Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு

Screenshot-2024-05-04-at-10.36.24%E2%80%

தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில்  தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=275707

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரை கொன்றதற்காக  வருந்தும்   நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு  வரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

தேசியத் தலைவரை கொன்றதற்காக  வருந்தும்   நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு  வரும். 

தேசியத்தலைவர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தை விட  சிங்களத்துடன் போரிடலாம் அல்லது பேசலாம் என்ற நோக்கம் இருந்திருந்தது போல் பல இடங்களில் ஊகித்துக்கொண்டேன். சில வேளை என் ஊகம் பிழையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

தேசியத்தலைவர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தை விட  சிங்களத்துடன் போரிடலாம் அல்லது பேசலாம் என்ற நோக்கம் இருந்திருந்தது போல் பல இடங்களில் ஊகித்துக்கொண்டேன். சில வேளை என் ஊகம் பிழையாகவும் இருக்கலாம்.

சிங்களம் ஒருபோதும் நேர்மையாக சிந்தித்ததில்லை. தந்திரமாகத்தான் சிந்தித்தது. நாங்களும் தந்திரமாக நடந்துகொண்டிருக்கவில்லை. 

இலங்கைத் தரைவழித் தொடர்பை எப்போது இந்தியா  ஏற்படுத்துகிறதோ அப்போதிருந்து இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிடும். 

இந்தியக் கழிவுகள் இலங்கையை நிரப்பத் தொடங்கும். இது ஒட்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியானகதைதான்.

அப்போது பிரபாகரனின் அருமையை சிங்களம் புரிந்துகொள்ளும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

தேசியத் தலைவரை கொன்றதற்காக  வருந்தும்   நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு  வரும். 

பேராண்டி நீங்களும் ஒருவரின் பல அவதாரங்களில் ஒன்று என்று நினைத்தேன் ஆனாலும் உங்களின் முன்னைய கருத்துக்கும் தற்போதைய கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு பேராண்டி எப்படி ஓவர்  நைட்டில்  இப்படி கொள்கை மாற்றம் ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

பேராண்டி நீங்களும் ஒருவரின் பல அவதாரங்களில் ஒன்று என்று நினைத்தேன் ஆனாலும் உங்களின் முன்னைய கருத்துக்கும் தற்போதைய கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு பேராண்டி எப்படி ஓவர்  நைட்டில்  இப்படி கொள்கை மாற்றம் ?

ஒருவரை ஒருவர்  புரிந்துகொள்வதில்தான் தவறு (Error) செய்கிறோம். 

நாம் எல்லோரும் ஒரே பாதையில் பயணிக்க விரும்புபவர்களே. ஆனால் அணிந்திருக்கும் கண்ணாடிக்கேற்ப ஒவ்வொருவரினது பார்வையும் வேறுபடுகிறது. 

😁

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மன்னார் கண்டுபிடிக்காத எண்ணெய் கிணறும் இந்தியாவிற்கு வித்தாச்சோ...அப்ப அங்கை என்ன மிச்சமிருக்குது....அதை சூடைக்கருவாட்டு..விலைக்கு வாங்குவம்..😁

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு கிடைக்காத்தது சிங்களத்திற்கும் கிடைக்கக்கூடாது… இத்தியா இலங்கை பூராவும் அகலக்கால்பதித்து சிங்களமும் இந்தியனும் அடிபண வேண்டும், அதைநான் பார்த்து மகிழ வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.