிறிலங்காவில் நிலைநாட்ட நினைத்தால் இந்த எதிரிகளுடன் சேர்ந்து அமேரிக்கா அண்ணனும் விட மாட்டார்... இவருடயை ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட முறையில் போராட வேறு எவரும் சிறிலங்காவில் தற்பொழுது இல்லை இவரை அமெரிக்கா இராணுவம் கொலம்பியா சென்று கொலம்பிய இராணுவத்தின் துணையுடன் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்து அங்கேயே ஒர் மைதானத்தில் புதைத்து விட்டார்கள் ....(பிராந்தியத்தில் சோசலிசம் மலர்க்கூடாது என்பதற்காக) இந்தியா இராணுவம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இவரின் தலைவரையும் ...எமது போராட்ட தலைவரையும் போராட்டத்தையும் அழித்தார்கள்...(ஆசியா பிரராந்தியத்திலும் இது நடக்ககூடாது என இந்தியா முழு மூச்சாக செயல் படும் ...அமெரிக்கா கை கொடுக்கும்)
    • ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான். இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான். 
    • குத்துவிளக்கின்ர மெல்லிய வெளிச்சம் தரும் அருமை தெரியாத பாவியா நீங்கள்?  கந்தையருக்கு எப்ப பாத்தாலும் அந்த நினைப்புதான்  😂  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.